ETV Bharat / state

தமிழகத்தில் சுங்கச்சாவடிகளை குறைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? - அமைச்சர் எ.வ.வேலு பதில்! - minister ev velu

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 25, 2024, 4:17 PM IST

Toll Plazas in Tamil Nadu: தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் நெடுஞ்சாலைதுறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

பாமக எம்எல்ஏ சிவக்குமார், அமைச்சர் எ.வ. வேலு
பாமக எம்எல்ஏ சிவக்குமார், அமைச்சர் எ.வ. வேலு (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், ''தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை குறைக்க வேண்டும் என்றும், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உயர்மட்ட மேம்பாலம் அமைத்து தர வேண்டும்'' எனவும் கூறினார்.

இதற்கு பதில் அளித்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ வேலு, ''மாமல்லபுரம் சாலையில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளை ஏற்கனவே தமிழ்நாடு அரசு அகற்றியுள்ளது. தமிழகத்தில் அதிக சுங்கச்சாவடி வைத்துள்ள ஒன்றிய அரசுடன் தான் நீங்கள் (பாமக) கூட்டணி வைத்துள்ளீர்கள். சுங்கச்சாவடி அகற்றுவது தொடர்பாக மத்திய நிதி அமைச்சரிடம் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்'' என்றார்.

மேலும், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை 27 கிலோ மீட்டர் தொலைவில் மேல்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை ஆறு வழிச்சாலை அமைப்பதற்கான பணிகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும், அங்கே மேல்மட்ட பாலம் அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

இதையும் படிங்க: சட்டத்துறை மானியக் கோரிக்கையில் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகள்!

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், ''தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை குறைக்க வேண்டும் என்றும், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உயர்மட்ட மேம்பாலம் அமைத்து தர வேண்டும்'' எனவும் கூறினார்.

இதற்கு பதில் அளித்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ வேலு, ''மாமல்லபுரம் சாலையில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளை ஏற்கனவே தமிழ்நாடு அரசு அகற்றியுள்ளது. தமிழகத்தில் அதிக சுங்கச்சாவடி வைத்துள்ள ஒன்றிய அரசுடன் தான் நீங்கள் (பாமக) கூட்டணி வைத்துள்ளீர்கள். சுங்கச்சாவடி அகற்றுவது தொடர்பாக மத்திய நிதி அமைச்சரிடம் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்'' என்றார்.

மேலும், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை 27 கிலோ மீட்டர் தொலைவில் மேல்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை ஆறு வழிச்சாலை அமைப்பதற்கான பணிகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும், அங்கே மேல்மட்ட பாலம் அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

இதையும் படிங்க: சட்டத்துறை மானியக் கோரிக்கையில் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.