ETV Bharat / state

மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு புது வாழ்வு கொடுத்த தருமபுரி அரசு மருத்துவமனை! - mentally challenged person recover

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 18, 2024, 1:12 PM IST

mentally challenged person recover: தருமபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அவசரச் சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த மனநலம் பாதித்த நபரை மீட்டுப் பராமரித்து, பூரண நலமடைந்த பிறகு அவரின் உறவினரின் மூலமாகச் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த நபர்
சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த நபர் (Credits - ETV Bharat Tamil Nadu)

தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசரச் சிகிச்சை மற்றும் மீட்பு மையம் 2022ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகின்றது. தருமபுரி மாவட்டத்தில் ஆதரவற்று, சாலைகளில் சுற்றித் திரியும் மன நோயாளிகள் மற்றும் வீடற்ற நோயாளிகளுகளை சமூகப் பணியாளர்கள் மூலமாக மீட்டு இந்த மையத்தில் சேர்த்து சிகிச்சை மற்றும் பராமரிப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் தற்போது வரை வேற்று மாநிலங்களைச் சேர்ந்த மனநோயாளிகள் உட்பட ஆண்கள் 77 பேர், பெண்கள் 30 பேர் என மொத்தம் 107 நபர்களை மீட்டு உள்ளனர். அதன்பிறகு மனநல சிகிச்சைக்குப் பின் சுமார் 60 நோயாளிகளை அவர்களுக்கு வழங்கப்பட்ட மனநல ஆலோசனையின் மூலமாக கிடைத்த தகவலை வைத்து, அவர்களின் முகவரியை கண்டறிந்து குடும்பத்தாருடன் சேர்த்து வைத்துள்ளனர். தற்போது இந்த மையத்தில் 23 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தருமபுரி நகரக் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மனநல சமூகப் பணியாளர்கள் சுதாகர் மற்றும் மாதேஸ்வரன் மூலம் மீட்கப்பட்டு அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தில் சேர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இவருக்கு வழங்கப்பட்ட மனநல ஆலோசனையில் அவர் கூறிய முகவரியின் படி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. பின்னர், அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் மூலமாக அவர் குடும்பத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவருடைய உறவினர் மெய்நாதன் அழைத்துச் செல்ல வந்திருந்தார்.

இதன்படி தருமபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவல்லி தலைமையில், மருத்துவமனை கண்காணிப்பாளர் சிவக்குமார், மருத்துவ நிலைய அதிகாரி நாகவேந்தன், மனநல மருத்துவப் பிரிவு துறைத் தலைவர் ப்ரீத்தா மற்றும் மருத்துவர்கள், மனநல சமூகப் பணியாளர்கள், மனநல ஆலோசகர், செவிலியர்கள் முன்னிலையில் அவரது உறவினர் மெய்நாதன் மூலமாக அந்த இளைஞர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: "தருமபுரியில் காவிரி உபரி நீர் திட்டத்தை கொண்டு வர பாமக போராடும்" - சௌமியா அன்புமணி உறுதி!

தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசரச் சிகிச்சை மற்றும் மீட்பு மையம் 2022ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகின்றது. தருமபுரி மாவட்டத்தில் ஆதரவற்று, சாலைகளில் சுற்றித் திரியும் மன நோயாளிகள் மற்றும் வீடற்ற நோயாளிகளுகளை சமூகப் பணியாளர்கள் மூலமாக மீட்டு இந்த மையத்தில் சேர்த்து சிகிச்சை மற்றும் பராமரிப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் தற்போது வரை வேற்று மாநிலங்களைச் சேர்ந்த மனநோயாளிகள் உட்பட ஆண்கள் 77 பேர், பெண்கள் 30 பேர் என மொத்தம் 107 நபர்களை மீட்டு உள்ளனர். அதன்பிறகு மனநல சிகிச்சைக்குப் பின் சுமார் 60 நோயாளிகளை அவர்களுக்கு வழங்கப்பட்ட மனநல ஆலோசனையின் மூலமாக கிடைத்த தகவலை வைத்து, அவர்களின் முகவரியை கண்டறிந்து குடும்பத்தாருடன் சேர்த்து வைத்துள்ளனர். தற்போது இந்த மையத்தில் 23 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தருமபுரி நகரக் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மனநல சமூகப் பணியாளர்கள் சுதாகர் மற்றும் மாதேஸ்வரன் மூலம் மீட்கப்பட்டு அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தில் சேர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இவருக்கு வழங்கப்பட்ட மனநல ஆலோசனையில் அவர் கூறிய முகவரியின் படி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. பின்னர், அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் மூலமாக அவர் குடும்பத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவருடைய உறவினர் மெய்நாதன் அழைத்துச் செல்ல வந்திருந்தார்.

இதன்படி தருமபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவல்லி தலைமையில், மருத்துவமனை கண்காணிப்பாளர் சிவக்குமார், மருத்துவ நிலைய அதிகாரி நாகவேந்தன், மனநல மருத்துவப் பிரிவு துறைத் தலைவர் ப்ரீத்தா மற்றும் மருத்துவர்கள், மனநல சமூகப் பணியாளர்கள், மனநல ஆலோசகர், செவிலியர்கள் முன்னிலையில் அவரது உறவினர் மெய்நாதன் மூலமாக அந்த இளைஞர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: "தருமபுரியில் காவிரி உபரி நீர் திட்டத்தை கொண்டு வர பாமக போராடும்" - சௌமியா அன்புமணி உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.