ETV Bharat / state

“ஆண்ட்ராய்டு ஆப் மூலம் அரிசி வழங்கும் திட்டம்”- ராதாகிருஷ்ணன் தகவல்! - Radhakrishnan On Civil Supplier

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 16, 2024, 9:34 PM IST

Updated : Aug 16, 2024, 9:55 PM IST

Radhakrishnan about Civil Supply: ரேஷன் பொருட்களை எடுத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

உணவு பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்
உணவு பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் (Credits- ETV Bharat Tamil Nadu)

விழுப்புரம்: விழுப்புரம் நகரின் மையப் பகுதியான நான்கு முனை சந்திப்பு அருகே அமைந்துள்ள டிஎன்சிஎஸ்சி குடோன், நியாய விலைக்கடை மற்றும் மத்திய கூட்டுறவு வங்கியில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

ராதாகிருஷ்ணன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

இந்த ஆய்வினை‌த் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “அனைத்து பகுதிக்கான ரேஷன் கடைகளும் ஒரு கிலோ மீட்டர் இடைவெளிக்குள் இருக்க வேண்டுமென தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 1,854 ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு பாமாயில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்குவதில் தட்டுப்பாடு இருந்துள்ளது. இந்த மாதத்தில் இருந்து அதுவும் சீராக தரப்பட்டுள்ளது. துவரம் பருப்பு அடுத்த மாதத்திற்குள் மீண்டும் அனைவருக்கும் வழங்கப்படும். விவசாயக் கடன் கடந்த ஆண்டு மட்டும் ரூ.650 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் அரிசி, சர்க்கரையில் தட்டுப்பாடு இல்லை. கூடுதலாகவே இருப்பு வைத்துள்ளோம். பாமாயில் குறித்து பார்த்தால், 2.9 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் வாங்கப்பட்டுள்ளது. தட்டுப்பாடு இல்லாமல் தற்போது பாமாயில் உள்ளது. 40 ஆயிரம் மெட்ரிக் டன் பருப்பு வாங்குவதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இடைத்தேர்தல் நேரத்தில் பருப்பு வழங்கியதால், சில சிரமம் ஏற்பட்டது. அடுத்த மாதத்திற்குள் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பருப்பு வழங்கப்படும். ஆண்ட்ராய்டு ஆப் மூலமாக அரிசி வழங்க ஒன்றிய அரசு, மாநில அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிதாக 2.81 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்னும் 85 மெட்ரிக் டன் தான் கோதுமை இருப்பு உள்ளது. அதனால் வருகிற ஆகஸ்ட் 21ஆம் தேதி உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் சக்கரபாணி மத்திய அமைச்சரைச் சந்தித்து கோதுமை தட்டுபாடு குறித்து பேசி, கூடுதல் கோதுமை வழங்க வலியுறுத்த உள்ளார். ரேஷன் பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் வாங்கியது போன்று பொருட்களை எடுத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: “எங்களுக்கு தெரியாமல் அன்புமணிக்கு மட்டும் எப்படி தெரிந்தது?”.. அமைச்சர் சிவசங்கர் கேள்வி!

விழுப்புரம்: விழுப்புரம் நகரின் மையப் பகுதியான நான்கு முனை சந்திப்பு அருகே அமைந்துள்ள டிஎன்சிஎஸ்சி குடோன், நியாய விலைக்கடை மற்றும் மத்திய கூட்டுறவு வங்கியில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

ராதாகிருஷ்ணன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

இந்த ஆய்வினை‌த் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “அனைத்து பகுதிக்கான ரேஷன் கடைகளும் ஒரு கிலோ மீட்டர் இடைவெளிக்குள் இருக்க வேண்டுமென தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 1,854 ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு பாமாயில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்குவதில் தட்டுப்பாடு இருந்துள்ளது. இந்த மாதத்தில் இருந்து அதுவும் சீராக தரப்பட்டுள்ளது. துவரம் பருப்பு அடுத்த மாதத்திற்குள் மீண்டும் அனைவருக்கும் வழங்கப்படும். விவசாயக் கடன் கடந்த ஆண்டு மட்டும் ரூ.650 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் அரிசி, சர்க்கரையில் தட்டுப்பாடு இல்லை. கூடுதலாகவே இருப்பு வைத்துள்ளோம். பாமாயில் குறித்து பார்த்தால், 2.9 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் வாங்கப்பட்டுள்ளது. தட்டுப்பாடு இல்லாமல் தற்போது பாமாயில் உள்ளது. 40 ஆயிரம் மெட்ரிக் டன் பருப்பு வாங்குவதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இடைத்தேர்தல் நேரத்தில் பருப்பு வழங்கியதால், சில சிரமம் ஏற்பட்டது. அடுத்த மாதத்திற்குள் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பருப்பு வழங்கப்படும். ஆண்ட்ராய்டு ஆப் மூலமாக அரிசி வழங்க ஒன்றிய அரசு, மாநில அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிதாக 2.81 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்னும் 85 மெட்ரிக் டன் தான் கோதுமை இருப்பு உள்ளது. அதனால் வருகிற ஆகஸ்ட் 21ஆம் தேதி உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் சக்கரபாணி மத்திய அமைச்சரைச் சந்தித்து கோதுமை தட்டுபாடு குறித்து பேசி, கூடுதல் கோதுமை வழங்க வலியுறுத்த உள்ளார். ரேஷன் பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் வாங்கியது போன்று பொருட்களை எடுத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: “எங்களுக்கு தெரியாமல் அன்புமணிக்கு மட்டும் எப்படி தெரிந்தது?”.. அமைச்சர் சிவசங்கர் கேள்வி!

Last Updated : Aug 16, 2024, 9:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.