ETV Bharat / state

சென்னை விமான நிலையக் கழிவறையில் இருந்து ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல்! - gold bars seized in chennai airport

Smuggled Gold Bars seized in Chennai Airport: சென்னை விமான நிலையக் கழிவறையில் உள்ள குப்பைத் தொட்டிக்குள் பதுக்கி வைத்திருந்த ரூ.90 லட்சம் மதிப்புடைய தங்கக் கட்டிகளை விமான நிலைய தூய்மைப் பணியாளர்கள் கண்டெடுத்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 26, 2024, 8:50 PM IST

gold bars seized in chennai airport
gold bars seized in chennai airport

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில், வருகைப் பகுதியில் உள்ள கழிவறையை விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது, கழிவறையிலிருந்த குப்பைத்தொட்டி ஒன்றில் பார்சல் கிடந்ததைப் பார்த்து, விமான நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மேலாளர், மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பின், அவர்கள் வந்து பார்சலை எடுத்துள்ளனர். அதில், வெடிகுண்டு இருக்கலாம் என சந்தேகப்பட்டு, மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தியுள்ளனர். சோதனையில், வெடிகுண்டு எதுவும் இல்லை எனத் தெரிய வந்ததையடுத்து பார்சலை பிரித்துப் பார்த்துள்ளனர். அப்போது, அதனுள் 4 தங்கக் கட்டிகள் இருந்ததை மத்திய தொழிற் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர், அந்த தங்கக் கட்டிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். சுங்க அதிகாரிகள் தங்கக் கட்டிகளை ஆய்வு செய்து பார்த்த போது, அதன் மொத்த எடை 1 கிலோ 250 கிராம் இருந்தது எனவும், அதன் சர்வதேச மதிப்பு ரூ.90 லட்சம் எனத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சுங்க அதிகாரிகள் தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்து, இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்தும், தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்த மர்ம நபர் யார் என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சென்னை விமான நிலையத்தில் வருகைப் பகுதியில் உள்ள, சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த தங்கக் கட்டிகள் துபாயிலிருந்து இன்று அதிகாலை வந்த விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றும், விமான நிலையத்தில் சுங்கச் சோதனை அதிகமாக இருந்ததால், கடத்தல் நபர் கழிவறையில் உள்ள குப்பைத் தொட்டியில் மறைத்து வைத்துவிட்டு, அதன் பின்பு யார் மூலமாவது வெளியே எடுத்து வரத் திட்டமிட்டு இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: "அரசுப் பள்ளிகளில் மே.6 முதல் உயர்கல்வி வழிகாட்டி முகாம்" - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு! - Higher Education Guidance Camp

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில், வருகைப் பகுதியில் உள்ள கழிவறையை விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது, கழிவறையிலிருந்த குப்பைத்தொட்டி ஒன்றில் பார்சல் கிடந்ததைப் பார்த்து, விமான நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மேலாளர், மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பின், அவர்கள் வந்து பார்சலை எடுத்துள்ளனர். அதில், வெடிகுண்டு இருக்கலாம் என சந்தேகப்பட்டு, மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தியுள்ளனர். சோதனையில், வெடிகுண்டு எதுவும் இல்லை எனத் தெரிய வந்ததையடுத்து பார்சலை பிரித்துப் பார்த்துள்ளனர். அப்போது, அதனுள் 4 தங்கக் கட்டிகள் இருந்ததை மத்திய தொழிற் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர், அந்த தங்கக் கட்டிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். சுங்க அதிகாரிகள் தங்கக் கட்டிகளை ஆய்வு செய்து பார்த்த போது, அதன் மொத்த எடை 1 கிலோ 250 கிராம் இருந்தது எனவும், அதன் சர்வதேச மதிப்பு ரூ.90 லட்சம் எனத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சுங்க அதிகாரிகள் தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்து, இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்தும், தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்த மர்ம நபர் யார் என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சென்னை விமான நிலையத்தில் வருகைப் பகுதியில் உள்ள, சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த தங்கக் கட்டிகள் துபாயிலிருந்து இன்று அதிகாலை வந்த விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றும், விமான நிலையத்தில் சுங்கச் சோதனை அதிகமாக இருந்ததால், கடத்தல் நபர் கழிவறையில் உள்ள குப்பைத் தொட்டியில் மறைத்து வைத்துவிட்டு, அதன் பின்பு யார் மூலமாவது வெளியே எடுத்து வரத் திட்டமிட்டு இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: "அரசுப் பள்ளிகளில் மே.6 முதல் உயர்கல்வி வழிகாட்டி முகாம்" - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு! - Higher Education Guidance Camp

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.