ETV Bharat / state

13ஆம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.. ஓங்கி உயரும் தமிழனின் வரலாறு! - சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு

13th century Samnappalli inscription: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த கீழப்பிடாவூரில் சமணப்பள்ளிக்காக வழங்கப்பட்ட நிலதானக் கல்வெட்டு சிவகங்கை தொழிலடை குழு ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

13ஆம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு
13ஆம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2024, 10:52 PM IST

சிவகங்கை: கீழப்பிடாவூரில் கல்வெட்டு ஒன்று இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த கண்ணன் மற்றும் லிங்கம் ஆகியோர் சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு தகவல் அளித்துள்ளனர். அதன்படி சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர், புலவர் கா.காளிராசா, செயலர் இரா. நரசிம்மன், கள ஆய்வாளர் கா.சரவணன் ஆகியோர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் மற்றும் புலவர் கா. காளிராசா கூட்டாக செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது:

மதுரையும் சமணப்படுக்கைகளும்..!: "மதுரையைச் சுற்றி சமணர் பெரும் பகுதியில் வாழ்ந்துள்ளனர் என்பதை மதுரையைச் சுற்றியுள்ள மலைகளில் சமணப்படுக்கைகள் அமைந்துள்ளதன் வழி அறிய முடிகிறது. மேலும் இங்கு உள்ள ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டு மகாவீரர் திருமேனிகள் அதை செய்வித்த அச்சணந்தி அடிகள் போன்ற விவரங்கள் வட்டெழுத்துக் கல்வெட்டாகவும் கிடைக்கின்றன. மேலும் அக்காலக் கட்டங்களில் செய்த திருமேனிகள் அவர்களுக்கு அளித்த நிலக்கொடைகள் போன்ற செய்திகளும் கழுகுமலை போன்ற இடங்களில் கல்வெட்டாக விரிவாக கிடைக்கின்றன.

13ஆம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு
13ஆம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு

ஏழு, எட்டாம் நூற்றாண்டில் சைவர்களுக்கும் சமணர்களுக்கும் நிகழ்ந்த பூசல்களில் சமணர்கள் கழுவேற்றப் பெற்றதாகவும் மலை போன்ற மறைவிடங்களில் மறைந்து வாழ்ந்ததாகவும் சொல்லப்பட்டு வருகிறது. திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்களில் பத்தாவது பாடல் சமணர்களைப் பற்றிய செய்தியை உள்ளடக்கியதாக உள்ளது. பாண்டிய நாட்டில் பத்தாம் நூற்றாண்டோடு சமணம் வழக்கொழிந்ததாக கருதப்பட்டு வரும் நிலையில், மானாமதுரை அருகே உள்ள கீழப்பிடாவூரில் கி.பி.13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணப்பள்ளி தொடர்பான கல்வெட்டொன்று கிடைத்துள்ளது.

உறுதியாகும் சமணப்பள்ளிகளுக்கு மன்னர்களின் கொடை: கல்வெட்டில் ஒரு பக்கம் அரசு அலுவலர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது ஒப்பமாக எழுத்து என்று வருகிறது. இவ்வகையில் மக்களின் பயன்பாட்டில் சமணப்பள்ளி இருந்ததோடு, அரசர்கள் அதற்கு நிலக்கொடை வழங்கும் அளவிற்கு முதன்மை பெற்றிருந்தது என்பதும் சிறப்பானதாகும்.

கல்வெட்டின் அமைப்பு: நான்கு பக்கங்களிலும் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. ஒரு பக்கத்தில் திரிசூலம் செதுக்கப்பட்டு அதன் கீழிருந்து கல்வெட்டு தொடங்குகிறது. இப்பக்கத்தில் ஏழு வரிகள் இடம்பெற்றுள்ளன. மற்ற மூன்று பக்கங்களிலும் எழுத்துகள் உள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் ஒன்றன்பின் ஒன்றாக செய்தி எழுதப்பட்டுள்ளது. முறையே 22, 25, 28 வரிகள் இடம்பெற்றுள்ளன. கல்வெட்டு தரைக்கு மேலிருந்து இரண்டே முக்கால் அடி உயரம் அமைந்துள்ளது. தரைக்கு கீழேயும் ஒரு அடி ஒன்றரை அடி ஆழம் இருக்கலாம். அதிலும் எழுத்துகள் கீழ் செல்கின்றன.

13ஆம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு
13ஆம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு

விக்கிரம பாண்டியன் புகழோங்கும் கல்வெட்டுக்கள்: கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு இது 13ஆம் நூற்றாண்டாகக் இருக்கலாம் என கருதப்படுகிறது. இக்கல்வெட்டில் விக்கிரம ராம வளநாடு என்று வளநாட்டில் புதிய பெயரும் இடம்பெற்றுள்ளது. நாற்பத்தெண்ணாயிரப் பெரும்பள்ளி மற்றும் பள்ளிச் சந்தம் போன்ற சொற்களைக்கொண்டு இக்கல்வெட்டு விக்கிரம பாண்டியனை குறிப்பதாகக் கொள்ளலாம். மேலும் மாறவர்மன் விக்கிரம பாண்டியன், முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் தம்பியாவார். இவரது காலம் பொ.ஆ 1268 முதல் 1281 வரையாகும். இவர் நடு நாட்டில் திருநறுங் கொண்டையில் நாற்பத்தெண்ணாயிரப் பெரும்பள்ளி என்ற பெயரில் சமணப்பள்ளி ஒன்றை நிறுவியதோடு அனைத்துக் கடவுளருக்கும் இறையிலி நிலங்கள் வழங்கியதை இவரது கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

நாற்பத் தெண்ணாயிரப் பெரும்பள்ளி: "ஸ்வஸ்திஸ்ரீ" எனத் தொடங்கும் இக்கல்வெட்டில் கருங்குடி நாட்டு பெரும் பிடாவூர் நாற்பத்தெண்ணாயிரப் பெரும்பள்ளி தேவர் என வருகிறது. இதைக் கொண்டு இவ்வூரில் சமணப்பள்ளி இருந்ததை நாம் அறிய முடிகிறது.

கல்வெட்டுச் செய்தி: நாயனாருக்கு திருப்படி மாற்று உள்ளிட்ட நித்த நியமங்களுக்கு நான்கு எல்லையிலும் எல்லைக்கல் நாட்டி, வரிகள் பிரித்து பூசை நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட செய்தி, சூரியனும் சந்திரனும் உள்ளவரை இவை செல்லுபடியாக, கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொள்ள சம்மதித்து பிடிபாடு எழுதிக் கொடுத்ததோடு அரசு அலுவலர்களின் கையெழுத்தும் இடம்பெற்றுள்ளது.

கல்வெட்டு பாடம்: ஸ்வஸ்தி ஸ்ரீ கருங்குடி நாட்டுப் பெரும் பிடாவூர் நாற்பத் தெண்ணாயிரப் பெரும் பள்ளி தேவர் வங்கபதேவநாயகர் பிமாஹெஷ்வரர் தேவ

2. மேச் விக்கிரமராம வளநாடு முள்ளிட்ட ஊர்களில் நாட்டோம் க(ரு)ங் குடி இப்பெரும் பிடாவூர் நாயனார் தேவர் விரவ நாயகற்குப் பள்ளிச் சந்தமான இவ்வூர் நான்கெல்லையில்லும் திருப்க்கடைக் கல்லு நாட்டி கடமை கற்பூரவிலை வினியோக வெட்டிப்பாட்ட சந்தி விக்ரஹம் இன்னாயனர்க்குத் திருப்படி மாற்றுள்ளிட்ட நிசத நிமந்தங்கள் செல்லக் கடவதாக நாயனார் பிரசாதம் செய்தருளிய த(ன்)

3. மையில் இவ்வூர்க்குள்ள விலை வினியோகம் வெட்டி பாட்டம் இறுப்பக்களும் இந்நாயனார்க்கு வேண்டுந் திருப்படி மாற்றுள்ளிட்ட இந்த நிம(ந்த)ங்கள் சந்திராதித்யவர் செல்லக் கல்லிலுஞ் செம்பிலும் வெட்டிக் கொள்ள இத் திருமுகப்படி சம்மதித்து வரியிற்பிரித்து புரங் கட்டு குடுத்தோம் கருங்குடி மெங்கல நாடும் விக்ரமராம வள நாடுள்ளிட்ட நாட்டோ இப்படி சம்மதித்தமைக்கு பிடிபாடெழுதினேனும் நாகந்தகுடியு ராயன்வாடாதக்கு

4. இவைய் கங்குள முடை யான் சாத்தன் திருப்பூவன முடையானான வில்லவன் விழுப்பா யராயன் எழுத்த்து இப்படிக்கு இவை மருதங் குள முடையான் வேளான்சோலை மலை சொக்கன் எழுத்து இப்படிக்கு இவை வளைக் குளத்து தாயனழகனார் குருகுலத்தரையன் எழுத்துஇப்படிக்கு இவை வளைக்குளத்து ஆதின்னா டவன் அண்ணரங்கதாதன் எழுத்து இப்படிக்கு இவை நாகந்த குடி துறயனழகர் எழுத்து இப்படி சம்மதித்து மருதங்குளமுடையான் வேளான்.....குறங்.....

கல்வெட்டில் அமைந்துள்ள பள்ளிச் சந்தம் விளக்குவது என்ன?: பள்ளிச் சந்தம் என்பது பொதுவாக பௌத்தம் மற்றும் சமணக் கோயில்களுக்கு நிலக்கொடை வழங்கப்படுவதை குறிக்கும் சொல்லாடலாகும். கல்வெட்டில் கிரந்த எழுத்துகளும் இருந்ததால் மேலாய்வுக்காக தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கத்திடம் வாசித்து செய்தி பெறப்பட்டது. கல்வெட்டு அமைந்த திரிசூலம், இன்று அப்பகுதி மக்களால் முனியசாமியாக வணங்கப்பட்டு வருகிறது. கல்வெட்டு அமைந்துள்ள இடம் ஒரு மேட்டுப்பகுதியாகவும், அதில் கோயில் இருந்து இடிந்து போன கற்களும் அருகில் ஒரு குளமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வூரின் கண்மாய்க் கரையில் 16 மற்றும் 17ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் வானவீரன் மதுரையில் திருமாலிருஞ் சோலை நின்ற மாமகாவலி வாணதிராயர் எனத் தொடங்கும் மடை தானம் குறித்த கல்வெட்டொன்றும் உள்ளது. சிவகங்கை தொல்லியல் நடைக்குழு பாண்டிய நாட்டில் 13ஆம் நூற்றாண்டு வரை சமணம் செல்வாக்கோடு இருந்ததைச் சொல்லும் கல்வெட்டை கண்டறிந்தது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 50 ஆண்டுகளுக்குப் பின் காவேரி வடக்கு வனவிலங்கு சரணாலயத்தில் தென்பட்ட புலிகள்!

சிவகங்கை: கீழப்பிடாவூரில் கல்வெட்டு ஒன்று இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த கண்ணன் மற்றும் லிங்கம் ஆகியோர் சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு தகவல் அளித்துள்ளனர். அதன்படி சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர், புலவர் கா.காளிராசா, செயலர் இரா. நரசிம்மன், கள ஆய்வாளர் கா.சரவணன் ஆகியோர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் மற்றும் புலவர் கா. காளிராசா கூட்டாக செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது:

மதுரையும் சமணப்படுக்கைகளும்..!: "மதுரையைச் சுற்றி சமணர் பெரும் பகுதியில் வாழ்ந்துள்ளனர் என்பதை மதுரையைச் சுற்றியுள்ள மலைகளில் சமணப்படுக்கைகள் அமைந்துள்ளதன் வழி அறிய முடிகிறது. மேலும் இங்கு உள்ள ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டு மகாவீரர் திருமேனிகள் அதை செய்வித்த அச்சணந்தி அடிகள் போன்ற விவரங்கள் வட்டெழுத்துக் கல்வெட்டாகவும் கிடைக்கின்றன. மேலும் அக்காலக் கட்டங்களில் செய்த திருமேனிகள் அவர்களுக்கு அளித்த நிலக்கொடைகள் போன்ற செய்திகளும் கழுகுமலை போன்ற இடங்களில் கல்வெட்டாக விரிவாக கிடைக்கின்றன.

13ஆம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு
13ஆம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு

ஏழு, எட்டாம் நூற்றாண்டில் சைவர்களுக்கும் சமணர்களுக்கும் நிகழ்ந்த பூசல்களில் சமணர்கள் கழுவேற்றப் பெற்றதாகவும் மலை போன்ற மறைவிடங்களில் மறைந்து வாழ்ந்ததாகவும் சொல்லப்பட்டு வருகிறது. திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்களில் பத்தாவது பாடல் சமணர்களைப் பற்றிய செய்தியை உள்ளடக்கியதாக உள்ளது. பாண்டிய நாட்டில் பத்தாம் நூற்றாண்டோடு சமணம் வழக்கொழிந்ததாக கருதப்பட்டு வரும் நிலையில், மானாமதுரை அருகே உள்ள கீழப்பிடாவூரில் கி.பி.13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணப்பள்ளி தொடர்பான கல்வெட்டொன்று கிடைத்துள்ளது.

உறுதியாகும் சமணப்பள்ளிகளுக்கு மன்னர்களின் கொடை: கல்வெட்டில் ஒரு பக்கம் அரசு அலுவலர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது ஒப்பமாக எழுத்து என்று வருகிறது. இவ்வகையில் மக்களின் பயன்பாட்டில் சமணப்பள்ளி இருந்ததோடு, அரசர்கள் அதற்கு நிலக்கொடை வழங்கும் அளவிற்கு முதன்மை பெற்றிருந்தது என்பதும் சிறப்பானதாகும்.

கல்வெட்டின் அமைப்பு: நான்கு பக்கங்களிலும் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. ஒரு பக்கத்தில் திரிசூலம் செதுக்கப்பட்டு அதன் கீழிருந்து கல்வெட்டு தொடங்குகிறது. இப்பக்கத்தில் ஏழு வரிகள் இடம்பெற்றுள்ளன. மற்ற மூன்று பக்கங்களிலும் எழுத்துகள் உள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் ஒன்றன்பின் ஒன்றாக செய்தி எழுதப்பட்டுள்ளது. முறையே 22, 25, 28 வரிகள் இடம்பெற்றுள்ளன. கல்வெட்டு தரைக்கு மேலிருந்து இரண்டே முக்கால் அடி உயரம் அமைந்துள்ளது. தரைக்கு கீழேயும் ஒரு அடி ஒன்றரை அடி ஆழம் இருக்கலாம். அதிலும் எழுத்துகள் கீழ் செல்கின்றன.

13ஆம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு
13ஆம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு

விக்கிரம பாண்டியன் புகழோங்கும் கல்வெட்டுக்கள்: கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு இது 13ஆம் நூற்றாண்டாகக் இருக்கலாம் என கருதப்படுகிறது. இக்கல்வெட்டில் விக்கிரம ராம வளநாடு என்று வளநாட்டில் புதிய பெயரும் இடம்பெற்றுள்ளது. நாற்பத்தெண்ணாயிரப் பெரும்பள்ளி மற்றும் பள்ளிச் சந்தம் போன்ற சொற்களைக்கொண்டு இக்கல்வெட்டு விக்கிரம பாண்டியனை குறிப்பதாகக் கொள்ளலாம். மேலும் மாறவர்மன் விக்கிரம பாண்டியன், முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் தம்பியாவார். இவரது காலம் பொ.ஆ 1268 முதல் 1281 வரையாகும். இவர் நடு நாட்டில் திருநறுங் கொண்டையில் நாற்பத்தெண்ணாயிரப் பெரும்பள்ளி என்ற பெயரில் சமணப்பள்ளி ஒன்றை நிறுவியதோடு அனைத்துக் கடவுளருக்கும் இறையிலி நிலங்கள் வழங்கியதை இவரது கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

நாற்பத் தெண்ணாயிரப் பெரும்பள்ளி: "ஸ்வஸ்திஸ்ரீ" எனத் தொடங்கும் இக்கல்வெட்டில் கருங்குடி நாட்டு பெரும் பிடாவூர் நாற்பத்தெண்ணாயிரப் பெரும்பள்ளி தேவர் என வருகிறது. இதைக் கொண்டு இவ்வூரில் சமணப்பள்ளி இருந்ததை நாம் அறிய முடிகிறது.

கல்வெட்டுச் செய்தி: நாயனாருக்கு திருப்படி மாற்று உள்ளிட்ட நித்த நியமங்களுக்கு நான்கு எல்லையிலும் எல்லைக்கல் நாட்டி, வரிகள் பிரித்து பூசை நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட செய்தி, சூரியனும் சந்திரனும் உள்ளவரை இவை செல்லுபடியாக, கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொள்ள சம்மதித்து பிடிபாடு எழுதிக் கொடுத்ததோடு அரசு அலுவலர்களின் கையெழுத்தும் இடம்பெற்றுள்ளது.

கல்வெட்டு பாடம்: ஸ்வஸ்தி ஸ்ரீ கருங்குடி நாட்டுப் பெரும் பிடாவூர் நாற்பத் தெண்ணாயிரப் பெரும் பள்ளி தேவர் வங்கபதேவநாயகர் பிமாஹெஷ்வரர் தேவ

2. மேச் விக்கிரமராம வளநாடு முள்ளிட்ட ஊர்களில் நாட்டோம் க(ரு)ங் குடி இப்பெரும் பிடாவூர் நாயனார் தேவர் விரவ நாயகற்குப் பள்ளிச் சந்தமான இவ்வூர் நான்கெல்லையில்லும் திருப்க்கடைக் கல்லு நாட்டி கடமை கற்பூரவிலை வினியோக வெட்டிப்பாட்ட சந்தி விக்ரஹம் இன்னாயனர்க்குத் திருப்படி மாற்றுள்ளிட்ட நிசத நிமந்தங்கள் செல்லக் கடவதாக நாயனார் பிரசாதம் செய்தருளிய த(ன்)

3. மையில் இவ்வூர்க்குள்ள விலை வினியோகம் வெட்டி பாட்டம் இறுப்பக்களும் இந்நாயனார்க்கு வேண்டுந் திருப்படி மாற்றுள்ளிட்ட இந்த நிம(ந்த)ங்கள் சந்திராதித்யவர் செல்லக் கல்லிலுஞ் செம்பிலும் வெட்டிக் கொள்ள இத் திருமுகப்படி சம்மதித்து வரியிற்பிரித்து புரங் கட்டு குடுத்தோம் கருங்குடி மெங்கல நாடும் விக்ரமராம வள நாடுள்ளிட்ட நாட்டோ இப்படி சம்மதித்தமைக்கு பிடிபாடெழுதினேனும் நாகந்தகுடியு ராயன்வாடாதக்கு

4. இவைய் கங்குள முடை யான் சாத்தன் திருப்பூவன முடையானான வில்லவன் விழுப்பா யராயன் எழுத்த்து இப்படிக்கு இவை மருதங் குள முடையான் வேளான்சோலை மலை சொக்கன் எழுத்து இப்படிக்கு இவை வளைக் குளத்து தாயனழகனார் குருகுலத்தரையன் எழுத்துஇப்படிக்கு இவை வளைக்குளத்து ஆதின்னா டவன் அண்ணரங்கதாதன் எழுத்து இப்படிக்கு இவை நாகந்த குடி துறயனழகர் எழுத்து இப்படி சம்மதித்து மருதங்குளமுடையான் வேளான்.....குறங்.....

கல்வெட்டில் அமைந்துள்ள பள்ளிச் சந்தம் விளக்குவது என்ன?: பள்ளிச் சந்தம் என்பது பொதுவாக பௌத்தம் மற்றும் சமணக் கோயில்களுக்கு நிலக்கொடை வழங்கப்படுவதை குறிக்கும் சொல்லாடலாகும். கல்வெட்டில் கிரந்த எழுத்துகளும் இருந்ததால் மேலாய்வுக்காக தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கத்திடம் வாசித்து செய்தி பெறப்பட்டது. கல்வெட்டு அமைந்த திரிசூலம், இன்று அப்பகுதி மக்களால் முனியசாமியாக வணங்கப்பட்டு வருகிறது. கல்வெட்டு அமைந்துள்ள இடம் ஒரு மேட்டுப்பகுதியாகவும், அதில் கோயில் இருந்து இடிந்து போன கற்களும் அருகில் ஒரு குளமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வூரின் கண்மாய்க் கரையில் 16 மற்றும் 17ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் வானவீரன் மதுரையில் திருமாலிருஞ் சோலை நின்ற மாமகாவலி வாணதிராயர் எனத் தொடங்கும் மடை தானம் குறித்த கல்வெட்டொன்றும் உள்ளது. சிவகங்கை தொல்லியல் நடைக்குழு பாண்டிய நாட்டில் 13ஆம் நூற்றாண்டு வரை சமணம் செல்வாக்கோடு இருந்ததைச் சொல்லும் கல்வெட்டை கண்டறிந்தது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 50 ஆண்டுகளுக்குப் பின் காவேரி வடக்கு வனவிலங்கு சரணாலயத்தில் தென்பட்ட புலிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.