ETV Bharat / state

இளைஞர்களுக்கு மத்திய பட்ஜெட்டில் இருப்பது என்னென்ன? - மதுரை மடீட்சியா தலைவர் விளக்கம்! - MADITSSIA PRESIDENT ON BUDGET

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 23, 2024, 9:39 PM IST

MADITSSIA PRESIDENT ON BUDGET: இன்று மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையில் சிறு, குறு தொழில்களுக்கான கடன் உத்தரவாத திட்டத்தில் ரூ.100 கோடி அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என மதுரை மடீட்சியா தலைவர் லட்சுமி நாராயணன் கூறியுள்ளார்.

நிர்மலா சீதாராமன்,  லட்சுமி நாராயணன்
நிர்மலா சீதாராமன், லட்சுமி நாராயணன் (Credits- ETV Bharat Tamil Nadu)

மதுரை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று 2024 - 25ஆம் ஆண்டிற்கான வரவு, செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். அதற்கு பல்வேறு தரப்பில் இருந்து வரவேற்பும், எதிர்ப்பும் வந்த வண்ண உள்ளது. இந்நிலையில், இந்த பட்ஜெட் குறித்து மதுரை மடீட்சியா தலைவர் லட்சுமி நாராயணன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கியுள்ளார்.

மடீட்சியா தலைவர் லட்சுமி நாராயணன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

அதில் பேசிய அவர், “சிறு, குறு தொழில்களுக்கு இந்த பட்ஜெட்டில் மிகப்பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் ஓரளவிற்கு பயன்கள் இருக்கிறது. கடன் உத்திரவாத திட்டத்தின் மூலமாக சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 100 கோடி ரூபாய் கடனுதவித் திட்டம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இருந்தாலும், திட்டத்தின் அடிப்படையில் அனைத்து வங்கிகளும் கடன் உதவி வழங்கும் வகையில் அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

மேலும், இந்த முத்ரா திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்ட ரூபாய் 10 லட்சம் என்ற தொகையை 20 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது சிறு, குறு தொழில்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும். அதேபோல், 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க இருப்பதாக இந்த பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும் 12 தொழில் பூங்காக்கள் உருவாக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கக்கூடியது. சென்னை - விசாகப்பட்டினம் தொழில் வழி வளாகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் நாங்கள் வரவேற்கிறோம். இதற்கு முன்பாக 2000ஆம் ஆண்டில் கன்னியாகுமரி - சென்னை தொழில் வழித்தடம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது அறிவிப்போடு நின்று விட்டது.

இதேபோல் தமிழக அரசும் மதுரை- தூத்துக்குடி தொழில் வழிச்சாலை அமைக்கப்படும் என அறிவித்திருந்தது. அதுவும் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. ஆகையால், தற்போது அறிவித்த தொழில் வழிச்சாலை குறித்த அறிவிப்புகளை செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.

மேலும், அரசு மற்றும் தனியார் கூட்டு திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதி கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல கூட்டு முயற்சியாக நாங்கள் கருதுகிறோம். இதன் மூலம் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் பயனடைவார்கள்.

இதற்கிடையே தொழில் நிறுவனங்களுக்கு புதிய தீர்ப்பாயம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் தொழில் நிறுவனங்கள் தொடர்பான பல்வேறு வழக்குகள் விரைந்து நடைபெற நல்லதொரு சூழலாக அமையும் என நம்புகிறோம்.

இதில் மிக முக்கியமாக தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், டிடிஎஸ் காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் பட்சத்தில், ஒரு குற்றமாக கருதப்பட்டு வந்த நிலையில், இந்த அறிவிப்பு நல்ல முடிவாக இருந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பிளாஸ்டிக் தொழில் சார்ந்த துறைகளுக்கு 25 விழுக்காடு சுங்க கட்டணம் கூட்டப்பட்டுள்ளது. அந்த தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கு பெரிய சவாலாக இருக்கும் என நினைக்கிறேன். இந்த பட்ஜெட் குறித்து எவ்வாறு அமையுமோ என்ற எதிர்பார்ப்பு சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு இருந்த நிலையில், அது ஓரளவுக்கு திருப்தியான முறையில் அமைந்துள்ளது.

ஆனாலும், நாங்கள் எதிர்பார்த்த நிறைய விஷயங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. வங்கி கடன் திட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை. இதற்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. மேலும், தொழில் நிறுவன அடிப்படை கட்டமைப்புகளுக்கு 90 விழுக்காடு மானியம் நாங்கள் கேட்டிருந்தோம். அதுகுறித்தும் எந்த அறிவிப்பில் இடம் பெறவில்லை.

அதேபோல், தொழில் நுட்பம் சார்ந்த வளர்ச்சியின் பொருட்டு, பெரு நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறு, குறு தொழில்களுக்கு இந்த சலுகை இல்லை என்பது ஏமாற்றத்திற்குரியது. சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கு காப்பீட்டுத் திட்டங்கள் குறித்து நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம், அதிலும் ஏமாற்றம் அடைந்துள்ளோம்” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ் நாடு
ஈடிவி பாரத் தமிழ் நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: திருக்குறள்,புறநானூறு இடம்பெறாத பட்ஜெட்; 'தமிழ்நாடு' என்ற வார்த்தைக்கும் இடமில்லை!

மதுரை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று 2024 - 25ஆம் ஆண்டிற்கான வரவு, செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். அதற்கு பல்வேறு தரப்பில் இருந்து வரவேற்பும், எதிர்ப்பும் வந்த வண்ண உள்ளது. இந்நிலையில், இந்த பட்ஜெட் குறித்து மதுரை மடீட்சியா தலைவர் லட்சுமி நாராயணன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கியுள்ளார்.

மடீட்சியா தலைவர் லட்சுமி நாராயணன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

அதில் பேசிய அவர், “சிறு, குறு தொழில்களுக்கு இந்த பட்ஜெட்டில் மிகப்பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் ஓரளவிற்கு பயன்கள் இருக்கிறது. கடன் உத்திரவாத திட்டத்தின் மூலமாக சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 100 கோடி ரூபாய் கடனுதவித் திட்டம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இருந்தாலும், திட்டத்தின் அடிப்படையில் அனைத்து வங்கிகளும் கடன் உதவி வழங்கும் வகையில் அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

மேலும், இந்த முத்ரா திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்ட ரூபாய் 10 லட்சம் என்ற தொகையை 20 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது சிறு, குறு தொழில்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும். அதேபோல், 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க இருப்பதாக இந்த பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும் 12 தொழில் பூங்காக்கள் உருவாக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கக்கூடியது. சென்னை - விசாகப்பட்டினம் தொழில் வழி வளாகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் நாங்கள் வரவேற்கிறோம். இதற்கு முன்பாக 2000ஆம் ஆண்டில் கன்னியாகுமரி - சென்னை தொழில் வழித்தடம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது அறிவிப்போடு நின்று விட்டது.

இதேபோல் தமிழக அரசும் மதுரை- தூத்துக்குடி தொழில் வழிச்சாலை அமைக்கப்படும் என அறிவித்திருந்தது. அதுவும் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. ஆகையால், தற்போது அறிவித்த தொழில் வழிச்சாலை குறித்த அறிவிப்புகளை செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.

மேலும், அரசு மற்றும் தனியார் கூட்டு திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதி கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல கூட்டு முயற்சியாக நாங்கள் கருதுகிறோம். இதன் மூலம் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் பயனடைவார்கள்.

இதற்கிடையே தொழில் நிறுவனங்களுக்கு புதிய தீர்ப்பாயம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் தொழில் நிறுவனங்கள் தொடர்பான பல்வேறு வழக்குகள் விரைந்து நடைபெற நல்லதொரு சூழலாக அமையும் என நம்புகிறோம்.

இதில் மிக முக்கியமாக தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், டிடிஎஸ் காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் பட்சத்தில், ஒரு குற்றமாக கருதப்பட்டு வந்த நிலையில், இந்த அறிவிப்பு நல்ல முடிவாக இருந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பிளாஸ்டிக் தொழில் சார்ந்த துறைகளுக்கு 25 விழுக்காடு சுங்க கட்டணம் கூட்டப்பட்டுள்ளது. அந்த தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கு பெரிய சவாலாக இருக்கும் என நினைக்கிறேன். இந்த பட்ஜெட் குறித்து எவ்வாறு அமையுமோ என்ற எதிர்பார்ப்பு சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு இருந்த நிலையில், அது ஓரளவுக்கு திருப்தியான முறையில் அமைந்துள்ளது.

ஆனாலும், நாங்கள் எதிர்பார்த்த நிறைய விஷயங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. வங்கி கடன் திட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை. இதற்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. மேலும், தொழில் நிறுவன அடிப்படை கட்டமைப்புகளுக்கு 90 விழுக்காடு மானியம் நாங்கள் கேட்டிருந்தோம். அதுகுறித்தும் எந்த அறிவிப்பில் இடம் பெறவில்லை.

அதேபோல், தொழில் நுட்பம் சார்ந்த வளர்ச்சியின் பொருட்டு, பெரு நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறு, குறு தொழில்களுக்கு இந்த சலுகை இல்லை என்பது ஏமாற்றத்திற்குரியது. சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கு காப்பீட்டுத் திட்டங்கள் குறித்து நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம், அதிலும் ஏமாற்றம் அடைந்துள்ளோம்” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ் நாடு
ஈடிவி பாரத் தமிழ் நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: திருக்குறள்,புறநானூறு இடம்பெறாத பட்ஜெட்; 'தமிழ்நாடு' என்ற வார்த்தைக்கும் இடமில்லை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.