ETV Bharat / state

பீலா வெங்கடேசன் அளித்த புகாரில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் அதிரடி கைது! - Former DGP Rajesh das

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 24, 2024, 12:27 PM IST

Former DGP Rajesh das: பீலா வெங்கடேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸை கேளம்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜேஷ் தாஸ்(கோப்புப்படம்)
ராஜேஷ் தாஸ்(கோப்புப்படம்) (Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன், முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் இடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் பீலா ராஜேஷ் தாஸ் என்ற தனது பெயரை பீலா வெங்கடேசன் என மாற்றி அதனை செய்தித் தாளில் விளம்பரம் கொடுத்திருந்தார்.

இவர் கேளம்பாக்கம் அடுத்த தையூர் பங்களாவில் வசித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 21-ஆம் தேதி தையூரில் உள்ள பண்ணை வீட்டில் காவலாளியை தாக்கிவிட்டு அத்துமீறி நுழைய முயன்றதாக ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன், தனது கணவரும், முன்னாள் சிறப்பு டிஜிபியுமான ராஜேஸ் தாஸ் மீது கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் போலீசார் ராஜேஷ் தாஸ் மீது அத்துமீறி புகுந்து பிரச்சனை ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் பீலா வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் கேளம்பாக்கம் போலீசார் ராஜேஷ்தாஸை இன்று கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு பெண் காவல் கண்காணிப்பாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவன் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார் ராஜேஷ் தாஸ். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உள்ளது இதற்கு முன்னதாக ராஜேஷ் தாஸ் வசித்து வரும் பங்களா வீட்டில் கடந்த 20-தேதி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது ராஜேஷ் தாஸின் மனைவி பீலா வெங்கடேசன் எரிசக்தி துறையில் அதிகாரியாக இருப்பதால் அவரது அதிகாரத்தை பயன்படுத்தி தான் வசித்து வரும் வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக ராஜேஷ் தாஸ் தரப்பு குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் ராஜேஷ் தாஸ் வசித்து வரும் பங்களா வீட்டில் பீலா வெங்கடேசன் பெயரில் மின் இணைப்பு இருந்ததால், அவர் தங்களுக்கு மின் இணைப்பு வேண்டாம் எனக் கூறி மனு கொடுத்த காரணத்தால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் ராஜேஷ் தாஸ் வசித்து வரும் பங்களா வீட்டில் மின் இணைப்பு துண்டித்துவிட்டதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரணை நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் வாக்குவாதம்: விசாரணையில் மயங்கி விழுந்த காவலர்? - நடந்தது என்ன?

சென்னை: ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன், முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் இடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் பீலா ராஜேஷ் தாஸ் என்ற தனது பெயரை பீலா வெங்கடேசன் என மாற்றி அதனை செய்தித் தாளில் விளம்பரம் கொடுத்திருந்தார்.

இவர் கேளம்பாக்கம் அடுத்த தையூர் பங்களாவில் வசித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 21-ஆம் தேதி தையூரில் உள்ள பண்ணை வீட்டில் காவலாளியை தாக்கிவிட்டு அத்துமீறி நுழைய முயன்றதாக ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன், தனது கணவரும், முன்னாள் சிறப்பு டிஜிபியுமான ராஜேஸ் தாஸ் மீது கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் போலீசார் ராஜேஷ் தாஸ் மீது அத்துமீறி புகுந்து பிரச்சனை ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் பீலா வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் கேளம்பாக்கம் போலீசார் ராஜேஷ்தாஸை இன்று கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு பெண் காவல் கண்காணிப்பாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவன் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார் ராஜேஷ் தாஸ். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உள்ளது இதற்கு முன்னதாக ராஜேஷ் தாஸ் வசித்து வரும் பங்களா வீட்டில் கடந்த 20-தேதி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது ராஜேஷ் தாஸின் மனைவி பீலா வெங்கடேசன் எரிசக்தி துறையில் அதிகாரியாக இருப்பதால் அவரது அதிகாரத்தை பயன்படுத்தி தான் வசித்து வரும் வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக ராஜேஷ் தாஸ் தரப்பு குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் ராஜேஷ் தாஸ் வசித்து வரும் பங்களா வீட்டில் பீலா வெங்கடேசன் பெயரில் மின் இணைப்பு இருந்ததால், அவர் தங்களுக்கு மின் இணைப்பு வேண்டாம் எனக் கூறி மனு கொடுத்த காரணத்தால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் ராஜேஷ் தாஸ் வசித்து வரும் பங்களா வீட்டில் மின் இணைப்பு துண்டித்துவிட்டதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரணை நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் வாக்குவாதம்: விசாரணையில் மயங்கி விழுந்த காவலர்? - நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.