விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ஆதரவாக விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட நேமூர், ஒரத்தூர், தொரவி ஆகிய கிராமங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய திருமாவளவன், “திமுகவுடன் கூட்டணி அமைத்ததன் காரணமாகவே, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் விசிக போட்டியிட்ட சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றியை பெற முடிந்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் உரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
திமுக வெற்றிக்காக உழைக்கும் விசிக: இதற்கு விசிகவினர் என்றென்றும் நன்றிக் கடன்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஜூலை 10ஆம் தேதி நடைபெறவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை, சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அவரது வெற்றிக்காக விசிகவினர் கட்சியினர் தீவிரமாக உழைக்க வேண்டும்.
#விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அவர்களை ஆதரித்து இன்று தொரவி பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தேன். pic.twitter.com/2Tk7KuJiNJ
— Thol. Thirumavalavan (@thirumaofficial) July 4, 2024