ETV Bharat / state

தமிழ் வழிக்கல்வி பயிலும் நாகலாந்து மாணவி.. சிவகங்கையில் சாத்தியமானது எப்படி? - Nagaland student to school

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 16, 2024, 10:06 PM IST

Nagaland student Joint in school: நாகலாந்து மாணவி சிவகங்கை சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்துள்ள நிலையில், நேற்று (ஜூலை15) அவர் பள்ளிக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அபர்ணா இன்று நேரில் சென்று வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

அக்ம்லா
அக்ம்லா (CREDITS- ETV Bharat Tamil Nadu)

சிவகங்கை: நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்த பெண்மணி ரூத் (40). இவர் தனது குடும்பத்துடன் 13 ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வசித்து வருகின்றனர். மேலும், இவர் தனியார் மெட்ரிக் பள்ளியில் 13 ஆண்டுகளாக இந்தி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

அக்ம்லா (CREDITS- ETV Bharat Tamil Nadu)

அதே பள்ளியில் அவரது மகள் அக்ம்லா (16) எட்டாம் வகுப்பு வரையும், மற்றொரு மகள் மவுங்கலா (14) ஐந்தாம் வகுப்பு வரையும் படித்தனர். இந்நிலையில், கரோனா காலக்கட்டத்தில் அவரது இரண்டு மகள்கள் மட்டும் நாகலாந்து அனுப்பி வைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, நாகலாந்தில் உள்ள பள்ளியில் அக்ம்லா 10-ம் வகுப்பு வரையும், மவுங்கலா 7-ம் வகுப்பு வரையும் படித்தனர்.

இந்நிலையில், இருவரும் சில மாதங்களுக்கு முன் மீண்டும் சிங்கம்புணரிக்கு வந்தனர். அப்போது சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மவுங்கலா 8-ம் வகுப்பில் சேர்க்கப்பட்ட நிலையில், அக்ம்லா 11ஆம் வகுப்புக்கு சேருவதற்காக பள்ளிக்குச் சென்றபோது, அக்ம்லா 10-ம் வகுப்பு முடித்துள்ளதாக கூறுவதால், அவரை பள்ளியில் சேர்க்க குடிபெயர்வு, உண்மைத் தன்மை சான்று கேட்டுள்ளனர். ஆனால், நாகலாந்தில் அந்த சான்றுகளை பெற முடியாததால் அவரை பள்ளியில் சேர்ப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்தது வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மாணவியின் நிலை குறித்து செய்தி ஊடகம் வழியாக தகவல் அறிந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், கடந்த சனிக்கிழமை நாகலாந்து மாணவியை பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டனர். இதனையடுத்து, சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை, மாணவியை வரவழைத்து பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், அக்ம்லா நேற்று (ஜூலை 15) பள்ளியில் சேர்க்கப்பட்ட நிலையில், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அபர்ணா, நாகலாந்து மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்துக்கள் கூறியுள்ளார். மேலும், கல்வி சம்பந்தமான உதவிகள் தேவைப்பட்டால், எந்த நேரத்திலும் தன்னை அணுகலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளை ஆட்சியரிடம் ஒப்படைக்கும் நூதன போராட்டம்.. நெல்லையில் நடந்தது என்ன?

சிவகங்கை: நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்த பெண்மணி ரூத் (40). இவர் தனது குடும்பத்துடன் 13 ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வசித்து வருகின்றனர். மேலும், இவர் தனியார் மெட்ரிக் பள்ளியில் 13 ஆண்டுகளாக இந்தி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

அக்ம்லா (CREDITS- ETV Bharat Tamil Nadu)

அதே பள்ளியில் அவரது மகள் அக்ம்லா (16) எட்டாம் வகுப்பு வரையும், மற்றொரு மகள் மவுங்கலா (14) ஐந்தாம் வகுப்பு வரையும் படித்தனர். இந்நிலையில், கரோனா காலக்கட்டத்தில் அவரது இரண்டு மகள்கள் மட்டும் நாகலாந்து அனுப்பி வைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, நாகலாந்தில் உள்ள பள்ளியில் அக்ம்லா 10-ம் வகுப்பு வரையும், மவுங்கலா 7-ம் வகுப்பு வரையும் படித்தனர்.

இந்நிலையில், இருவரும் சில மாதங்களுக்கு முன் மீண்டும் சிங்கம்புணரிக்கு வந்தனர். அப்போது சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மவுங்கலா 8-ம் வகுப்பில் சேர்க்கப்பட்ட நிலையில், அக்ம்லா 11ஆம் வகுப்புக்கு சேருவதற்காக பள்ளிக்குச் சென்றபோது, அக்ம்லா 10-ம் வகுப்பு முடித்துள்ளதாக கூறுவதால், அவரை பள்ளியில் சேர்க்க குடிபெயர்வு, உண்மைத் தன்மை சான்று கேட்டுள்ளனர். ஆனால், நாகலாந்தில் அந்த சான்றுகளை பெற முடியாததால் அவரை பள்ளியில் சேர்ப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்தது வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மாணவியின் நிலை குறித்து செய்தி ஊடகம் வழியாக தகவல் அறிந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், கடந்த சனிக்கிழமை நாகலாந்து மாணவியை பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டனர். இதனையடுத்து, சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை, மாணவியை வரவழைத்து பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், அக்ம்லா நேற்று (ஜூலை 15) பள்ளியில் சேர்க்கப்பட்ட நிலையில், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அபர்ணா, நாகலாந்து மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்துக்கள் கூறியுள்ளார். மேலும், கல்வி சம்பந்தமான உதவிகள் தேவைப்பட்டால், எந்த நேரத்திலும் தன்னை அணுகலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளை ஆட்சியரிடம் ஒப்படைக்கும் நூதன போராட்டம்.. நெல்லையில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.