ETV Bharat / state

தூத்துக்குடியில் போலீசார் மீது மிளகாய் பொடி தப்பியோடிய கைதி.. கையில் கட்டுடன் கைது! - escaped prisoner was arrested

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 3:11 PM IST

escaped prisoner was arrested: தூத்துக்குடியில் நீதிமன்ற விசாரணைக்காக வழிக்காவலில் வந்தபோது காவல்துறையினர் மீது மிளகாய் பொடி தூவி தப்பிச் சென்ற விசாரணைக் கைதியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

ஐகோர்ட் மகாராஜா
ஐகோர்ட் மகாராஜா (Credits - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை மகன் ஐகோர்ட் மகாராஜா (30) என்பவர், விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் கைது செய்து பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர், கடந்த மார்ச் 5ஆம் தேதி தூத்துக்குடி பேரூரணி சிறையில் இருந்து நீதிமன்ற விசாரணைக்காக கைதி, விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் வந்த போது, மகாராஜா கைதி போலீசார் மீது மிளகாய் பொடி தூவி தப்பிச் சென்று தலைமறைவாக இருந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமணிய பால்சந்திரா மேற்பார்வையில், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) செந்தில் வேல்குமார் தலைமையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் பிரெட்ரிக் ராஜன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய தலைமைக் காவலர் மணிகண்டன், சாத்தான்குளம் காவல் நிலைய தலைமைக் காவலர் மணிகண்டன், ஏரல் காவல் நிலைய தலைமைக் காவலர் காசி, காடல்குடி காவல் நிலைய காவலர் பிரபுபாண்டியன், கடம்பூர் காவல் நிலைய காவலர் முருகன் மற்றும் வடபாகம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் வீரபெருமாள், தலைமைக் காவலர் சண்முகநாதன், முதல் நிலை காவலர் முத்தமிழ்ராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து மகாராஜாவை கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், ஐகோர்ட் மகாராஜாவை தூத்துக்குடி செல்வநாயகபுரம் பகுதியில் கைது செய்ய முயற்சி செய்த போது, போலீசாரை அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

பின்னர், போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, தூத்துக்குடி அம்பேத்கர் நகர் பகுதியில் கையில் கட்டுடன் நின்று கொண்டிருந்த மகாராஜாவைச் சுற்றிவளைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், அவர் போலீசாரை அரிவாளால் தாக்க முயன்று தப்பிச் செல்லும் போது, தூத்துக்குடியில் சாலைப்பணி நடைபெறும் பகுதியில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்ததில் இடது கையில் முறிவு ஏற்பட்டு, பின்னர் வைத்தியசாலையில் கட்டுபோட்டதாக தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அவரிடமிருந்து ஒரு அரிவாளையும் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரிடம் இருந்து தப்பித்து தலைமறைவாக இருந்த விசாரணைக் கைதியை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் பாராட்டினார்.

இதையும் படிங்க: வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு; அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு சிறை தண்டனை குறைப்பு! - rp paramasivam case

தூத்துக்குடி: தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை மகன் ஐகோர்ட் மகாராஜா (30) என்பவர், விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் கைது செய்து பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர், கடந்த மார்ச் 5ஆம் தேதி தூத்துக்குடி பேரூரணி சிறையில் இருந்து நீதிமன்ற விசாரணைக்காக கைதி, விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் வந்த போது, மகாராஜா கைதி போலீசார் மீது மிளகாய் பொடி தூவி தப்பிச் சென்று தலைமறைவாக இருந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமணிய பால்சந்திரா மேற்பார்வையில், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) செந்தில் வேல்குமார் தலைமையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் பிரெட்ரிக் ராஜன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய தலைமைக் காவலர் மணிகண்டன், சாத்தான்குளம் காவல் நிலைய தலைமைக் காவலர் மணிகண்டன், ஏரல் காவல் நிலைய தலைமைக் காவலர் காசி, காடல்குடி காவல் நிலைய காவலர் பிரபுபாண்டியன், கடம்பூர் காவல் நிலைய காவலர் முருகன் மற்றும் வடபாகம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் வீரபெருமாள், தலைமைக் காவலர் சண்முகநாதன், முதல் நிலை காவலர் முத்தமிழ்ராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து மகாராஜாவை கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், ஐகோர்ட் மகாராஜாவை தூத்துக்குடி செல்வநாயகபுரம் பகுதியில் கைது செய்ய முயற்சி செய்த போது, போலீசாரை அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

பின்னர், போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, தூத்துக்குடி அம்பேத்கர் நகர் பகுதியில் கையில் கட்டுடன் நின்று கொண்டிருந்த மகாராஜாவைச் சுற்றிவளைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், அவர் போலீசாரை அரிவாளால் தாக்க முயன்று தப்பிச் செல்லும் போது, தூத்துக்குடியில் சாலைப்பணி நடைபெறும் பகுதியில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்ததில் இடது கையில் முறிவு ஏற்பட்டு, பின்னர் வைத்தியசாலையில் கட்டுபோட்டதாக தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அவரிடமிருந்து ஒரு அரிவாளையும் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரிடம் இருந்து தப்பித்து தலைமறைவாக இருந்த விசாரணைக் கைதியை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் பாராட்டினார்.

இதையும் படிங்க: வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு; அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு சிறை தண்டனை குறைப்பு! - rp paramasivam case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.