ETV Bharat / state

“டெல்லியில் எல்லைச்சாமியாக இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றுகிறார் கருணாநிதி” - ஆ.ராசா பேச்சு! - Nilgiri MP A RAJA

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 28, 2024, 9:23 PM IST

A.Raja: இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை காப்பாற்றியவர் கருணாநிதி என்று திமுக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

ஆ.ராசா
ஆ.ராசா (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தி.நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி சீதை பதிப்பகத்தின் 32 நூல்கள் அறிமுக விழா நடைபெற்றது. இதில் திமுக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கலந்து கொண்டு நூலினை அறிமுகம் செய்து வெளியீட தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா கோவி.செழியன் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா (Credits - ETV Bharat Tamil Nadu)

தொடர்ந்து, விழா மேடையில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, "கருணாநிதியே ஒரு தமிழ், அவருக்கு தொண்டு செய்த உங்களுக்கு சாவில்லை, இன்னும் நூறாண்டுகள் கழித்து ஒரு மாணவன் கருணாநிதியை ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்த புத்தகத்தை நாடும் பொழுது புத்தகம் சிறிதாக இருக்கலாம். ஆனால், அதில் இருக்கக்கூடிய கருத்துக்கள் அதிகம்.

எதுவரை ஏற்றத்தாழ்வு இருக்கிறதோ அதுவரை திராவிடம் இருக்கும். எதிர்க்கட்சிகள் பிரச்னை செய்தால் பெரியார் வழி, பிரச்னை இல்லை என்றால் அண்ணா வழி. ஆட்சியில் இருந்தால் அண்ணா வழி, ஆட்சியில் இல்லை என்றால் பெரியார் வழி என்று இருந்தவர் கருணாநிதி.

பாஜக இன்றைக்கு Indian evidence act பெயரையே மாற்றிவிட்டார்கள், இந்தியாவை பாரத் என்கிறார்கள், அனைத்தின் பெயரையும் மாற்றிவிட்டார்கள். அவர்களால் மாற்ற முடியாத ஒரு இடம் தமிழ்நாடு, தமிழ், தமிழ்நாடு முதலமைச்சருக்கு பின்னால் இருக்கும் தொண்டர்கள். அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள இறையாண்மையை, மதச்சார்பின்மையை, ஜனநாயகத்தைக் காப்பாற்றியவர்.

கருணாநிதி இறந்துவிட்டார், இத்தனை சிலைகளை வைத்துள்ளோம். டெல்லியில் சிலை வைக்கவில்லை. ஆனால், டெல்லியில் எல்லைச்சாமியாக இருந்து கலைஞர் தமிழ்நாட்டை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். அந்த எல்லைச்சாமி அங்கு இருக்கும் வரை தமிழனை, தமிழ்நாட்டை ஒருவனும் ஒன்றும் செய்து விட முடியாது" என்றார்.

முன்னதாக நிகழ்ச்சியில், மருத்துவர் சஃபி.மீ. சுலைமான் எழுதிய கலைஞரின் பேனா பேசுகிறேன், சு.செல்வராஜ் எழுதிய தொல்லியல் நோக்கில் கலைஞரின் பயணம், முனைவர் பா. சரவணன் எழுதிய கலைஞர் மாபெரும் அரசியல்வாதி, நீரை மகேந்திரன் எழுதிய நெஞ்சுக்கு நீதி 100 உள்ளிட்ட 32 நூல்கள் அறிமுகம் செய்து வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தென்மேற்கு மாவட்டச் செயலாளரும், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மயிலை த.வேலு, தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.கருணாநிதி, திராவிட இயக்க தமிழர் பேரவை துணை பொதுச் செயலாளர் உமா மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: கொலை நடக்காத நாளே தமிழகத்தில் கிடையாது.. ஈபிஎஸ் கடும் விமர்சனம்!

சென்னை: தி.நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி சீதை பதிப்பகத்தின் 32 நூல்கள் அறிமுக விழா நடைபெற்றது. இதில் திமுக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கலந்து கொண்டு நூலினை அறிமுகம் செய்து வெளியீட தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா கோவி.செழியன் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா (Credits - ETV Bharat Tamil Nadu)

தொடர்ந்து, விழா மேடையில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, "கருணாநிதியே ஒரு தமிழ், அவருக்கு தொண்டு செய்த உங்களுக்கு சாவில்லை, இன்னும் நூறாண்டுகள் கழித்து ஒரு மாணவன் கருணாநிதியை ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்த புத்தகத்தை நாடும் பொழுது புத்தகம் சிறிதாக இருக்கலாம். ஆனால், அதில் இருக்கக்கூடிய கருத்துக்கள் அதிகம்.

எதுவரை ஏற்றத்தாழ்வு இருக்கிறதோ அதுவரை திராவிடம் இருக்கும். எதிர்க்கட்சிகள் பிரச்னை செய்தால் பெரியார் வழி, பிரச்னை இல்லை என்றால் அண்ணா வழி. ஆட்சியில் இருந்தால் அண்ணா வழி, ஆட்சியில் இல்லை என்றால் பெரியார் வழி என்று இருந்தவர் கருணாநிதி.

பாஜக இன்றைக்கு Indian evidence act பெயரையே மாற்றிவிட்டார்கள், இந்தியாவை பாரத் என்கிறார்கள், அனைத்தின் பெயரையும் மாற்றிவிட்டார்கள். அவர்களால் மாற்ற முடியாத ஒரு இடம் தமிழ்நாடு, தமிழ், தமிழ்நாடு முதலமைச்சருக்கு பின்னால் இருக்கும் தொண்டர்கள். அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள இறையாண்மையை, மதச்சார்பின்மையை, ஜனநாயகத்தைக் காப்பாற்றியவர்.

கருணாநிதி இறந்துவிட்டார், இத்தனை சிலைகளை வைத்துள்ளோம். டெல்லியில் சிலை வைக்கவில்லை. ஆனால், டெல்லியில் எல்லைச்சாமியாக இருந்து கலைஞர் தமிழ்நாட்டை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். அந்த எல்லைச்சாமி அங்கு இருக்கும் வரை தமிழனை, தமிழ்நாட்டை ஒருவனும் ஒன்றும் செய்து விட முடியாது" என்றார்.

முன்னதாக நிகழ்ச்சியில், மருத்துவர் சஃபி.மீ. சுலைமான் எழுதிய கலைஞரின் பேனா பேசுகிறேன், சு.செல்வராஜ் எழுதிய தொல்லியல் நோக்கில் கலைஞரின் பயணம், முனைவர் பா. சரவணன் எழுதிய கலைஞர் மாபெரும் அரசியல்வாதி, நீரை மகேந்திரன் எழுதிய நெஞ்சுக்கு நீதி 100 உள்ளிட்ட 32 நூல்கள் அறிமுகம் செய்து வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தென்மேற்கு மாவட்டச் செயலாளரும், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மயிலை த.வேலு, தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.கருணாநிதி, திராவிட இயக்க தமிழர் பேரவை துணை பொதுச் செயலாளர் உமா மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: கொலை நடக்காத நாளே தமிழகத்தில் கிடையாது.. ஈபிஎஸ் கடும் விமர்சனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.