ETV Bharat / state

"போதைப் பொருள்கள் மூலமாக மக்களை அழிக்க நினைப்பவர்கள் அழிந்துவிடுவார்கள்" - நிர்மலா சீதாராமன் ஆவேசம் - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 12, 2024, 10:44 PM IST

Updated : Apr 13, 2024, 8:57 AM IST

Nirmala Sitharaman Campaign: தில்லை நடராஜர் ஆலயத்தின் அருகில் இருந்து சொல்கிறேன். போதைப் பொருள்கள் மூலமாக மக்களை அழிக்க நினைப்பவர்கள் அழிந்துவிடுவார்கள் என்று சிதம்பரத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Nirmala Sitharaman Campaign in Chidambaram
Nirmala Sitharaman Campaign in Chidambaram

கடலூர்: சிதம்பரம் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக கார்த்தியாயினி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சிதம்பரம் காந்தி சிலை அருகில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது பேசிய அவர், "மக்களுக்கு முன்னால் வாக்குறுதி கொடுப்பதற்குத் தைரியம் வேண்டும். பிரதமர் மோடி 10 ஆண்டு பிரதமராக இருந்து பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார். அதுபோல் குஜராத் மாநிலத்திலும் முதலமைச்சராக இருந்து எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். பெண் வேட்பாளருக்குப் பிரச்சாரம் செய்வது எனக்குக் கிடைத்த பாக்கியம். நமது ஆதரவைப் படித்த பட்டதாரி பெண் வேட்பாளருக்குக் கொடுக்க வேண்டும்.

சிதம்பரத்திற்கும் சரி தமிழ்நாட்டிற்கும் சரி 10 ஆண்டுகளாகப் பல திட்டங்களைக் கொண்டு வந்தார் மோடி. அரிசி இல்லை என்ற கவலைக்கு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலம் 80 கோடி மக்களுக்குத் தனிநபர் ஒருவருக்கு தலா 5 கிலோ அரிசி வீதம் 2020 முதல் இலவசமாக அரிசி, கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள், பெண்கள், ஏழைகள், இளைஞர்கள் ஆகியோரின் முன்னேற்றத்திற்காக மோடி பாடுபட்டார். நெல், எள், சோளம், வேர்க்கடலை ஆகியவற்றிற்கு அதிக விலை வழங்கப்பட்டு உள்ளது. 2023 வரை 1 கோடியே 22 லட்சம் விவசாயிகள் நெல் கொள்முதல் செய்யக் கொடுத்திருக்கிறார்கள். 1 லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு நேரடியாகச் சென்று இருக்கிறது.

திமுக, காங்கிரசின் தோழமைக் கட்சியாக 10 வருடம் ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு நல்லது எதையும் செய்யவில்லை. அவர்கள் ஊழலுக்குப் பெயர் போனவர்கள் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல், வங்கிக் கடன் வழங்கியதில் ஊழல் என 10 வருடத்தை ஓட்டினார்கள்.

அந்த 10 ஆண்டு கால ஆட்சியால் நாடு நிலை குலைந்து போய்விட்டது. கீழிருந்து ஐந்தாவது நிலைக்குச் சென்ற இந்தியாவை, பிரதமர் மோடி இந்த 10 ஆண்டுகளில் காப்பாற்றி இருக்கிறார். இன்றைக்கு மேலிருந்து ஐந்தாவது இடத்திற்கு வந்து விட்டது. அடுத்த 2 வருடங்களில் மூன்றாவது இடத்திற்குச் செல்லும் என்றும் வாக்குறுதி கொடுத்தார்.

மக்கள் மீது வரியைச் சுமத்தாமல் ஊழலை எதிர்த்து ஆளுமையாக இருந்து ஆட்சி செய்தார் மோடி. தொழில்நுட்பம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. உலக அளவில் 100 நிறுவனம் இருந்தால் அதில் 50 நிறுவனங்கள் இந்திய நாட்டில் இருக்கின்றன.

ஆனால், இந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வரவில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதை விட்டு விட்டு, மோடி திரும்பி போ என்பதில் தீவிரமாக இருந்தனர். தமிழ்நாட்டில் பாதுகாப்பு எக்ஸ்போ சென்னையில் நடத்திய பெருமை மோடியைச் சேரும்.

அதன் மூலம் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் உற்பத்தி பொருள்களைச் செய்து விற்பனை செய்கிறார்கள். இப்படிப்பட்ட திட்டத்தைக் கொண்டு வந்தபோது கருப்பு கொடியும், கருப்பு பலூனையும் காண்பித்துத் திரும்பி போ என்று கூறினார்கள்.

உலக அளவில் இளைஞர்கள் செய்யக்கூடிய வேலையை நமது இளைஞர்கள் சென்னையில் செய்யும் அளவிற்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மக்கள் பணிகளைச் செய்ய நேரமில்லை. ஆனால் போதைப் பொருள்களை இறக்குமதி செய்யும் அளவிற்கு நிலைமை இருக்கிறது.

இப்படி இளைஞர்களை ஏமாற்றி போதையில் வசப்படுத்துகிறது. திமுக ஆதரவோடு இவை செய்யப்படுகிறது. இந்தத் தில்லை நடராஜர் ஆலயத்தின் அருகில் இருந்து சொல்கிறேன். போதைப் பொருள்கள் மூலமாக மக்களை அழிக்க நினைப்பவர்கள் அழிந்துவிடுவார்கள். இந்த தேர்தலில் யாரை எங்கே வைக்கவேண்டும் என்று யோசித்து வையுங்கள்.

வாய்ச்சவடாலும், அகம்பாவமும் உள்ள சிலர் அண்ணாமலையை வசை பாடுகின்றனர். இவர்கள் போதைப் பொருள் மூலம் வரும் பணத்தை வைத்து வாழ்கிறார்கள். அண்ணாமலை வந்து இரண்டு வருடம்தானே ஆகிறது. அதற்குள் ஏன் பயப்படுகிறீர்கள்? மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் எந்த ஊழலும் இல்லை. மத்திய அரசு மீது ஒரே ஒரு ஊழல் குற்றச்சாட்டாவது உள்ளதா? அதனால் இந்த ஆட்சி தொடர ஆதரவு அளியுங்கள்" என பேசினார்.

இதையும் படிங்க: "அண்ணாமலை என்ன பெரிய மந்திரவாதியா?" - திடீரென பாய்ந்த மாஜி அமைச்சர் ஓ.எஸ் மணியன்!

கடலூர்: சிதம்பரம் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக கார்த்தியாயினி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சிதம்பரம் காந்தி சிலை அருகில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது பேசிய அவர், "மக்களுக்கு முன்னால் வாக்குறுதி கொடுப்பதற்குத் தைரியம் வேண்டும். பிரதமர் மோடி 10 ஆண்டு பிரதமராக இருந்து பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார். அதுபோல் குஜராத் மாநிலத்திலும் முதலமைச்சராக இருந்து எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். பெண் வேட்பாளருக்குப் பிரச்சாரம் செய்வது எனக்குக் கிடைத்த பாக்கியம். நமது ஆதரவைப் படித்த பட்டதாரி பெண் வேட்பாளருக்குக் கொடுக்க வேண்டும்.

சிதம்பரத்திற்கும் சரி தமிழ்நாட்டிற்கும் சரி 10 ஆண்டுகளாகப் பல திட்டங்களைக் கொண்டு வந்தார் மோடி. அரிசி இல்லை என்ற கவலைக்கு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலம் 80 கோடி மக்களுக்குத் தனிநபர் ஒருவருக்கு தலா 5 கிலோ அரிசி வீதம் 2020 முதல் இலவசமாக அரிசி, கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள், பெண்கள், ஏழைகள், இளைஞர்கள் ஆகியோரின் முன்னேற்றத்திற்காக மோடி பாடுபட்டார். நெல், எள், சோளம், வேர்க்கடலை ஆகியவற்றிற்கு அதிக விலை வழங்கப்பட்டு உள்ளது. 2023 வரை 1 கோடியே 22 லட்சம் விவசாயிகள் நெல் கொள்முதல் செய்யக் கொடுத்திருக்கிறார்கள். 1 லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு நேரடியாகச் சென்று இருக்கிறது.

திமுக, காங்கிரசின் தோழமைக் கட்சியாக 10 வருடம் ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு நல்லது எதையும் செய்யவில்லை. அவர்கள் ஊழலுக்குப் பெயர் போனவர்கள் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல், வங்கிக் கடன் வழங்கியதில் ஊழல் என 10 வருடத்தை ஓட்டினார்கள்.

அந்த 10 ஆண்டு கால ஆட்சியால் நாடு நிலை குலைந்து போய்விட்டது. கீழிருந்து ஐந்தாவது நிலைக்குச் சென்ற இந்தியாவை, பிரதமர் மோடி இந்த 10 ஆண்டுகளில் காப்பாற்றி இருக்கிறார். இன்றைக்கு மேலிருந்து ஐந்தாவது இடத்திற்கு வந்து விட்டது. அடுத்த 2 வருடங்களில் மூன்றாவது இடத்திற்குச் செல்லும் என்றும் வாக்குறுதி கொடுத்தார்.

மக்கள் மீது வரியைச் சுமத்தாமல் ஊழலை எதிர்த்து ஆளுமையாக இருந்து ஆட்சி செய்தார் மோடி. தொழில்நுட்பம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. உலக அளவில் 100 நிறுவனம் இருந்தால் அதில் 50 நிறுவனங்கள் இந்திய நாட்டில் இருக்கின்றன.

ஆனால், இந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வரவில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதை விட்டு விட்டு, மோடி திரும்பி போ என்பதில் தீவிரமாக இருந்தனர். தமிழ்நாட்டில் பாதுகாப்பு எக்ஸ்போ சென்னையில் நடத்திய பெருமை மோடியைச் சேரும்.

அதன் மூலம் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் உற்பத்தி பொருள்களைச் செய்து விற்பனை செய்கிறார்கள். இப்படிப்பட்ட திட்டத்தைக் கொண்டு வந்தபோது கருப்பு கொடியும், கருப்பு பலூனையும் காண்பித்துத் திரும்பி போ என்று கூறினார்கள்.

உலக அளவில் இளைஞர்கள் செய்யக்கூடிய வேலையை நமது இளைஞர்கள் சென்னையில் செய்யும் அளவிற்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மக்கள் பணிகளைச் செய்ய நேரமில்லை. ஆனால் போதைப் பொருள்களை இறக்குமதி செய்யும் அளவிற்கு நிலைமை இருக்கிறது.

இப்படி இளைஞர்களை ஏமாற்றி போதையில் வசப்படுத்துகிறது. திமுக ஆதரவோடு இவை செய்யப்படுகிறது. இந்தத் தில்லை நடராஜர் ஆலயத்தின் அருகில் இருந்து சொல்கிறேன். போதைப் பொருள்கள் மூலமாக மக்களை அழிக்க நினைப்பவர்கள் அழிந்துவிடுவார்கள். இந்த தேர்தலில் யாரை எங்கே வைக்கவேண்டும் என்று யோசித்து வையுங்கள்.

வாய்ச்சவடாலும், அகம்பாவமும் உள்ள சிலர் அண்ணாமலையை வசை பாடுகின்றனர். இவர்கள் போதைப் பொருள் மூலம் வரும் பணத்தை வைத்து வாழ்கிறார்கள். அண்ணாமலை வந்து இரண்டு வருடம்தானே ஆகிறது. அதற்குள் ஏன் பயப்படுகிறீர்கள்? மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் எந்த ஊழலும் இல்லை. மத்திய அரசு மீது ஒரே ஒரு ஊழல் குற்றச்சாட்டாவது உள்ளதா? அதனால் இந்த ஆட்சி தொடர ஆதரவு அளியுங்கள்" என பேசினார்.

இதையும் படிங்க: "அண்ணாமலை என்ன பெரிய மந்திரவாதியா?" - திடீரென பாய்ந்த மாஜி அமைச்சர் ஓ.எஸ் மணியன்!

Last Updated : Apr 13, 2024, 8:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.