ETV Bharat / state

நேரடியாக ஜார்ஜ் கோட்டைக்கு செல்ல விரும்புகிறாரா விஜய்? - தவாக தலைவர் வேல்முருகன் கேள்வி!

சொந்தக் கட்சி மாநாட்டின் பந்தல்கால் நடும் விழாவிற்கு கூட வரமாட்டேன். நேரடியாக முதலமைச்சர் அரியணைக்கு தான் வருவேன் என விஜய் கூறுகிறார் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் விமர்சனம் செய்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

விஜய், வேல்முருகன்
விஜய், வேல்முருகன் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருச்சி : தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மத்திய மண்டல நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "நவம்பர் டிசம்பர் மாதங்களில் தான் அதிக மழை பெய்யும். ஆனால் தமிழகத்தில் தற்பொழுது அதிக மழை பெய்து வருகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தயாராக இருக்க வேண்டும்.

மழை அதிகம் பெய்யாத போதே தமிழகத்தில் 5 உயிர்கள் பலியாகி உள்ளது. இதை ஏற்று கொள்ள முடியாதது. சம்பந்தப்பட்ட துறைகள் சரியாக செயல்படவில்லையோ என தோன்றுகிறது. இதற்கு துறை செயலாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

வேல்முருகன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

தமிழக சிறைகளில் மூன்றாண்டுகளில் நூறு கைதிகள் பலியாகி உள்ளனர். இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். குற்றம் சுமத்தப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி தான் தண்டனை பெற்று தர வேண்டும். அவர்களை என்கவுன்டர் செய்யக் கூடாது. காவல் துறையே நீதிபதிகளாக மாறக்கூடாது.
குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது உண்மை தான். அது சட்டத்தின் துணை கொண்டு தான் இருக்க வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பு : சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் உரிய சமூக நீதி சமமாக கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் எனக்கூறி தமிழக அரசு தப்பித்து கொள்வதை ஏற்று கொள்ள முடியாது.

சாதிவாரி கணக்கெடுப்பு மாநில அரசுகள் நடத்த எந்த தடையும் இல்லை. மத்திய அரசு பதவி இடங்களில் இந்திக்காரர்கள் திணிக்கப்படுகிறார்கள். மத்திய அரசின் பணிகளில் 90 சதவீதம் மாநில மக்களுக்கு தான் பணி வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் அலுவலகங்களில் இந்திக்காரர்களை முழுவதுமாக புகுத்துவது ஜனநாயகப் படுகொலை. தமிழகத்தின் உரிமை மறுக்கப்படும் போது தமிழக அரசு மெளனமாக இருக்கிறது.

செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்கு துணை தலைவராக மருத்துவர் சுதா சேசன் நியமித்திருப்பது கண்டிக்கத்தக்கது. அவரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அந்தப் பதவியில் ஒரு மருத்துவரை நியமிப்பது தமிழகத்தில் உள்ள தமிழறிஞர்களை அவமதிப்பது போன்று தான்.

சாம்சங் நிறுவன பிரச்னை : சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாக தமிழக அரசு நிற்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை வெளிநாடு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. எத்தனை பேருக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தமிழகத்தில் இதற்கு முன்பு பல நடிகர்கள் கட்சி தொடங்கிவிட்டனர். அவர்கள் கட்சிகள் என்ன ஆனது என்பது குறித்து அனைவருக்கும் தெரியும். நடிகர் விஜய் தொடங்கி உள்ள கட்சியை குறித்து பொருத்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க : சாம்சங் தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக் கோரிய வழக்கு; நாளை மறுநாள் விசாரிப்பதாக நீதிபதி அறிவிப்பு!

விஜய் விமர்சனம் : நடிகர் விஜய் நேரடியாக செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு செல்ல நினைக்கிறார். மக்கள் பிரச்னை குறித்து விஜய்யின் கருத்து என்ன என்பது குறித்து அவரிடம் கேட்க வேண்டும். அதற்கு விஜய் தடங்கல் இல்லாமல் பதில் சொல்லட்டும்.

ஹைட்ரோ கார்பன், மீத்தேன் குறித்து நடிகர் விஜய்யின் கருத்து என்ன? முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து விஜய்யின் கருத்து என்ன? மதுவிலக்கு குறித்து விஜய்யின் கருத்து என்ன? இது போன்று நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு நடிகர் விஜய்யின் கருத்து என்ன என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

களத்திற்கு வந்து ஒரு பத்தாண்டுகள் பணியாற்றி விட்டு, அதன்பின் தனக்கு முதலமைச்சராக வாய்ப்பு கொடுங்கள் என கேட்டால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் இதை எதையும் நான் செய்ய மாட்டேன். சொந்தக் கட்சி மாநாட்டின் பந்தல்கால் நடும் விழாவிற்கு கூட வரமாட்டேன். நேரடியாக முதலமைச்சர் அரியணைக்கு தான் வருவேன் என கூறினால் தமிழக மக்கள் தான் எஜமானர்கள் அதற்குரிய பதிலை அவர்கள் தேர்தலில் அளிப்பார்கள்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

திருச்சி : தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மத்திய மண்டல நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "நவம்பர் டிசம்பர் மாதங்களில் தான் அதிக மழை பெய்யும். ஆனால் தமிழகத்தில் தற்பொழுது அதிக மழை பெய்து வருகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தயாராக இருக்க வேண்டும்.

மழை அதிகம் பெய்யாத போதே தமிழகத்தில் 5 உயிர்கள் பலியாகி உள்ளது. இதை ஏற்று கொள்ள முடியாதது. சம்பந்தப்பட்ட துறைகள் சரியாக செயல்படவில்லையோ என தோன்றுகிறது. இதற்கு துறை செயலாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

வேல்முருகன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

தமிழக சிறைகளில் மூன்றாண்டுகளில் நூறு கைதிகள் பலியாகி உள்ளனர். இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். குற்றம் சுமத்தப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி தான் தண்டனை பெற்று தர வேண்டும். அவர்களை என்கவுன்டர் செய்யக் கூடாது. காவல் துறையே நீதிபதிகளாக மாறக்கூடாது.
குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது உண்மை தான். அது சட்டத்தின் துணை கொண்டு தான் இருக்க வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பு : சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் உரிய சமூக நீதி சமமாக கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் எனக்கூறி தமிழக அரசு தப்பித்து கொள்வதை ஏற்று கொள்ள முடியாது.

சாதிவாரி கணக்கெடுப்பு மாநில அரசுகள் நடத்த எந்த தடையும் இல்லை. மத்திய அரசு பதவி இடங்களில் இந்திக்காரர்கள் திணிக்கப்படுகிறார்கள். மத்திய அரசின் பணிகளில் 90 சதவீதம் மாநில மக்களுக்கு தான் பணி வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் அலுவலகங்களில் இந்திக்காரர்களை முழுவதுமாக புகுத்துவது ஜனநாயகப் படுகொலை. தமிழகத்தின் உரிமை மறுக்கப்படும் போது தமிழக அரசு மெளனமாக இருக்கிறது.

செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்கு துணை தலைவராக மருத்துவர் சுதா சேசன் நியமித்திருப்பது கண்டிக்கத்தக்கது. அவரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அந்தப் பதவியில் ஒரு மருத்துவரை நியமிப்பது தமிழகத்தில் உள்ள தமிழறிஞர்களை அவமதிப்பது போன்று தான்.

சாம்சங் நிறுவன பிரச்னை : சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாக தமிழக அரசு நிற்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை வெளிநாடு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. எத்தனை பேருக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தமிழகத்தில் இதற்கு முன்பு பல நடிகர்கள் கட்சி தொடங்கிவிட்டனர். அவர்கள் கட்சிகள் என்ன ஆனது என்பது குறித்து அனைவருக்கும் தெரியும். நடிகர் விஜய் தொடங்கி உள்ள கட்சியை குறித்து பொருத்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க : சாம்சங் தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக் கோரிய வழக்கு; நாளை மறுநாள் விசாரிப்பதாக நீதிபதி அறிவிப்பு!

விஜய் விமர்சனம் : நடிகர் விஜய் நேரடியாக செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு செல்ல நினைக்கிறார். மக்கள் பிரச்னை குறித்து விஜய்யின் கருத்து என்ன என்பது குறித்து அவரிடம் கேட்க வேண்டும். அதற்கு விஜய் தடங்கல் இல்லாமல் பதில் சொல்லட்டும்.

ஹைட்ரோ கார்பன், மீத்தேன் குறித்து நடிகர் விஜய்யின் கருத்து என்ன? முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து விஜய்யின் கருத்து என்ன? மதுவிலக்கு குறித்து விஜய்யின் கருத்து என்ன? இது போன்று நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு நடிகர் விஜய்யின் கருத்து என்ன என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

களத்திற்கு வந்து ஒரு பத்தாண்டுகள் பணியாற்றி விட்டு, அதன்பின் தனக்கு முதலமைச்சராக வாய்ப்பு கொடுங்கள் என கேட்டால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் இதை எதையும் நான் செய்ய மாட்டேன். சொந்தக் கட்சி மாநாட்டின் பந்தல்கால் நடும் விழாவிற்கு கூட வரமாட்டேன். நேரடியாக முதலமைச்சர் அரியணைக்கு தான் வருவேன் என கூறினால் தமிழக மக்கள் தான் எஜமானர்கள் அதற்குரிய பதிலை அவர்கள் தேர்தலில் அளிப்பார்கள்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.