திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மங்களநாயகிபுரம் கிராமத்தில் வெறி நாய் ஒன்று 25 கால்நடைகளைக் கடித்து படுகாயம் அடையச் செய்துள்ளது. இதனால் அந்த கிராம பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில், “மங்களநாயகிபுரம் கிராமத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதுகரித்து வருகின்றது.
தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எதும் எடுக்கப்படாத நிலையே இதற்கு காரணம். மேலும், சத்துணவு மையங்களில் மீதமுள்ள உணவுகளை உண்டு வந்த தெரு நாய்கள், பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளதால், உணவு கிடைக்காமல் சாலைகளில் பசியுடன் திரிந்து வருகிறது.