ETV Bharat / state

மாணவர் விடுதியை காலி செய்த திருநெல்வேலி தனியார் நீட் அகாடமி நிர்வாகம் - காரணம் என்ன?

தனியார் நீட் அகாடமியில், மாணவர்களை உரிமையாளர் அடித்ததாக எழுந்த சர்ச்சையில், மாணவர்கள் தங்கியிருந்த விடுதிகள் முறையாக உரிமம் பெறவில்லை என சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்ததால், அகாடமி நிர்வாகம் விடுதிகளை காலி செய்துள்ளது.

காலி செய்யப்பட்டுள்ள விடுதி அறைகள்
காலி செய்யப்பட்டுள்ள விடுதி அறைகள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 12 hours ago

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் நீட் அகாடமியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்கள் சிலரை அகாடமி உரிமையாளர் பிரம்பால் தாக்கியதாக கூறப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உரிமையாளர் மீது மேலப்பாளையம் போலீசார் சிறார் பாதுகாப்புச் சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன் தனியார் நீட் அகாடமிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். அதனைத்தொடர்ந்து மாணவிகள் தங்கி உள்ள விடுதியில் சமூக நலத்துறை அதிகாரிகள் குழுவினரும் நேரடி விசாரணை நடத்தினர். அப்போது விடுதிக்கு உரிய அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் தனியார் நீட் அகாடமி உரிமையாளர் கேரளாவுக்கு தப்பி சென்ற நிலையில், அவரைப் பிடிப்பதற்காக தனிப்படை கேரளாவில் முகாமிட்டுள்ளது. இந்த சூழலில் கட்டட உரிமையாளர் விடுதியை காலி செய்ய அகாடமி நிறுவனத்திற்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : "நீட் அகாடமியில் மாணவர்களை அடித்தது தவறு" - மனித உரிமைகள் ஆணையம் கூறுவது என்ன?

இதையடுத்து புதிய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த மாணவர் மற்றும் மாணவிகள் தங்கும் விடுதிகள் காலி செய்யப்பட்டுள்ளன. இரண்டு விடுதிகளிலும் தற்போது மாணவர்கள் இல்லை. மாணவர்களை தற்காலிகமாக தங்கள் வீடுகளிலிருந்து வந்து செல்லும்படி அகாடமி நிர்வாகம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், நேரில் வர முடியாத மாணவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் நீட் அகாடமியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்கள் சிலரை அகாடமி உரிமையாளர் பிரம்பால் தாக்கியதாக கூறப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உரிமையாளர் மீது மேலப்பாளையம் போலீசார் சிறார் பாதுகாப்புச் சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன் தனியார் நீட் அகாடமிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். அதனைத்தொடர்ந்து மாணவிகள் தங்கி உள்ள விடுதியில் சமூக நலத்துறை அதிகாரிகள் குழுவினரும் நேரடி விசாரணை நடத்தினர். அப்போது விடுதிக்கு உரிய அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் தனியார் நீட் அகாடமி உரிமையாளர் கேரளாவுக்கு தப்பி சென்ற நிலையில், அவரைப் பிடிப்பதற்காக தனிப்படை கேரளாவில் முகாமிட்டுள்ளது. இந்த சூழலில் கட்டட உரிமையாளர் விடுதியை காலி செய்ய அகாடமி நிறுவனத்திற்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : "நீட் அகாடமியில் மாணவர்களை அடித்தது தவறு" - மனித உரிமைகள் ஆணையம் கூறுவது என்ன?

இதையடுத்து புதிய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த மாணவர் மற்றும் மாணவிகள் தங்கும் விடுதிகள் காலி செய்யப்பட்டுள்ளன. இரண்டு விடுதிகளிலும் தற்போது மாணவர்கள் இல்லை. மாணவர்களை தற்காலிகமாக தங்கள் வீடுகளிலிருந்து வந்து செல்லும்படி அகாடமி நிர்வாகம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், நேரில் வர முடியாத மாணவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.