ETV Bharat / state

சட்டக்கல்லூரி மாணவர்களிடம் நன்கொடை வசூலிப்பது ஏன்? பார் கவுன்சில் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு! - MHC ordered to TN Bar Council

Donation collect from enrolment students: வழக்கறிஞராக பதிவு செய்ய வரும் சட்டக்கல்லூரி மாணவர்களிடம் நன்கொடையாக ரூ.25 ஆயிரம் வசூலிப்பது ஏன்? யாருக்காக வசூலிக்கப்படுகிறது? என்பது குறித்து பதிலளிக்க தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 22, 2024, 3:50 PM IST

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: இராமநாதபுரத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் பூபாலன், தன்னை வழக்கறிஞராக பதிவு செய்யக் கோரி தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவர் மீது காவல்துறையில் குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதால், வழக்கறிஞராக பதிவு செய்ய முடியாது என பார் கவுன்சில் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து பூபாலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், “குற்றத்திற்கு தன் மீது போதிய ஆதாரங்கள் இல்லாதபோதும், வழக்கு நிலுவையில் இருப்பதற்காக தன்னை வழக்கறிஞராக பதிவு செய்ய பார் கவுன்சில் மறுத்துவிட்டது. மேலும், வழக்கறிஞராக பதிவு செய்யவரும் அனைவரிடமும், நன்கொடையாக குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் பணம் வசூலிக்கப்படுகிறது” இவ்வாரு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வு, “தாங்கள் வழக்கறிஞர்களாக தொழில் தொடங்கிய காலத்தில் குறைவாக இருந்த நன்கொடை வசூலிக்கும் பழக்கம் அதிகரித்து தற்போது வரை புழக்கத்தில் இருக்கிறது. உரிய காரணமின்றி வசூலிக்கப்படும் பணம் லஞ்சமாகவே கருத முடியும்.

சட்டப்படிப்பை முடித்த மாணவர்களிடம் ஆவணங்களை மட்டும் சரிபார்க்க வேண்டும். என்ன காரணத்திற்காக நன்கொடை வசூலிக்கப்படுகிறது? யாருக்காக வசூலிக்கப்படுகிறது? என பதிலளிக்க வேண்டும். மேலும், வழக்கறிஞர் பதிவு மறுக்கப்பட்ட பூபாலன் விண்ணப்பத்தின் மீது தமிழ்நாடு பார்கவுன்சில் முடிவு செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை ஜூலை 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: நீட் வினாத்தாள் கசிவு வழக்கு: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: இராமநாதபுரத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் பூபாலன், தன்னை வழக்கறிஞராக பதிவு செய்யக் கோரி தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவர் மீது காவல்துறையில் குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதால், வழக்கறிஞராக பதிவு செய்ய முடியாது என பார் கவுன்சில் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து பூபாலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், “குற்றத்திற்கு தன் மீது போதிய ஆதாரங்கள் இல்லாதபோதும், வழக்கு நிலுவையில் இருப்பதற்காக தன்னை வழக்கறிஞராக பதிவு செய்ய பார் கவுன்சில் மறுத்துவிட்டது. மேலும், வழக்கறிஞராக பதிவு செய்யவரும் அனைவரிடமும், நன்கொடையாக குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் பணம் வசூலிக்கப்படுகிறது” இவ்வாரு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வு, “தாங்கள் வழக்கறிஞர்களாக தொழில் தொடங்கிய காலத்தில் குறைவாக இருந்த நன்கொடை வசூலிக்கும் பழக்கம் அதிகரித்து தற்போது வரை புழக்கத்தில் இருக்கிறது. உரிய காரணமின்றி வசூலிக்கப்படும் பணம் லஞ்சமாகவே கருத முடியும்.

சட்டப்படிப்பை முடித்த மாணவர்களிடம் ஆவணங்களை மட்டும் சரிபார்க்க வேண்டும். என்ன காரணத்திற்காக நன்கொடை வசூலிக்கப்படுகிறது? யாருக்காக வசூலிக்கப்படுகிறது? என பதிலளிக்க வேண்டும். மேலும், வழக்கறிஞர் பதிவு மறுக்கப்பட்ட பூபாலன் விண்ணப்பத்தின் மீது தமிழ்நாடு பார்கவுன்சில் முடிவு செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை ஜூலை 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: நீட் வினாத்தாள் கசிவு வழக்கு: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.