ETV Bharat / state

தேசிய கீதத்தை இப்படி பாடினால் ஆளுநர் சிறைக்குச் செல்வார்.. ஆர்.எஸ்.பாரதி கூறியது என்ன? - RS BHARTHI ON DRAVIDAM IN ANTHEM

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 15, 2024, 5:32 PM IST

RS Bharti Hoists Flag: திராவிடம் பிடிக்கவில்லை என்று சொல்லும் ஆளுநர், அந்த திராவிடம் என்ற சொல்லை எடுத்துவிட்டு தேசிய கீதம் பாடினால், தேசிய கீதத்தை அவமதித்த வழக்கில் உள்ளே போவார் என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

தேசியக்கொடி ஏற்றும் ஆர். எஸ் பாரதி
ஆர். எஸ் பாரதி (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை: இன்று நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தேசியக்கொடி ஏற்றினார். பின்னர், அங்கு கூடியிருந்த மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இதனைத் தொடந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ் பாரதி, "தேசிய கீதம் பாடப்படும் பொழுது அந்த தேசிய கீதத்தில் திராவிடம் என்ற சொல் இருக்கிறதா இல்லையா? திராவிடம் பிடிக்கவில்லை என்று சொல்லும் ஆளுநர், அந்த திராவிடம் என்ற சொல்லை எடுத்துவிட்டு தேசிய கீதம் பாட வேண்டும். ஆனால், அவ்வாறு பாடினால் தேசிய கீதத்தை அவமதித்த வழக்கில்தான் உள்ளே போவார்.

எந்த அரசியல் கட்சி அலுவலகத்திலும் இல்லாத அளவிற்கு சுதந்திர தினத்தன்று அண்ணா அறிவாலயத்தில் தான் மக்கள் கூடியுள்ளனர். திமுகவின் தேசப்பற்றுக்கு யாரும் சான்றிதழ் கொடுக்கத் தேவையில்லை. நாங்கள் இந்த நாட்டைக் காப்பாற்றியவர்கள், காப்பாற்றிக் கொண்டிருப்பவர்கள், இது எங்கள் நாடு, இந்த நாட்டை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.

எப்படி இந்தியாவுக்கு ஆபத்து வந்தபோது எங்கள் தலைவர் நிதி கொடுத்து காப்பாற்றினார். இதேபோல் எப்போதும் எங்கள் தலைவர் நாட்டு நலனுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்திய ஒருமைப்பாட்டில் முழு நம்பிக்கை உள்ள இயக்கமும் திராவிட முன்னேற்ற கழகம் தான். அதேபோல முழு நம்பிக்கை உள்ள தலைவரும் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் தான்" என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: 77 வது சுதந்திர தினம்: இணையத்தில் வைரலாகும் கட்டிடக் கலைஞர்களின் தேசிய கீதம்!

சென்னை: இன்று நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தேசியக்கொடி ஏற்றினார். பின்னர், அங்கு கூடியிருந்த மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இதனைத் தொடந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ் பாரதி, "தேசிய கீதம் பாடப்படும் பொழுது அந்த தேசிய கீதத்தில் திராவிடம் என்ற சொல் இருக்கிறதா இல்லையா? திராவிடம் பிடிக்கவில்லை என்று சொல்லும் ஆளுநர், அந்த திராவிடம் என்ற சொல்லை எடுத்துவிட்டு தேசிய கீதம் பாட வேண்டும். ஆனால், அவ்வாறு பாடினால் தேசிய கீதத்தை அவமதித்த வழக்கில்தான் உள்ளே போவார்.

எந்த அரசியல் கட்சி அலுவலகத்திலும் இல்லாத அளவிற்கு சுதந்திர தினத்தன்று அண்ணா அறிவாலயத்தில் தான் மக்கள் கூடியுள்ளனர். திமுகவின் தேசப்பற்றுக்கு யாரும் சான்றிதழ் கொடுக்கத் தேவையில்லை. நாங்கள் இந்த நாட்டைக் காப்பாற்றியவர்கள், காப்பாற்றிக் கொண்டிருப்பவர்கள், இது எங்கள் நாடு, இந்த நாட்டை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.

எப்படி இந்தியாவுக்கு ஆபத்து வந்தபோது எங்கள் தலைவர் நிதி கொடுத்து காப்பாற்றினார். இதேபோல் எப்போதும் எங்கள் தலைவர் நாட்டு நலனுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்திய ஒருமைப்பாட்டில் முழு நம்பிக்கை உள்ள இயக்கமும் திராவிட முன்னேற்ற கழகம் தான். அதேபோல முழு நம்பிக்கை உள்ள தலைவரும் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் தான்" என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: 77 வது சுதந்திர தினம்: இணையத்தில் வைரலாகும் கட்டிடக் கலைஞர்களின் தேசிய கீதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.