சேலம் அருகே கோர விபத்து: குழந்தைகள் உட்பட 5 பேர் பலி! - salem accident - SALEM ACCIDENT
SALEM ACCIDENT: சேலம் அடுத்த சுக்கம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Published : Jun 12, 2024, 2:06 PM IST
சேலம்: சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள பூவனூர் பகுதியில் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் தனது மனைவி வேதவள்ளியுடன் இருசக்கர வாகனத்தில் உறவினர் திருமணத்திற்கு இன்று சென்றுள்ளார். இரு சக்கர வாகனம் சுக்கம்பட்டி அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரி வேகத்தை இருப்பதால் லாரியின் வேகத்தை ஓட்டுநர் குறைத்துள்ளார்.
அப்போது பின்னால் வந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் லாரியின் பின்புறம் நின்றதாக தெரிகிறது. அந்த நேரத்தில் பின்னால், சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து இரண்டு இரு சக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியுள்ளது.
இதில் மூன்று வயது குழந்தை உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் வேதவல்லியின் கணவர் லட்சுமணன் பலத்த காயங்களுடன் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், பேருந்தில் பயணம் செய்த பத்திற்கும் மேற்பட்டோருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வீராணம் காவல் நிலைய போலீசார் உயிரிழந்தவர்களின் சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக சேலம்-அரூர் சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சாரைப் பாம்பை பிடித்து, தோல் உரித்து, சமைத்து சாப்பிட்டவர் கைது!