ETV Bharat / state

ஈரோட்டில் தந்தை - மகன் வீட்டில் என்ஐஏ சோதனை.. சிக்கிய முக்கிய ஆவணங்கள்! - NIA Raid in erode

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 30, 2024, 3:54 PM IST

NIA Raid in erode: தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், ஈரோட்டில் தந்தை, மகன் என இருவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர்.

என்ஐஏ சோதனை
என்ஐஏ சோதனை (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

ஈரோடு: சென்னை, திருச்சி, கும்பகோணம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதலே சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட இயக்கமான ‘ஹட் ஹிஸ்புத் தஹ்ரீர்’ என்ற இயக்கத்திற்கு இளைஞர்களை திரட்டுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில், அவர்கள் தொடர்புடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, ஈரோட்டில் இரண்டு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தற்போது, சோதனை நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டு செல்போன்கள், சிம்கார்டு மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

என்ஐஏ அதிகாரிகள் சோதனை: ஈரோட்டில், ஜேசிஸ் பள்ளி அருகே அசோக்நகர் ஆறாவது வீதியைச் சேர்ந்த சர்புதீன் என்பவரின் வீட்டிலும், ஈரோடு பெரியார் நகரில் சர்புதீனின் மகன் முகமது இசாக் என்பவரின் வீட்டிலும் கேரளா பதிவு எண் கொண்ட வாகனத்தில் வந்த 10-க்கும் மேற்பட்ட என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை சோதனை மேற்கொண்டனர்.

தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு? இவர்கள் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு இளைஞர்களை மூளைச்சலவை செய்து இயக்கத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாகவும், இவர்களது வீடுகளில் தடை செய்யப்பட்ட இயக்கம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் உள்ளதா என்பதை கண்டறிய சோதனை நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆவணங்கள் பறிமுதல்: இந்நிலையில், இந்த சோதனையானது தற்போது நிறைவடைந்துள்ளது. காலை முதல் நடைபெற்ற சோதனையில் இரண்டு செல்போன், சிம்கார்டுகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், சர்புதீன் மற்றும் முகமது இசாக் ஆகிய இருவரும், வருகிற 2 ஆம் தேதியும், சர்புதீன் வரும் 4ஆம் தேதி சென்னையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இவ்வாறு என்ஐஏ சோதனை நடந்த இரு இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்புடன் தொடர்பு? தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்ஐஏ சோதனை

ஈரோடு: சென்னை, திருச்சி, கும்பகோணம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதலே சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட இயக்கமான ‘ஹட் ஹிஸ்புத் தஹ்ரீர்’ என்ற இயக்கத்திற்கு இளைஞர்களை திரட்டுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில், அவர்கள் தொடர்புடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, ஈரோட்டில் இரண்டு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தற்போது, சோதனை நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டு செல்போன்கள், சிம்கார்டு மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

என்ஐஏ அதிகாரிகள் சோதனை: ஈரோட்டில், ஜேசிஸ் பள்ளி அருகே அசோக்நகர் ஆறாவது வீதியைச் சேர்ந்த சர்புதீன் என்பவரின் வீட்டிலும், ஈரோடு பெரியார் நகரில் சர்புதீனின் மகன் முகமது இசாக் என்பவரின் வீட்டிலும் கேரளா பதிவு எண் கொண்ட வாகனத்தில் வந்த 10-க்கும் மேற்பட்ட என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை சோதனை மேற்கொண்டனர்.

தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு? இவர்கள் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு இளைஞர்களை மூளைச்சலவை செய்து இயக்கத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாகவும், இவர்களது வீடுகளில் தடை செய்யப்பட்ட இயக்கம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் உள்ளதா என்பதை கண்டறிய சோதனை நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆவணங்கள் பறிமுதல்: இந்நிலையில், இந்த சோதனையானது தற்போது நிறைவடைந்துள்ளது. காலை முதல் நடைபெற்ற சோதனையில் இரண்டு செல்போன், சிம்கார்டுகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், சர்புதீன் மற்றும் முகமது இசாக் ஆகிய இருவரும், வருகிற 2 ஆம் தேதியும், சர்புதீன் வரும் 4ஆம் தேதி சென்னையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இவ்வாறு என்ஐஏ சோதனை நடந்த இரு இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்புடன் தொடர்பு? தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்ஐஏ சோதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.