ETV Bharat / state

இலங்கை சிறையில் 22 தூத்துக்குடி மீனவர்கள்..உறவினர்கள் உண்ணாவிரத போராட்டம்; மத்திய, மாநில அரசுகளுக்கு கண்ணீர் கோரிக்கை - tharuvaikulam fishermen issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2024, 6:08 PM IST

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரையும் படகுகளோடு விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரி, தருவைகுளம் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மீனவர்களின் உறவினர்கள்
மீனவர்களின் உறவினர்கள் (credit - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தை சேர்ந்த மகாராஜா மற்றும் தேனிலா ஆகியோரின் இரண்டு விசைப்படகுகளில் தலா 22 மீனவர்கள் கடந்த 20ஆம் தேதி ஒரு படகிலும், 23ஆம் தேதி ஒரு படகிலும் மீன்பிடிக்க சென்றனர்.

அவர்களை விசாரணைக்கு என இலங்கை கடற்படையினர் அழைத்து பின்னர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த ( 05.08.2024) அன்று மன்னார் தெற்கு கடற்பரப்பில் வைத்து கைது செய்தனர். பின்னர், தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 22 பேரையும் (06.08.2024) புத்தளம் மாவட்டம் கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது, நீதிபதி இவோனா விமலரத்னா மீனவர்கள் 22 பேரையும் வரும் 20.08.2024ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள் 22 பேரும் வாரியாபொல சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட நிலையில், 22 மீனவர்களின் வழக்கு கடந்த 20.08.2024 புத்தளம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி விமனே விமலரத்னா, மீனவர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் 3ந் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் வாரியபொல சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து இந்த வழக்கு செப் 3ந் தேதி விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, 12 பேருக்கு தலா 1.5 கோடி ரூபாய் (இலங்கை பணம்) அபராதம் செலுத்துமாறும், செலுத்த தவறும் பட்சத்தில் 6 மாதம் சிறை தண்டனை என்றும் கூறி 10 பேருக்கு இம்மாதம் 10ம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதுகுறித்து, தருவைகுளம் கிராம மக்கள் மற்றும் கைது செய்யப்பட்ட 22 மீனவர்களின் உறவினர்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிமொழி எம்பி, மற்றும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மனுக்களை அளித்தனர்.

இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 22 மீனவர்களையும், 2 விசைப் படகுகளையும் மத்திய, மாநில அரசுகள் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வலியுறுத்தி, தூத்துக்குடி, தருவைக்குளம் கிராம மக்கள் 1,000க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த உண்ணா விரத போராட்டத்தால் தருவைகுளம் கிராமத்தில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு 250 விசைப்படகுகள் மட்டுமின்றி, 350 நாட்டுப்படகுகளும் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'ஏஞ்சல்' பட வழக்கு; உதயநிதியின் மனுவுக்கு பதிலளிக்க தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவு! - உதயநிதி ஸ்டாலின் வழக்கு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தை சேர்ந்த மகாராஜா மற்றும் தேனிலா ஆகியோரின் இரண்டு விசைப்படகுகளில் தலா 22 மீனவர்கள் கடந்த 20ஆம் தேதி ஒரு படகிலும், 23ஆம் தேதி ஒரு படகிலும் மீன்பிடிக்க சென்றனர்.

அவர்களை விசாரணைக்கு என இலங்கை கடற்படையினர் அழைத்து பின்னர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த ( 05.08.2024) அன்று மன்னார் தெற்கு கடற்பரப்பில் வைத்து கைது செய்தனர். பின்னர், தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 22 பேரையும் (06.08.2024) புத்தளம் மாவட்டம் கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது, நீதிபதி இவோனா விமலரத்னா மீனவர்கள் 22 பேரையும் வரும் 20.08.2024ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள் 22 பேரும் வாரியாபொல சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட நிலையில், 22 மீனவர்களின் வழக்கு கடந்த 20.08.2024 புத்தளம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி விமனே விமலரத்னா, மீனவர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் 3ந் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் வாரியபொல சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து இந்த வழக்கு செப் 3ந் தேதி விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, 12 பேருக்கு தலா 1.5 கோடி ரூபாய் (இலங்கை பணம்) அபராதம் செலுத்துமாறும், செலுத்த தவறும் பட்சத்தில் 6 மாதம் சிறை தண்டனை என்றும் கூறி 10 பேருக்கு இம்மாதம் 10ம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதுகுறித்து, தருவைகுளம் கிராம மக்கள் மற்றும் கைது செய்யப்பட்ட 22 மீனவர்களின் உறவினர்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிமொழி எம்பி, மற்றும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மனுக்களை அளித்தனர்.

இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 22 மீனவர்களையும், 2 விசைப் படகுகளையும் மத்திய, மாநில அரசுகள் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வலியுறுத்தி, தூத்துக்குடி, தருவைக்குளம் கிராம மக்கள் 1,000க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த உண்ணா விரத போராட்டத்தால் தருவைகுளம் கிராமத்தில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு 250 விசைப்படகுகள் மட்டுமின்றி, 350 நாட்டுப்படகுகளும் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'ஏஞ்சல்' பட வழக்கு; உதயநிதியின் மனுவுக்கு பதிலளிக்க தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவு! - உதயநிதி ஸ்டாலின் வழக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.