ETV Bharat / state

"சம்பளம் ஒழுங்கா கிடைக்காததால் எங்களுக்கு வேற வழி தெரியல" - குமுறும் தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்! - sanitation workers protest

sanitation workers protest: 19 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 400-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 8, 2024, 11:33 AM IST

தூய்மை பணியாளர் மற்றும் மாநகராட்சி மேயர்  பேட்டி
தூய்மை பணியாளர் மற்றும் மாநகராட்சி மேயர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை பாரத ஓட்டுநர் மற்றும் தூய்மை பணியாளர்கள் நலச்சங்கம் (AICCTU) மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநகராட்சியில் உள்ள வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு உள்ளிட்ட 4 மண்டலங்களிலும் ஓட்டுநர் மற்றும் தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

தூய்மை பணியாளர்கள் போராட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்தநிலையில் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் தொழிலாளர் விரோத போக்கை கடைப்பிடிப்பதாகக் குற்றம் சாட்டி தூய்மை பணியாளர்கள் 400க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு தற்போது போராட்டம் நடத்தினர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் கூறியதாவது, "மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணி ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களை தமிழ்நாடு பணி 1981ன் படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

தமிழக அரசாணை படி தூய்மை பணியாளர்களுக்கு சம்பள பில்லுடன் நாள் ஒன்றுக்கு ரூ.725, ஓட்டுநருக்கு ரூ.763 வழங்க வேண்டும். PF, ESI போன்றவற்றை தொழிலாளர்களிடம் பணம் பிடித்தம் செய்வதை முறைப்படுத்த வேண்டும். ஊதியம் குறித்த நாளில் ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும்.

அறிவிப்பு இல்லாமல் பண பிடித்தம் செய்வதைக் கைவிட வேண்டும். தூய்மை பணியாளர்கள், தூய்மை பணி ஓட்டுநர்களுக்கு வார விடுப்பு வழங்க வேண்டும். தொழிலாளர்கள் மரணமடைந்தால் சட்டப்படி அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஓட்டுநர்களைப் பழிவாங்கும் மண்டல மாறுதல் உத்தரவினை கைவிட வேண்டும் போன்ற 19 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டமானது நடைபெற்று வருகின்றது" என்றனர்.

முன்னதாக இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 26, அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில், மாநகராட்சி சார்பில் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று உறுதி அளித்துள்ளனர். ஆனால் கடந்த 05.07.2024 அன்று அனைத்து மண்டலத்தில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளத்தில் 50 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

நிறைய பணியாளர்களுக்கு, குறைவாக சம்பளம் அவர்களது அக்கவுண்டில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆகவே, மாநகராட்சியின் இந்த செயலை கண்டித்து கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்த போராட்டகார்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட தொடங்கினர்.

இதனையடுத்து பாதுகாப்பு பணிக்காக 50க்கும் மேற்ப்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தூய்மை பணியாளர்கள் போராட்டத்தால் தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மைப்படுத்தும் பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. பின்னர் மாநகராட்சி மேயர் ஜெகன் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதில், 5 கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் எனவும், 50 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டதை திரும்ப பணியாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதனை வரவேற்று அனைவரும் கலைந்துச் சென்றனர்.

இதையும் படிங்க: இலங்கை அமைச்சர் டெல்லிக்கு அழைப்பு.. மீனவர் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை பாரத ஓட்டுநர் மற்றும் தூய்மை பணியாளர்கள் நலச்சங்கம் (AICCTU) மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநகராட்சியில் உள்ள வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு உள்ளிட்ட 4 மண்டலங்களிலும் ஓட்டுநர் மற்றும் தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

தூய்மை பணியாளர்கள் போராட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்தநிலையில் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் தொழிலாளர் விரோத போக்கை கடைப்பிடிப்பதாகக் குற்றம் சாட்டி தூய்மை பணியாளர்கள் 400க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு தற்போது போராட்டம் நடத்தினர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் கூறியதாவது, "மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணி ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களை தமிழ்நாடு பணி 1981ன் படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

தமிழக அரசாணை படி தூய்மை பணியாளர்களுக்கு சம்பள பில்லுடன் நாள் ஒன்றுக்கு ரூ.725, ஓட்டுநருக்கு ரூ.763 வழங்க வேண்டும். PF, ESI போன்றவற்றை தொழிலாளர்களிடம் பணம் பிடித்தம் செய்வதை முறைப்படுத்த வேண்டும். ஊதியம் குறித்த நாளில் ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும்.

அறிவிப்பு இல்லாமல் பண பிடித்தம் செய்வதைக் கைவிட வேண்டும். தூய்மை பணியாளர்கள், தூய்மை பணி ஓட்டுநர்களுக்கு வார விடுப்பு வழங்க வேண்டும். தொழிலாளர்கள் மரணமடைந்தால் சட்டப்படி அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஓட்டுநர்களைப் பழிவாங்கும் மண்டல மாறுதல் உத்தரவினை கைவிட வேண்டும் போன்ற 19 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டமானது நடைபெற்று வருகின்றது" என்றனர்.

முன்னதாக இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 26, அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில், மாநகராட்சி சார்பில் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று உறுதி அளித்துள்ளனர். ஆனால் கடந்த 05.07.2024 அன்று அனைத்து மண்டலத்தில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளத்தில் 50 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

நிறைய பணியாளர்களுக்கு, குறைவாக சம்பளம் அவர்களது அக்கவுண்டில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆகவே, மாநகராட்சியின் இந்த செயலை கண்டித்து கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்த போராட்டகார்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட தொடங்கினர்.

இதனையடுத்து பாதுகாப்பு பணிக்காக 50க்கும் மேற்ப்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தூய்மை பணியாளர்கள் போராட்டத்தால் தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மைப்படுத்தும் பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. பின்னர் மாநகராட்சி மேயர் ஜெகன் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதில், 5 கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் எனவும், 50 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டதை திரும்ப பணியாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதனை வரவேற்று அனைவரும் கலைந்துச் சென்றனர்.

இதையும் படிங்க: இலங்கை அமைச்சர் டெல்லிக்கு அழைப்பு.. மீனவர் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.