ETV Bharat / state

தேனியில் நீளும் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விவகாரம்.. மேலும் 3 இளைஞர்கள் அதிரடி கைது! - Methamphetamine drugs Seized

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 1, 2024, 1:51 PM IST

THENI DRUG SEIZE: தேனியில் நேற்று முன்தினம் 30 பாக்கெட் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பிடிபட்ட வழக்கில் மேலும் 3 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தனிப்படை போலீசார் கேரளாவில் முக்கிய குற்றவாளிகளை தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேனியில் பறிமுதல் செய்யப்பட்ட மெத்தபெட்டமைன்
தேனியில் பறிமுதல் செய்யப்பட்ட மெத்தபெட்டமைன் (CREDIT -ETVBharat TamilNadu)

தேனி: பெரியகுளம் அருகே உள்ள ஏ.புதுப்பட்டி புறவழிச்சாலை பகுதியில் நேற்று முன்தினம் பெரியகுளம் வடகரை காவல் ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் தலைமையில் காவல்துறையினர் நள்ளிரவில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, கேரளா பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது அவர்களிடம் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, பெரியகுளம் காவல்துறையினர் வாகனத்தையும், வாகனத்தில் பயணித்த மூவரையும், விசாரணைக்காக பெரியகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வாகனத்தை முழுமையாக சோதனை மேற்கொண்ட பொழுது வாகனத்தில் சர்வதேச சந்தையில் கிடைக்கும் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் 30 பாக்கெட்டுகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பிடிபட்ட கொடைக்கானல் சேர்ந்த ஆரிப் என்ற நபரிடம் தொடர் விசாரணையின் போது தொடர்புடைய மேலும் ஏழு நபர்களின் விவரம் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ஆரிப் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு மெத்தபெட்டமைன் போதைப்பொருள் மொத்த விற்பனையாளர் யார்?, மேலும் இந்த போதை பொருள் கடத்தலுக்கு யார் உடந்தை, முக்கிய குற்றவாளியார்? தமிழகத்தில் எந்தெந்த நகரங்களில் விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறித்த விசாரணை மேற்கொண்டனர்.

இதில் தனிப்படையினர் கோவை, ஈரோடு, கம்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மேலும் 3 இளைஞர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த காரையும் போதை பொருட்கள் பறிமுதல் செய்து நேற்று இரவு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் கம்பம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கொடைக்கானலில் சொந்தமாக காட்டேஜ் வைத்து நடத்தி வரும் நிலையில் கொடைக்கானல் வரும் வெளி மாநில மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகளுக்கு மெத்தபெட்டமைன், கொக்கையின், என்.எஸ்.டி ஸ்டாம்ப், உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், விகாஷ் ஷியாம், ஆரிப், ஆனந்த், யாசர் முக்தார், அன்பழகன் ஆகிய ஐந்து நபர்களும் போதைப் பொருட்களை கேரளா மற்றும் பெங்களூரு பகுதியில் இருந்து வாங்கி வந்து ராம்குமாரிடம் கொடுப்பவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சர்வதேச சந்தையில் கிடைக்கும் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் கேரளாவைச் சேர்ந்த 2 முக்கிய குற்றவாளிகள் பிடிபடாத நிலையில் தனிப்படையினர் தேடி வருகின்றனர். இதுவரையில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மொத்தம் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கோயம்பேட்டில் போதை மாத்திரைகள் விற்பனை.. 17 வயது சிறுவன் உட்பட 6 பேர் கைது! - Drug Tablets selling in Chennai

தேனி: பெரியகுளம் அருகே உள்ள ஏ.புதுப்பட்டி புறவழிச்சாலை பகுதியில் நேற்று முன்தினம் பெரியகுளம் வடகரை காவல் ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் தலைமையில் காவல்துறையினர் நள்ளிரவில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, கேரளா பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது அவர்களிடம் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, பெரியகுளம் காவல்துறையினர் வாகனத்தையும், வாகனத்தில் பயணித்த மூவரையும், விசாரணைக்காக பெரியகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வாகனத்தை முழுமையாக சோதனை மேற்கொண்ட பொழுது வாகனத்தில் சர்வதேச சந்தையில் கிடைக்கும் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் 30 பாக்கெட்டுகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பிடிபட்ட கொடைக்கானல் சேர்ந்த ஆரிப் என்ற நபரிடம் தொடர் விசாரணையின் போது தொடர்புடைய மேலும் ஏழு நபர்களின் விவரம் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ஆரிப் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு மெத்தபெட்டமைன் போதைப்பொருள் மொத்த விற்பனையாளர் யார்?, மேலும் இந்த போதை பொருள் கடத்தலுக்கு யார் உடந்தை, முக்கிய குற்றவாளியார்? தமிழகத்தில் எந்தெந்த நகரங்களில் விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறித்த விசாரணை மேற்கொண்டனர்.

இதில் தனிப்படையினர் கோவை, ஈரோடு, கம்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மேலும் 3 இளைஞர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த காரையும் போதை பொருட்கள் பறிமுதல் செய்து நேற்று இரவு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் கம்பம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கொடைக்கானலில் சொந்தமாக காட்டேஜ் வைத்து நடத்தி வரும் நிலையில் கொடைக்கானல் வரும் வெளி மாநில மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகளுக்கு மெத்தபெட்டமைன், கொக்கையின், என்.எஸ்.டி ஸ்டாம்ப், உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், விகாஷ் ஷியாம், ஆரிப், ஆனந்த், யாசர் முக்தார், அன்பழகன் ஆகிய ஐந்து நபர்களும் போதைப் பொருட்களை கேரளா மற்றும் பெங்களூரு பகுதியில் இருந்து வாங்கி வந்து ராம்குமாரிடம் கொடுப்பவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சர்வதேச சந்தையில் கிடைக்கும் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் கேரளாவைச் சேர்ந்த 2 முக்கிய குற்றவாளிகள் பிடிபடாத நிலையில் தனிப்படையினர் தேடி வருகின்றனர். இதுவரையில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மொத்தம் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கோயம்பேட்டில் போதை மாத்திரைகள் விற்பனை.. 17 வயது சிறுவன் உட்பட 6 பேர் கைது! - Drug Tablets selling in Chennai

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.