ETV Bharat / state

கமகமக்கும் கறி விருந்து; குழந்தைகளை ஏலம் விட்ட நேர்த்திக்கடன்..களைகட்டிய புனித செபஸ்தியார் கோயில் திருவிழா! - Sebastian Church Festival

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 7, 2024, 12:42 PM IST

Muthalagupatti Sebastian Church Festival: முத்தழகுப்பட்டி புனித செபஸ்தியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு, 800 ஆடுகள் மற்றும் 2,000 கோழிகளைக் கொண்டு சமைக்கப்பட்டு, விடிய விடிய நடந்த அன்னதானம் மற்றும் நேர்த்திக்கடனை நிறைவேற்ற குழந்தைகளை ஏலம் விட்ட நூதன நிகழ்ச்சி ஆகியவை குறித்து காணலாம்.

புனித செபஸ்தியார் கோயில் திருவிழா
புனித செபஸ்தியார் கோயில் திருவிழா (Credits - ETV Bharat Tamil Nadu)

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் மலைக்கோட்டை பின்புறம் அமைந்துள்ள முத்தழகுப்பட்டி என்ற அழகிய கிராமம். இக்கிராமத்தில் சுமார் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் 4 நாட்கள் ஆலயப் பெருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ஆலயத்தின் திருவிழா, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில், கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து 3 நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மேலும், இந்த விழாவின் முக்கிய நிகழ்வான கறிவிருந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி கடைசி நாளான நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது.

புனித செபஸ்தியார் கோயில் திருவிழா (Credits - ETV Bharat Tamil Nadu)

அதற்காக ஊரில் உள்ள பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதை அடுத்து, புனித செபஸ்தியாருக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக ஆடுகள், கோழிகளை தாரை தப்பட்டை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்து, கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். அதில் மொத்தமாக 800 ஆடுகளும், 2 ஆயிரம் கோழிகளும் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வெங்காயம், தக்காளி, அரிசி, பச்சை மிளகாய், கத்தரிக்காய், மிளகாய்ப் பொடி உள்ளிட்ட சமையலுக்குத் தேவையான பல்வேறு பொருட்களையும் பொதுமக்கள் காணிக்கையாக வழங்கினர். அப்படி காணிக்கையாக வந்த பொருட்களை வைத்து அன்னதானம் செய்ய, அப்பகுதியில் உள்ள ஆண், பெண், குழந்தைகள் என பாகுபாடின்றி அனைவரும் சமைக்கும் பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக குழந்தை பள்ளிக்கு கூட செல்லாமல் விடுமுறை எடுத்து, அன்னதானம் சமைக்கும் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

கொட்டும் மழையிலும் அன்னதானம்: பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ஆடு மற்றும் கோழிகளை வெட்டி இளைஞர்கள் சமைக்க, அதற்கு தேவையான வெங்காயம், தக்காளி போன்ற காய்கறிகளை பெண்கள் நறுக்க என அன்னதானத்திற்காக ஒரு ஊரே அயராது உழைத்தது. பொதுமக்கள் காணிக்கையாக வழங்கப்பட்ட அரிசி சாதம் மற்றும் இறைச்சி மற்றும் காய்கறிகளைக் கொண்டு விருந்து கமகமவென தயாரானது.

கிட்டத்தட்ட 1 லட்சம் பேருக்கு காலை முதலே துவங்கி தயார் செய்யப்பட்ட அன்னதான உணவு, இரவு 7 மணியளவில் கோயில் அருகே அமைந்துள்ள திடலில் பொதுமக்களுக்கு தடபுடல் கறிவிருந்தாக பரிமாறப்பட்டது. இதற்கிடையே திண்டுக்கல்லில் லேசான சாரல் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்த நிலையிலும், மழையையும் பொருட்படுத்தாமல், அன்னதானத்தில் குடையுடன் அமர்ந்து, ஆர்வத்துடன் உணவருந்திச் சென்றனர்.

குழந்தையை ஏலம் விடும் நூதன நேர்த்திக்கடன்: முன்னதாக, கோயில் வளாகத்தில் பொதுமக்கள் நேர்த்திக்கடனாக தங்களுடைய குழந்தைகளை ஏலத்தில் விடும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், ஒரு பச்சிழங்குழந்தை ரூ.510-க்கும், ஒரு இளைஞர் ரூ.1,200-க்கும் ஏலம் எடுத்துச் சென்றனர்.

இதில் குழந்தை வரம் வேண்டும், உடல்நிலை சரியாக வேண்டும் உள்ளிட்டவற்றை வேண்டிக்கொண்டு செல்லுவோருக்கு, அந்த வேண்டுதல் நிறைவேறும் பட்சத்தில், அதற்காக நேர்த்திக்கடன் செலுத்தும் வண்ணம் குழந்தையை ஏலத்தில் விடுவதை முத்தழகுப்பட்டி கிராமத்தினர் வழக்கமாக வைத்துள்ளனர்.

புனித செபஸ்தியார் கோயில் திருவிழா (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: கருணாநிதி 6வது ஆண்டு நினைவு நாள்: முதலமைச்சர் தலைமையில் பேரணி.. மெரினா நினைவிடத்தில் மரியாதை!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் மலைக்கோட்டை பின்புறம் அமைந்துள்ள முத்தழகுப்பட்டி என்ற அழகிய கிராமம். இக்கிராமத்தில் சுமார் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் 4 நாட்கள் ஆலயப் பெருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ஆலயத்தின் திருவிழா, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில், கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து 3 நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மேலும், இந்த விழாவின் முக்கிய நிகழ்வான கறிவிருந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி கடைசி நாளான நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது.

புனித செபஸ்தியார் கோயில் திருவிழா (Credits - ETV Bharat Tamil Nadu)

அதற்காக ஊரில் உள்ள பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதை அடுத்து, புனித செபஸ்தியாருக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக ஆடுகள், கோழிகளை தாரை தப்பட்டை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்து, கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். அதில் மொத்தமாக 800 ஆடுகளும், 2 ஆயிரம் கோழிகளும் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வெங்காயம், தக்காளி, அரிசி, பச்சை மிளகாய், கத்தரிக்காய், மிளகாய்ப் பொடி உள்ளிட்ட சமையலுக்குத் தேவையான பல்வேறு பொருட்களையும் பொதுமக்கள் காணிக்கையாக வழங்கினர். அப்படி காணிக்கையாக வந்த பொருட்களை வைத்து அன்னதானம் செய்ய, அப்பகுதியில் உள்ள ஆண், பெண், குழந்தைகள் என பாகுபாடின்றி அனைவரும் சமைக்கும் பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக குழந்தை பள்ளிக்கு கூட செல்லாமல் விடுமுறை எடுத்து, அன்னதானம் சமைக்கும் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

கொட்டும் மழையிலும் அன்னதானம்: பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ஆடு மற்றும் கோழிகளை வெட்டி இளைஞர்கள் சமைக்க, அதற்கு தேவையான வெங்காயம், தக்காளி போன்ற காய்கறிகளை பெண்கள் நறுக்க என அன்னதானத்திற்காக ஒரு ஊரே அயராது உழைத்தது. பொதுமக்கள் காணிக்கையாக வழங்கப்பட்ட அரிசி சாதம் மற்றும் இறைச்சி மற்றும் காய்கறிகளைக் கொண்டு விருந்து கமகமவென தயாரானது.

கிட்டத்தட்ட 1 லட்சம் பேருக்கு காலை முதலே துவங்கி தயார் செய்யப்பட்ட அன்னதான உணவு, இரவு 7 மணியளவில் கோயில் அருகே அமைந்துள்ள திடலில் பொதுமக்களுக்கு தடபுடல் கறிவிருந்தாக பரிமாறப்பட்டது. இதற்கிடையே திண்டுக்கல்லில் லேசான சாரல் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்த நிலையிலும், மழையையும் பொருட்படுத்தாமல், அன்னதானத்தில் குடையுடன் அமர்ந்து, ஆர்வத்துடன் உணவருந்திச் சென்றனர்.

குழந்தையை ஏலம் விடும் நூதன நேர்த்திக்கடன்: முன்னதாக, கோயில் வளாகத்தில் பொதுமக்கள் நேர்த்திக்கடனாக தங்களுடைய குழந்தைகளை ஏலத்தில் விடும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், ஒரு பச்சிழங்குழந்தை ரூ.510-க்கும், ஒரு இளைஞர் ரூ.1,200-க்கும் ஏலம் எடுத்துச் சென்றனர்.

இதில் குழந்தை வரம் வேண்டும், உடல்நிலை சரியாக வேண்டும் உள்ளிட்டவற்றை வேண்டிக்கொண்டு செல்லுவோருக்கு, அந்த வேண்டுதல் நிறைவேறும் பட்சத்தில், அதற்காக நேர்த்திக்கடன் செலுத்தும் வண்ணம் குழந்தையை ஏலத்தில் விடுவதை முத்தழகுப்பட்டி கிராமத்தினர் வழக்கமாக வைத்துள்ளனர்.

புனித செபஸ்தியார் கோயில் திருவிழா (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: கருணாநிதி 6வது ஆண்டு நினைவு நாள்: முதலமைச்சர் தலைமையில் பேரணி.. மெரினா நினைவிடத்தில் மரியாதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.