ETV Bharat / state

நாம் தமிழர் கட்சியுடன் அதிமுக கூட்டணியா? ஈபிஎஸ் ரியாக்‌ஷன் என்ன? - AIADMK alliance with NTK

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 12, 2024, 4:31 PM IST

Updated : Jul 12, 2024, 4:42 PM IST

AIADMK alliance with NTK: தஞ்சாவூர் மற்றும் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிகளின் நிர்வாகிகள் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக நிர்வாகிகளில் சிலர் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீமான் மற்றும் எடப்பாடி பழனிசாமி
சீமான் மற்றும் எடப்பாடி பழனிசாமி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து தொகுதி வாரியாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில், இன்று (வெள்ளிக்கிழமை) 3வது நாளாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அரக்கோணம் மற்றும் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அடுத்த கட்ட உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் எப்படி சிறப்பாக செயலாற்றுவது என்பது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கியதாகவும், ஓபிஎஸ், சசிகலா அணியில் இருக்கும் அதிமுக நிர்வாகிகளை மீண்டும் அதிமுகவுக்கு கொண்டு வரவும், பெண்களையும், இளைஞர்களையும் கட்சிப் பணிகளில் அதிகமாக ஈடுபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அந்தந்த பகுதிகளில் உள்ள பிரச்னைகளுக்கான மாதத்திற்கு இரண்டு போராட்டங்களையாவது முன்னெடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, கூட்டணி குறித்த தெளிவான முடிவுகளை எடுக்காத காரணத்தால் பல இடங்களில் தோல்வி அடைந்ததற்கு காரணம் என கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்ததாகவும்,

பாமக, பாஜகவுடன் கூட்டணிக்கு சென்றதால் வட மாவட்டங்களில் அதிமுகவிற்கு வாக்கு சதவீதம் குறைந்துள்ளது என்றும், அடுத்து வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளி கட்சித் தலைமையிடம் கோரிக்கை வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: “திமுக அரசுக்கு பாஜக பதற்றத்தை ஏற்படுத்துகிறது” - ஸ்டாலின் சந்திப்பிற்கு பிறகு திருமாவளவன் பேச்சு!

சென்னை: நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து தொகுதி வாரியாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில், இன்று (வெள்ளிக்கிழமை) 3வது நாளாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அரக்கோணம் மற்றும் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அடுத்த கட்ட உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் எப்படி சிறப்பாக செயலாற்றுவது என்பது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கியதாகவும், ஓபிஎஸ், சசிகலா அணியில் இருக்கும் அதிமுக நிர்வாகிகளை மீண்டும் அதிமுகவுக்கு கொண்டு வரவும், பெண்களையும், இளைஞர்களையும் கட்சிப் பணிகளில் அதிகமாக ஈடுபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அந்தந்த பகுதிகளில் உள்ள பிரச்னைகளுக்கான மாதத்திற்கு இரண்டு போராட்டங்களையாவது முன்னெடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, கூட்டணி குறித்த தெளிவான முடிவுகளை எடுக்காத காரணத்தால் பல இடங்களில் தோல்வி அடைந்ததற்கு காரணம் என கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்ததாகவும்,

பாமக, பாஜகவுடன் கூட்டணிக்கு சென்றதால் வட மாவட்டங்களில் அதிமுகவிற்கு வாக்கு சதவீதம் குறைந்துள்ளது என்றும், அடுத்து வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளி கட்சித் தலைமையிடம் கோரிக்கை வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: “திமுக அரசுக்கு பாஜக பதற்றத்தை ஏற்படுத்துகிறது” - ஸ்டாலின் சந்திப்பிற்கு பிறகு திருமாவளவன் பேச்சு!

Last Updated : Jul 12, 2024, 4:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.