ETV Bharat / state

இந்தியா கூட்டணி உடைய உதயநிதியின் பேச்சு தான் காரணம்: தென்காசியில் சிவராஜ் சிங் சவுகான் கருத்து!

Shivraj Singh Chouhan: இந்தியா கூட்டணியில் ஏற்பட்டுள்ள சலசலப்பு மற்றும் பிரச்சனைகளுக்கு உதயநிதியின் சனாதன தர்மம் குறித்த பேச்சு தான் காரணம் என தான் நினைப்பதாக மத்தியபிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கருத்து தெரிவித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2024, 4:05 PM IST

Updated : Jan 26, 2024, 2:39 PM IST

Etv Bharat
Etv Bharat

தென்காசி: மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தென்காசியில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக வந்தடைந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோயிலுக்கு சென்றேன். அந்த கோயில் இந்தியாவின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டானது.

வடக்கே எப்படி காசியோ அதேபோல் தெற்கே தென்காசி. அந்த கோயிலானது மிகவும் பழமையான ஒன்று. கோயிலின் பராமரிப்புக்காக செய்யப்படும் தூய்மைப் பணிகள் குறித்து தனக்குள் சில கேள்விகள் எழுந்தது. கோயிலின் பணம் எல்லாம் அரசுக்கு செல்கிறது. ஆனால் கோயிலின் பாதுகாப்பு மேம்பாட்டுக்கு என எதுவும் செய்வதாக தெரியவில்லை. இந்த கோயிலின் நிலை தமிழகத்தில் உள்ள அனைத்து கோயிலின் நிலையையும் காட்டுகிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை டெங்கு மலேரியாவுடன் ஒப்பிட்டு பேசினார். திருமணம் உள்ளிட்ட அனைத்து சடங்குகளும் சனாதனமே. சனாதனத்தை எதிர்க்கும் அரசு வீழுமே தவிர சனாதனத்தை வீழ்த்த முடியாது. உலகம் முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி மீது அதீத அன்பு வைத்துள்ளனர். அதிலும் தமிழக மக்கள் அதிக அன்பு வைத்துள்ளனர். மோடி செல்லும் இடங்களில் எல்லாம் தமிழை உயர்த்தும் விதமாக பேசி வருகிறார். குறிப்பாக ஜக்கிய நாடு சபையில் தமிழை உயர்த்தி பேசினார் மோடி.

வசுதேவ குடும்பம் முதல் உலகத்தில் அனைவரும் ஒன்றே என்பதை தமிழே எடுத்துரைத்தது அதனை மோடி வெளிக்கொண்டு வந்தார். காசி தமிழ் சங்கமம் செளராஷ்டிரா தமிழ் சங்கமம் என தொடர்பை ஏற்படுத்தியது மோடி அரசு. புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தமிழகத்தின் செங்கோல் நிறுவப்பட்டது பெருமையானது.

தமிழகத்தில் தென்காசி உட்பட 25க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இந்தியா கூட்டணி நிலையற்றது என ஏற்கனவே கூறி வருகிறோம். உருவாவதற்கு முன்பே உடைந்து வருகிறது. இதற்கு சனாதன பேச்சு தான் காரணம் என நான் நினைக்கிறேன். தமிழகத்தில் பாஜக கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவெடுக்கும்.

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு சேவை செய்து வருகிறார். திமுக போல் அல்ல. மொட்ரோ ரயில் உள்ளிட்ட அனைத்து தட்டங்களையும் மோடி செயல்படுத்தி வருகிறார். மேலும், ராமர் கோயிலை பொருத்தவரை 500 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த வெற்றி. இதனை மக்கள் தீபாவளியாக கொண்டாடினர் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விரைவில் அரசியல் கட்சி தொடங்கும் விஜய்? - ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன?

தென்காசி: மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தென்காசியில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக வந்தடைந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோயிலுக்கு சென்றேன். அந்த கோயில் இந்தியாவின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டானது.

வடக்கே எப்படி காசியோ அதேபோல் தெற்கே தென்காசி. அந்த கோயிலானது மிகவும் பழமையான ஒன்று. கோயிலின் பராமரிப்புக்காக செய்யப்படும் தூய்மைப் பணிகள் குறித்து தனக்குள் சில கேள்விகள் எழுந்தது. கோயிலின் பணம் எல்லாம் அரசுக்கு செல்கிறது. ஆனால் கோயிலின் பாதுகாப்பு மேம்பாட்டுக்கு என எதுவும் செய்வதாக தெரியவில்லை. இந்த கோயிலின் நிலை தமிழகத்தில் உள்ள அனைத்து கோயிலின் நிலையையும் காட்டுகிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை டெங்கு மலேரியாவுடன் ஒப்பிட்டு பேசினார். திருமணம் உள்ளிட்ட அனைத்து சடங்குகளும் சனாதனமே. சனாதனத்தை எதிர்க்கும் அரசு வீழுமே தவிர சனாதனத்தை வீழ்த்த முடியாது. உலகம் முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி மீது அதீத அன்பு வைத்துள்ளனர். அதிலும் தமிழக மக்கள் அதிக அன்பு வைத்துள்ளனர். மோடி செல்லும் இடங்களில் எல்லாம் தமிழை உயர்த்தும் விதமாக பேசி வருகிறார். குறிப்பாக ஜக்கிய நாடு சபையில் தமிழை உயர்த்தி பேசினார் மோடி.

வசுதேவ குடும்பம் முதல் உலகத்தில் அனைவரும் ஒன்றே என்பதை தமிழே எடுத்துரைத்தது அதனை மோடி வெளிக்கொண்டு வந்தார். காசி தமிழ் சங்கமம் செளராஷ்டிரா தமிழ் சங்கமம் என தொடர்பை ஏற்படுத்தியது மோடி அரசு. புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தமிழகத்தின் செங்கோல் நிறுவப்பட்டது பெருமையானது.

தமிழகத்தில் தென்காசி உட்பட 25க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இந்தியா கூட்டணி நிலையற்றது என ஏற்கனவே கூறி வருகிறோம். உருவாவதற்கு முன்பே உடைந்து வருகிறது. இதற்கு சனாதன பேச்சு தான் காரணம் என நான் நினைக்கிறேன். தமிழகத்தில் பாஜக கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவெடுக்கும்.

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு சேவை செய்து வருகிறார். திமுக போல் அல்ல. மொட்ரோ ரயில் உள்ளிட்ட அனைத்து தட்டங்களையும் மோடி செயல்படுத்தி வருகிறார். மேலும், ராமர் கோயிலை பொருத்தவரை 500 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த வெற்றி. இதனை மக்கள் தீபாவளியாக கொண்டாடினர் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விரைவில் அரசியல் கட்சி தொடங்கும் விஜய்? - ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன?

Last Updated : Jan 26, 2024, 2:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.