ETV Bharat / state

வயநாடு மக்களுக்கு ரூ.2.29 லட்சம் நிவாரண நிதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்! - Madras HC Judges Relief fund

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 15, 2024, 2:52 PM IST

Independence Day Celebration at MHC: நாட்டின் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில், வயநாடு நிலச்சரிவு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக ரூ.2.29 லட்சம் வழங்கப்பட்டது.

பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் தேசியக் கொடியை ஏற்றிய காட்சி
பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் தேசியக் கொடியை ஏற்றிய காட்சி (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை: நாட்டின் 78வது சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்கும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி சதாசிவம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய மற்றும் மாநில அரசு வழக்கறிஞர்கள், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட நீதிபதிகள்
சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட நீதிபதிகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரின் சாகச நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. அதில், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை நாய், பொறுப்பு தலைமை நீதிபதிக்கு மலர்க் கொத்து வழங்கியது. அதையடுத்து, வயநாடு நிலச்சரிவு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சார்பாக, ரூ.2 லட்சத்து 19 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும் என பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் அறிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்புப் பணியில் சிறப்பாக பணியாற்றிய தமிழக காவல்துறை காவலர்களுக்கும் பொறுப்புத் தலைமை நீதிபதி பரிசு வழங்கி பாராட்டினார். தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை பொறுப்புத் தலைமை நீதிபதி திறந்து வைத்தார்.

முன்னதாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அலுவலகத்தில் பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், பார் கவுன்சில் நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: 78வது சுதந்திர தின விழா: முதலமைச்சரிடம் விருது பெற்றவர்கள் பட்டியல்

சென்னை: நாட்டின் 78வது சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்கும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி சதாசிவம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய மற்றும் மாநில அரசு வழக்கறிஞர்கள், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட நீதிபதிகள்
சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட நீதிபதிகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரின் சாகச நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. அதில், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை நாய், பொறுப்பு தலைமை நீதிபதிக்கு மலர்க் கொத்து வழங்கியது. அதையடுத்து, வயநாடு நிலச்சரிவு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சார்பாக, ரூ.2 லட்சத்து 19 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும் என பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் அறிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்புப் பணியில் சிறப்பாக பணியாற்றிய தமிழக காவல்துறை காவலர்களுக்கும் பொறுப்புத் தலைமை நீதிபதி பரிசு வழங்கி பாராட்டினார். தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை பொறுப்புத் தலைமை நீதிபதி திறந்து வைத்தார்.

முன்னதாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அலுவலகத்தில் பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், பார் கவுன்சில் நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: 78வது சுதந்திர தின விழா: முதலமைச்சரிடம் விருது பெற்றவர்கள் பட்டியல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.