ETV Bharat / state

ஐஐடியில் படிக்க தேர்வான தினக்கூலி தாயின் மகள்..! நூறுநாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் தாய்! - TN STUDENT SELECT IIT MANDI

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 2, 2024, 7:12 PM IST

IIT Mandi: திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 100 நாள் திட்டத்தில் வேலை பார்க்கும் பெண்ணின் மகள் ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஐஐடி மண்டியில் படிக்க தேர்வாகியுள்ளார். இவரது கல்விக்கான முழுச் செலவையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ள உள்ளது.

ஐஐடி மண்டியில் தேர்வாகியுள்ள மாணவி கெளசிகா
ஐஐடி மண்டியில் தேர்வாகியுள்ள மாணவி கெளசிகா (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று, பள்ளிக் கல்வித் துறை சார்பில், முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குக் கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளைப் பாராட்டிச் சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு படிக்க செல்லும் மாணவர்களிடம் ஈடிவி பாரத் தமிழ் நடத்திய சிறப்பு நேர்காணலில் தங்களின் அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டனர். அதில், தனது மகளை படிக்க வைக்க வேண்டாம் என்று கூறியவர்களுக்கு மத்தியில், 100 நாள் வேலை செய்து அரசுப் பள்ளியில் படிக்க வைத்து, அரசின் நிதியுதவியுடன் தனது மகள் மண்டி ஐஐடியில் படிக்கச் செல்வது மிகவும் பெருமையாக இருப்பதாக தாய் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஐடி மண்டியில் வாய்ப்பு கிடைத்துள்ள மாணவி கௌசிகா கூறுகையில், “ திருவள்ளூர், ஆலத்தூர் என்ற சிறிய கிராமத்தில் 10 ஆம் வகுப்பு படித்து பள்ளியில் 2 வது இடம் பெற்றதால் அரசு மாதிரி பள்ளியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஜேஇஇ தேர்வில் ஆர்வம் வருவதற்கு ஆசிரியர்கள் காரணம். ரேஷன் அரசி சாப்பிட்டுக் கொண்டு இருந்த எங்களுக்கு, நல்ல சாப்பாடு மற்றும் தங்குவதற்கு இடவசதி அளித்து படித்தால் போதும் என்று கூறியது தமிழக அரசு.

எனது அம்மா 100 நாள் வேலைக்கு சென்று தான் எனக்கு சாப்பாடு போட்டு வளர்த்தார். என்னை படிக்க வேண்டுமென எனது அம்மா ஊக்கப்படுத்தினார். ஊரில் உள்ளவர்கள் பெண்ணை ஏன் படிக்க வைக்கிறாய், திருமணம் செய்து கொடு என்றார்கள். ஆனால், எனது அம்மா அதையெல்லாம் கேட்கவில்லை. தன்னை படிக்க வைப்பதில் உறுதியாக இருந்தார்.

ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஐடி மண்டியில் சேர்ந்துள்ளேன். திருவள்ளுர் மாவட்டத்தை தாண்டாத என்னை தமிழ்நாட்டை தாண்டி, இந்தியாவின் எல்லையான மண்டியில் இமயமலை பார்ப்பதற்கான வாய்ப்புகளை கொடுத்து படிக்க வைத்த தமிழக அரசுக்கு நன்றி” இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து கெளசிகாவின் தாய் மணிமேகலை கூறியதாவது, “தனது மகள் படிக்கச் செல்வது மிகவும் பெருமையாக இருக்கிறது. முதலமைச்சர் எனது மகளுக்கு லேப்டாப் கொடுத்துள்ளார். எனது குழந்தையை லட்சக்கணக்கில் வெளியூருக்கு அனுப்பி படிக்க வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. எனது மகளைப் பெற்றதற்கு பெருமைப்படுகிறேன. 100 நாள் வேலைக்கு சென்று நான் கஷ்டப்பட்டதை போல் எனது குழந்தை கஷ்டப்படக்கூடாது என்பதற்காக படிக்க வைத்தேன்” இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, மண்டி ஐஐடியில் தேர்வான திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த ஸ்ரீஹரி கூறுகையில், “ஜேஇஇ தேர்வில் பெற்ற மதிப்பெண்களை வைத்து தேர்வு செய்தனர். இந்தத் தேர்வினை எழுதுவதற்கு பள்ளியில் நன்றாக பயிற்சி அளித்தனர், தமிழ்நாடு அரசின் உதவியால் மண்டியில் உள்ள ஐஐடியில் படிக்க செல்வது மகிழ்ச்சியாக உள்ளது. மண்டியில் சென்று படிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

இதனையடுத்து, ஹைதராபாத்தில் உள்ள ஐஐடியில் தேர்வான திருப்பூரைச் சேர்ந்த இளையமுதன் கூறுகையில், “ஜேஇஇ முதன்மைத் தேர்வு எழுதுவதற்கு பள்ளியில் பயிற்சி அளித்தனர். ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு எழுதுவதற்கு சென்னையில் பயிற்சி அளித்தனர். ஹைதராபாத்தில் உள்ள ஐஐடியில் ஓராண்டு படித்த பின்னர், சென்னை ஐஐடியில் கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பினை நன்றாக பயன்படுத்துவேன்” என தெரிவித்தார்.

திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்தகுரு பிரசாத் கூறுகையில், “ இந்திய கடல் சார் பல்கலைக் கழகத்திற்கான தேர்வினை எழுதி அதில் தேர்ச்சி பெற்றுள்ளேன். மரைன் இன்ஜினியரிங் தேர்வு செய்ததற்கு கப்பலில் வேலை பார்ப்பதும், நிறைய இடங்களுக்கு சென்று பார்க்க முடியும் என்ற ஆர்வத்தால் தேர்வு செய்தேன்” இவ்வாறு அவர் கூறினார்.

மலேசியா சென்று படிக்கவுள்ள திருவண்ணாமலையை சேர்ந்த வினிதா கூறுகையில், “மலேசியாவில் உள்ள அல்புகர்க் இன்டர்நேஷனல் பல்கலைக்கழகத்தில் பேச்சுலர் ஆஃப் சோஷியல் டெவலப்மென்ட்(Bachelor of Social development) படிக்க உள்ளேன்.மலேசியா பல்கலைக் கழகத்திற்கு நேர்காணல் மூலம் நான் தேர்வாகியுள்ளேன். எனது தந்தை ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். சமுதாயத்திற்கு சேவை செய்ய பயனுள்ளதாக இந்த படிப்பு இருக்கும் என்று தேர்வு செய்தேன்” இவ்வாறு அவர் கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் இருந்து சென்னையில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தில் படிக்க தேர்வாகியுள்ள திவ்யா கூறுகையில், “ எங்கள் வீட்டில் முதல் பட்டதாரியாக நான் படிக்க உள்ளேன். எனது படிப்பிற்கு அரசு முழு செலவையும் ஏற்றுக்கொண்டு என்னை படிக்க வைக்கிறது” என்றார்.

திருச்சி தேசிய சட்டக் கல்லூரியில் சேர்ந்து சென்னை மாங்காடு மாற்றுத்திறனாளி மாணவர் கிஷோர் கூறுகையில், “ சிறு வயதில் இருந்து சட்டம் படிக்க வேண்டிய என்ற எண்ணம் இருந்தது. கிளாட் தேர்வு எழுதி பெற்ற மதிப்பெண் மூலம் திருச்சி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளேன். வகுப்புகள் துவக்கப்பட்டு நன்றாக செல்கிறது. இந்த வாய்ப்பினை அளித்த முதலமைச்சருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நன்றி” இவ்வாறு அவர் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: 252 அரசுப் பள்ளிகளில் எலக்ட்ரானிக்ஸ் பயிற்சி.. சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தகவல்! - Electronic Training in Govt Schools

சென்னை: கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று, பள்ளிக் கல்வித் துறை சார்பில், முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குக் கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளைப் பாராட்டிச் சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு படிக்க செல்லும் மாணவர்களிடம் ஈடிவி பாரத் தமிழ் நடத்திய சிறப்பு நேர்காணலில் தங்களின் அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டனர். அதில், தனது மகளை படிக்க வைக்க வேண்டாம் என்று கூறியவர்களுக்கு மத்தியில், 100 நாள் வேலை செய்து அரசுப் பள்ளியில் படிக்க வைத்து, அரசின் நிதியுதவியுடன் தனது மகள் மண்டி ஐஐடியில் படிக்கச் செல்வது மிகவும் பெருமையாக இருப்பதாக தாய் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஐடி மண்டியில் வாய்ப்பு கிடைத்துள்ள மாணவி கௌசிகா கூறுகையில், “ திருவள்ளூர், ஆலத்தூர் என்ற சிறிய கிராமத்தில் 10 ஆம் வகுப்பு படித்து பள்ளியில் 2 வது இடம் பெற்றதால் அரசு மாதிரி பள்ளியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஜேஇஇ தேர்வில் ஆர்வம் வருவதற்கு ஆசிரியர்கள் காரணம். ரேஷன் அரசி சாப்பிட்டுக் கொண்டு இருந்த எங்களுக்கு, நல்ல சாப்பாடு மற்றும் தங்குவதற்கு இடவசதி அளித்து படித்தால் போதும் என்று கூறியது தமிழக அரசு.

எனது அம்மா 100 நாள் வேலைக்கு சென்று தான் எனக்கு சாப்பாடு போட்டு வளர்த்தார். என்னை படிக்க வேண்டுமென எனது அம்மா ஊக்கப்படுத்தினார். ஊரில் உள்ளவர்கள் பெண்ணை ஏன் படிக்க வைக்கிறாய், திருமணம் செய்து கொடு என்றார்கள். ஆனால், எனது அம்மா அதையெல்லாம் கேட்கவில்லை. தன்னை படிக்க வைப்பதில் உறுதியாக இருந்தார்.

ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஐடி மண்டியில் சேர்ந்துள்ளேன். திருவள்ளுர் மாவட்டத்தை தாண்டாத என்னை தமிழ்நாட்டை தாண்டி, இந்தியாவின் எல்லையான மண்டியில் இமயமலை பார்ப்பதற்கான வாய்ப்புகளை கொடுத்து படிக்க வைத்த தமிழக அரசுக்கு நன்றி” இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து கெளசிகாவின் தாய் மணிமேகலை கூறியதாவது, “தனது மகள் படிக்கச் செல்வது மிகவும் பெருமையாக இருக்கிறது. முதலமைச்சர் எனது மகளுக்கு லேப்டாப் கொடுத்துள்ளார். எனது குழந்தையை லட்சக்கணக்கில் வெளியூருக்கு அனுப்பி படிக்க வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. எனது மகளைப் பெற்றதற்கு பெருமைப்படுகிறேன. 100 நாள் வேலைக்கு சென்று நான் கஷ்டப்பட்டதை போல் எனது குழந்தை கஷ்டப்படக்கூடாது என்பதற்காக படிக்க வைத்தேன்” இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, மண்டி ஐஐடியில் தேர்வான திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த ஸ்ரீஹரி கூறுகையில், “ஜேஇஇ தேர்வில் பெற்ற மதிப்பெண்களை வைத்து தேர்வு செய்தனர். இந்தத் தேர்வினை எழுதுவதற்கு பள்ளியில் நன்றாக பயிற்சி அளித்தனர், தமிழ்நாடு அரசின் உதவியால் மண்டியில் உள்ள ஐஐடியில் படிக்க செல்வது மகிழ்ச்சியாக உள்ளது. மண்டியில் சென்று படிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

இதனையடுத்து, ஹைதராபாத்தில் உள்ள ஐஐடியில் தேர்வான திருப்பூரைச் சேர்ந்த இளையமுதன் கூறுகையில், “ஜேஇஇ முதன்மைத் தேர்வு எழுதுவதற்கு பள்ளியில் பயிற்சி அளித்தனர். ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு எழுதுவதற்கு சென்னையில் பயிற்சி அளித்தனர். ஹைதராபாத்தில் உள்ள ஐஐடியில் ஓராண்டு படித்த பின்னர், சென்னை ஐஐடியில் கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பினை நன்றாக பயன்படுத்துவேன்” என தெரிவித்தார்.

திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்தகுரு பிரசாத் கூறுகையில், “ இந்திய கடல் சார் பல்கலைக் கழகத்திற்கான தேர்வினை எழுதி அதில் தேர்ச்சி பெற்றுள்ளேன். மரைன் இன்ஜினியரிங் தேர்வு செய்ததற்கு கப்பலில் வேலை பார்ப்பதும், நிறைய இடங்களுக்கு சென்று பார்க்க முடியும் என்ற ஆர்வத்தால் தேர்வு செய்தேன்” இவ்வாறு அவர் கூறினார்.

மலேசியா சென்று படிக்கவுள்ள திருவண்ணாமலையை சேர்ந்த வினிதா கூறுகையில், “மலேசியாவில் உள்ள அல்புகர்க் இன்டர்நேஷனல் பல்கலைக்கழகத்தில் பேச்சுலர் ஆஃப் சோஷியல் டெவலப்மென்ட்(Bachelor of Social development) படிக்க உள்ளேன்.மலேசியா பல்கலைக் கழகத்திற்கு நேர்காணல் மூலம் நான் தேர்வாகியுள்ளேன். எனது தந்தை ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். சமுதாயத்திற்கு சேவை செய்ய பயனுள்ளதாக இந்த படிப்பு இருக்கும் என்று தேர்வு செய்தேன்” இவ்வாறு அவர் கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் இருந்து சென்னையில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தில் படிக்க தேர்வாகியுள்ள திவ்யா கூறுகையில், “ எங்கள் வீட்டில் முதல் பட்டதாரியாக நான் படிக்க உள்ளேன். எனது படிப்பிற்கு அரசு முழு செலவையும் ஏற்றுக்கொண்டு என்னை படிக்க வைக்கிறது” என்றார்.

திருச்சி தேசிய சட்டக் கல்லூரியில் சேர்ந்து சென்னை மாங்காடு மாற்றுத்திறனாளி மாணவர் கிஷோர் கூறுகையில், “ சிறு வயதில் இருந்து சட்டம் படிக்க வேண்டிய என்ற எண்ணம் இருந்தது. கிளாட் தேர்வு எழுதி பெற்ற மதிப்பெண் மூலம் திருச்சி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளேன். வகுப்புகள் துவக்கப்பட்டு நன்றாக செல்கிறது. இந்த வாய்ப்பினை அளித்த முதலமைச்சருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நன்றி” இவ்வாறு அவர் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: 252 அரசுப் பள்ளிகளில் எலக்ட்ரானிக்ஸ் பயிற்சி.. சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தகவல்! - Electronic Training in Govt Schools

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.