ETV Bharat / state

தாம்பரம் - கொச்சுவேலி பண்டிகை கால கூடுதல் சிறப்பு ரயில்; இந்த ஊர்களில் எல்லாம் நிற்கும்! - Southern Railway

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2024, 4:26 PM IST

விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக தாம்பரம்-கொச்சுவேலி இடையே கூடுதல் சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

ரயில் கோப்புப்படம்
ரயில் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை: விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓணம் பண்டிகை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக, தாம்பரத்தில் இருந்து மதுரை, ராஜபாளையம், புனலூர், கொல்லம் வழியாக திருவனந்தபுரம் கொச்சுவேலிக்கு மேலும் ஒரு கூடுதல் சிறப்பு ரயில் இயக்க
தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயில் (06153) செப்டம்பர் 8, 15, 22 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 09.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 01.40 மணிக்கு கொச்சுவேலி சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் கொச்சுவேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (06154) செப்டம்பர் 09, 16, 23 ஆகிய திங்கட்கிழமைகளில் கொச்சுவேலியில் இருந்து மாலை 03.35 பணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.35 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீ ரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், பாம்பகோயில் சந்தை, கடையநல்லூர், தென்காசி, மற்றும் செங்கோட்டை, தென்மலை, புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரா, குன்டரா, கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் 14 குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய மின்சார ஜெனரேட்டர் பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும். ‌ இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: கடும் ஏற்றுமதி பாதிப்பைச் சந்திக்கும் தீப்பெட்டி.. ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு? என்ன தான் தீர்வு?

மதுரை: விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓணம் பண்டிகை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக, தாம்பரத்தில் இருந்து மதுரை, ராஜபாளையம், புனலூர், கொல்லம் வழியாக திருவனந்தபுரம் கொச்சுவேலிக்கு மேலும் ஒரு கூடுதல் சிறப்பு ரயில் இயக்க
தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயில் (06153) செப்டம்பர் 8, 15, 22 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 09.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 01.40 மணிக்கு கொச்சுவேலி சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் கொச்சுவேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (06154) செப்டம்பர் 09, 16, 23 ஆகிய திங்கட்கிழமைகளில் கொச்சுவேலியில் இருந்து மாலை 03.35 பணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.35 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீ ரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், பாம்பகோயில் சந்தை, கடையநல்லூர், தென்காசி, மற்றும் செங்கோட்டை, தென்மலை, புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரா, குன்டரா, கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் 14 குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய மின்சார ஜெனரேட்டர் பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும். ‌ இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: கடும் ஏற்றுமதி பாதிப்பைச் சந்திக்கும் தீப்பெட்டி.. ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு? என்ன தான் தீர்வு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.