ETV Bharat / state

அழகு நிலையத்தில் பாலியல் தொழில்; சுற்றி வளைத்த வில்லிவாக்கம் போலீஸ்..! - CHENNAI SPA Sexual Work arrest

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 30, 2024, 3:40 PM IST

Sexual Work at spa in Villivakkam: சென்னை வில்லிவாக்கம் பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் பாலியல் தொழில் நடத்திய நபரை கைது செய்த போலீசார் பெண் ஒருவரை மீட்டனர்.

கைது செய்யப்பட்ட மோகன்
கைது செய்யப்பட்ட மோகன் (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, பணம் சம்பாதிக்கும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்து குற்றச் செயல்களில் ஈடுபடும் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவரும் தரகர்களை கைது செய்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் துறையினர் சென்னை, வில்லிவாக்கம் கிழக்கு மாட வீதியில் உள்ள ஒரு அழகு நிலையத்தை கண்காணித்தபோது, அங்கு பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.

அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் அழகு நிலையத்தில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்திய மோகன் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்த இருந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டார்.

விசாரணையில் கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வந்த இந்த அழகு நிலையத்தில் பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்தியது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட மோகன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட பெண் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளியான அழகு நிலையத்தின் உரிமையாளரை பிடிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 'என்ன கொன்னது இவன்தான்'.. கனவில் வந்த ஆத்மா? நண்பன் மரணத்துக்கு 3 ஆண்டுகள் கழித்து பழிக்குப்பழி!

சென்னை: சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, பணம் சம்பாதிக்கும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்து குற்றச் செயல்களில் ஈடுபடும் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவரும் தரகர்களை கைது செய்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் துறையினர் சென்னை, வில்லிவாக்கம் கிழக்கு மாட வீதியில் உள்ள ஒரு அழகு நிலையத்தை கண்காணித்தபோது, அங்கு பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.

அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் அழகு நிலையத்தில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்திய மோகன் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்த இருந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டார்.

விசாரணையில் கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வந்த இந்த அழகு நிலையத்தில் பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்தியது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட மோகன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட பெண் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளியான அழகு நிலையத்தின் உரிமையாளரை பிடிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 'என்ன கொன்னது இவன்தான்'.. கனவில் வந்த ஆத்மா? நண்பன் மரணத்துக்கு 3 ஆண்டுகள் கழித்து பழிக்குப்பழி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.