ETV Bharat / state

நிலத்தை மீட்க வலியுறுத்தி நரிக்குறவர்கள் முற்றுகை போராட்டம்..திருமுல்லைவாயிலில் பரபரப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 1:26 PM IST

Narikuravar protest: தங்களை ஏமாற்றி நிலத்தை அபகரித்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், நிலத்தை மீட்டு மீண்டும் தங்களிடன் ஒப்படைக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு ஆய்வு செய்து பட்டா வழங்க வேண்டும்னெவும் வலியுறுத்தி திருமுல்லைவாயிலில் நரிக்குறவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிலத்தை மீட்க வலியுறுத்தி நரிக்குறவர்கள் போராட்டம்
நிலத்தை மீட்க வலியுறுத்தி நரிக்குறவர்கள் போராட்டம்

நிலத்தை மீட்க வலியுறுத்தி நரிக்குறவர்கள் போராட்டம்

சென்னை: ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், ஜெயா நகர் பகுதியில், 1.83 ஏக்கர் நில பரப்பளவில் நரிக்குறவர்கள் கடந்த 40 ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அவரது ஆட்சி காலத்தில் இந்த இடத்தை நரிக்குறவர்களுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்பகுதியில் உள்ள இவர்களது இடத்திற்கு அரசு முறையாக பட்டா வழங்கவில்லை. இதனால், வாசு என்கிற சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகிய இருவரும், இம்மக்களுக்கு பட்டா வாங்கி தருவதாகவும், வீடு கட்டி தருவதாகவும், இவர்கள் குடும்பங்களை வெளிநாட்டிற்கு அழைத்து செல்வதாகவும் ஆசைவார்த்தைகள் கூறி இவர்களிடமிருந்து இடத்தை அபகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனையடுத்து, கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக சுப்பிரமணி, அபகரித்துள்ள நிலத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைத்துள்ளார். மேலும், அப்பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்கள் தாங்களாகவே அவர்களது வீடுகளை காலி செய்யும் சூழலையும் ஏற்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக சுப்பிரமணி, அபகரித்துள்ள காலிமனையில் கோயில் கட்டுவதற்கானப் பணிகளைத் தொடங்கியுள்ளார். இதற்காக, அப்பகுதியில் வசிக்கம் நரிக்குறவர்கள் பயன்படுத்தி வந்த பாதையை மறைக்கும் விதமாக தடுப்பு வேலிகள் அமைத்து, கேட் அமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

எனவே, அப்பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள், அப்பகுதியில் கட்டப்பட்ட சுற்றுச்சுவரை இடித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. இது குறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமுல்லைவாயில் போலீசார், சம்பந்தப்பட்ட இடம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால், இவ்வாறு நடந்து கொல்லக்கூடாது என்று நரிக்குறவர் இன மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர், அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் கூறுகையில், “இப்பகுதியில், 100-க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். கடந்த ஆண்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களது பகுதியை நேரில் பார்வையிட்டு, தங்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி, மின்சார வசதி, சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளை, ஆவடி மாநகராட்சி மூலம் செய்து கொடுத்தார்.

எங்களுக்குத் தேவையான பட்டாவை தற்போது வழங்கி, 102 குடும்பங்களாக இணைந்து, மூன்று தலைமுறையாக வாழ்ந்து வருகிறோம். எனவே, தங்களை ஏமாற்றி தங்களது நிலத்தை அபகரித்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தங்கள் இடங்களை மீட்டு ஒப்படைக்க வேண்டும்” என தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட இடத்தில் வசிக்கும் தங்களுக்கு பட்டா வழங்கவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து; பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் சேதம்

நிலத்தை மீட்க வலியுறுத்தி நரிக்குறவர்கள் போராட்டம்

சென்னை: ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், ஜெயா நகர் பகுதியில், 1.83 ஏக்கர் நில பரப்பளவில் நரிக்குறவர்கள் கடந்த 40 ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அவரது ஆட்சி காலத்தில் இந்த இடத்தை நரிக்குறவர்களுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்பகுதியில் உள்ள இவர்களது இடத்திற்கு அரசு முறையாக பட்டா வழங்கவில்லை. இதனால், வாசு என்கிற சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகிய இருவரும், இம்மக்களுக்கு பட்டா வாங்கி தருவதாகவும், வீடு கட்டி தருவதாகவும், இவர்கள் குடும்பங்களை வெளிநாட்டிற்கு அழைத்து செல்வதாகவும் ஆசைவார்த்தைகள் கூறி இவர்களிடமிருந்து இடத்தை அபகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனையடுத்து, கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக சுப்பிரமணி, அபகரித்துள்ள நிலத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைத்துள்ளார். மேலும், அப்பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்கள் தாங்களாகவே அவர்களது வீடுகளை காலி செய்யும் சூழலையும் ஏற்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக சுப்பிரமணி, அபகரித்துள்ள காலிமனையில் கோயில் கட்டுவதற்கானப் பணிகளைத் தொடங்கியுள்ளார். இதற்காக, அப்பகுதியில் வசிக்கம் நரிக்குறவர்கள் பயன்படுத்தி வந்த பாதையை மறைக்கும் விதமாக தடுப்பு வேலிகள் அமைத்து, கேட் அமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

எனவே, அப்பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள், அப்பகுதியில் கட்டப்பட்ட சுற்றுச்சுவரை இடித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. இது குறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமுல்லைவாயில் போலீசார், சம்பந்தப்பட்ட இடம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால், இவ்வாறு நடந்து கொல்லக்கூடாது என்று நரிக்குறவர் இன மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர், அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் கூறுகையில், “இப்பகுதியில், 100-க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். கடந்த ஆண்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களது பகுதியை நேரில் பார்வையிட்டு, தங்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி, மின்சார வசதி, சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளை, ஆவடி மாநகராட்சி மூலம் செய்து கொடுத்தார்.

எங்களுக்குத் தேவையான பட்டாவை தற்போது வழங்கி, 102 குடும்பங்களாக இணைந்து, மூன்று தலைமுறையாக வாழ்ந்து வருகிறோம். எனவே, தங்களை ஏமாற்றி தங்களது நிலத்தை அபகரித்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தங்கள் இடங்களை மீட்டு ஒப்படைக்க வேண்டும்” என தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட இடத்தில் வசிக்கும் தங்களுக்கு பட்டா வழங்கவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து; பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் சேதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.