ETV Bharat / state

உதகை - குன்னூர் மலை ரயில் சேவை மேலும் மூன்று நாட்களுக்கு ரத்து! - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு! - OOTY HILL RAIL SERVICE

கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவால் ரயில் பாதைகளை சீரமைக்கும் பணிகளின் பொருட்டு உதகை - குன்னூர் மலை ரயில் சேவைக்கு ஏற்கனவே ரத்து அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் மூன்று நாட்களுக்கு ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

குன்னூர் ரயில் நிலையத்தில் ஊட்டி மலை ரயில்
குன்னூர் ரயில் நிலையத்தில் ஊட்டி மலை ரயில் (Credits- ETV Bharat Tamil nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2024, 10:54 PM IST

நீலகிரி : கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவால் ரயில் பாதைகளை சீரமைக்கும் பணிகளின் பொருட்டு உதகை - குன்னூர் மலை ரயில் சேவைக்கு டிச 13, 14 ஆகிய இரு நாட்கள் ரத்து அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த ரத்தை மேலும் 3 நாட்கள் அதாவது டிச 15, 16,17 தேதிகளிலும், நீட்டித்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், உதகை - குன்னூர் இடையிலான மலை ரயில் பாதையில் கேத்தி, அருவங்காடு, வெலிங்டன் உள்ளிட்ட பல இடங்களில் மரங்கள் விழுந்து ரயில் பாதை சேதமடைந்தது. இதனால், ரயில் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது.

மேலும், ரயில்வே ஊழியர்கள் சீரமைப்பு பணியை மேற்கொள்வதால் ரயில்வே நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு நாட்கள் உதகை - குன்னூர் இடையிலான ரயில் போக்குவரத்தை ரத்து செய்திருந்தது.

ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் (Credits- ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், தற்போது குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் 60 அடி பாலம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள், ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால் மேலும் 3 நாட்கள் (டிசம்பர் 15, 16, 17 தேதிகள் ) ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் பணிகள் விரைவில் நிறைவடையும் எனவும் ரயில்வே நிர்வாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இதையும் படிங்க: தாய்லாந்துக்கு சுற்றுலா செல்ல இருந்த பயணி மாரடைப்பால் மரணம்.. சென்னை ஏர்போர்ட்டில் சோகம்..! - MAN DIED AT CHENNAI AIRPORT

இதன் காரணமாக உதகைக்கு சுற்றுலா வந்த பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால், ரயில் பயணம் மேற்கொள்ள முடியாமல் திரும்பி சென்றனர்.

நீலகிரி : கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவால் ரயில் பாதைகளை சீரமைக்கும் பணிகளின் பொருட்டு உதகை - குன்னூர் மலை ரயில் சேவைக்கு டிச 13, 14 ஆகிய இரு நாட்கள் ரத்து அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த ரத்தை மேலும் 3 நாட்கள் அதாவது டிச 15, 16,17 தேதிகளிலும், நீட்டித்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், உதகை - குன்னூர் இடையிலான மலை ரயில் பாதையில் கேத்தி, அருவங்காடு, வெலிங்டன் உள்ளிட்ட பல இடங்களில் மரங்கள் விழுந்து ரயில் பாதை சேதமடைந்தது. இதனால், ரயில் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது.

மேலும், ரயில்வே ஊழியர்கள் சீரமைப்பு பணியை மேற்கொள்வதால் ரயில்வே நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு நாட்கள் உதகை - குன்னூர் இடையிலான ரயில் போக்குவரத்தை ரத்து செய்திருந்தது.

ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் (Credits- ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், தற்போது குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் 60 அடி பாலம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள், ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால் மேலும் 3 நாட்கள் (டிசம்பர் 15, 16, 17 தேதிகள் ) ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் பணிகள் விரைவில் நிறைவடையும் எனவும் ரயில்வே நிர்வாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இதையும் படிங்க: தாய்லாந்துக்கு சுற்றுலா செல்ல இருந்த பயணி மாரடைப்பால் மரணம்.. சென்னை ஏர்போர்ட்டில் சோகம்..! - MAN DIED AT CHENNAI AIRPORT

இதன் காரணமாக உதகைக்கு சுற்றுலா வந்த பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால், ரயில் பயணம் மேற்கொள்ள முடியாமல் திரும்பி சென்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.