ETV Bharat / state

அதிமுக பொதுக்கூட்டம்; டோக்கனுக்கு பணம் வழங்காமல் ஏமாற்றியதாகக் குற்றச்சாட்டு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2024, 2:33 PM IST

AIADMK Meeting: தேனியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டால் பணம் தருவதாகக் கூறி டோக்கன் விநியோகம் செய்த அதிமுக நிர்வாகிகள், பணம் தராமல் ஏமாற்றியதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Jayalalithaa birthday meeting in Theni
அதிமுக பொதுக்கூட்டத்தில் பணம் தருவதாகக் கூறி ஏமாற்றியதாக அதிமுக நிர்வாகிகள் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு
ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் டோக்கனுக்கு பணம் தராமல் அதிமுகவினர் ஏமாற்றியதாக குற்றச்சாட்டு

தேனி: பெரியகுளம் வடகரை அரண்மனைத் தெருவில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளை ஒட்டி அதிமுக சார்பில் நேற்றிரவு (பிப்.25) பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.கே.செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இந்நிலையில், இக்கூட்டத்திற்கு பெரியகுளத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களை கூட்டம் சேர்ப்பதற்காக அழைத்து வருவதற்கு, ஒவ்வொருவருக்கும் ரூ.200 தருவதாகக் கூறி அதிமுக கட்சி நிர்வாகிகள் டோக்கன்கள் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கூறியது போலவே நபர் ஒருவருக்கு ரூ.200 தருவார்கள் என எண்ணி, பெரியகுளத்தின் பல பகுதிகளில் இருந்தும் பெண்கள், ஆண்கள் எனக் குடும்பம் குடும்பமாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இவர்கள், கூட்டம் முடிந்ததும் அதிமுக நிர்வாகிகளால் விநியோகம் செய்யப்பட்ட டோக்கன்களைக் காண்பித்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என நினைத்து, மாலை 5 மணிக்கு ஆரம்பித்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில், மாலை 5 மணிக்கு துவங்கிய கூட்டம், இரவு 10 மணிக்கு தான் முடிந்துள்ளது.

இதையடுத்து, கூட்டம் நிறைவுறும் வரை பொறுமை காத்தப் பொதுமக்களுக்கு, கட்சி நிர்வாகிகள் பணம் தராமல் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால், கூட்டத்துக்கு வந்த பொதுமக்கள் ரூ.200 தருவதாகக் கூறி கூட்டத்துக்கு அழைத்து வந்துவிட்டு, கூட்டம் முடிந்தப் பிறகு பணம் தராமல் ஏமாற்றிவிட்டதாக வேதனைத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: அமைச்சர் ஐ.பெரியசாமியின் விடுதலை ரத்து: மீண்டும் விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

மேலும், பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை, குடும்பத்துடன் ஐந்து மணி நேரமாக காத்திருந்ததாகவும், கூட்டம் முடிந்ததும் கட்சிக்காரர்கள் பணம் கொடுக்காமல் ஏமாற்றிச் சென்றதாகவும் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கூட்டத்துக்கு பணம் கொடுத்து கூட்டம் சேர்த்த அதிமுக நிர்வாகிகள், டோக்கனுக்கு பணம் தருவதாகக் கூறி 5 மணி நேரம் காத்திருந்த மக்களை ஏமாற்றிச் சென்ற சம்பவம் பெரியகுளம் பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: 'இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம்' - ஓபிஎஸ் தகவல்

ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் டோக்கனுக்கு பணம் தராமல் அதிமுகவினர் ஏமாற்றியதாக குற்றச்சாட்டு

தேனி: பெரியகுளம் வடகரை அரண்மனைத் தெருவில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளை ஒட்டி அதிமுக சார்பில் நேற்றிரவு (பிப்.25) பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.கே.செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இந்நிலையில், இக்கூட்டத்திற்கு பெரியகுளத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களை கூட்டம் சேர்ப்பதற்காக அழைத்து வருவதற்கு, ஒவ்வொருவருக்கும் ரூ.200 தருவதாகக் கூறி அதிமுக கட்சி நிர்வாகிகள் டோக்கன்கள் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கூறியது போலவே நபர் ஒருவருக்கு ரூ.200 தருவார்கள் என எண்ணி, பெரியகுளத்தின் பல பகுதிகளில் இருந்தும் பெண்கள், ஆண்கள் எனக் குடும்பம் குடும்பமாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இவர்கள், கூட்டம் முடிந்ததும் அதிமுக நிர்வாகிகளால் விநியோகம் செய்யப்பட்ட டோக்கன்களைக் காண்பித்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என நினைத்து, மாலை 5 மணிக்கு ஆரம்பித்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில், மாலை 5 மணிக்கு துவங்கிய கூட்டம், இரவு 10 மணிக்கு தான் முடிந்துள்ளது.

இதையடுத்து, கூட்டம் நிறைவுறும் வரை பொறுமை காத்தப் பொதுமக்களுக்கு, கட்சி நிர்வாகிகள் பணம் தராமல் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால், கூட்டத்துக்கு வந்த பொதுமக்கள் ரூ.200 தருவதாகக் கூறி கூட்டத்துக்கு அழைத்து வந்துவிட்டு, கூட்டம் முடிந்தப் பிறகு பணம் தராமல் ஏமாற்றிவிட்டதாக வேதனைத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: அமைச்சர் ஐ.பெரியசாமியின் விடுதலை ரத்து: மீண்டும் விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

மேலும், பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை, குடும்பத்துடன் ஐந்து மணி நேரமாக காத்திருந்ததாகவும், கூட்டம் முடிந்ததும் கட்சிக்காரர்கள் பணம் கொடுக்காமல் ஏமாற்றிச் சென்றதாகவும் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கூட்டத்துக்கு பணம் கொடுத்து கூட்டம் சேர்த்த அதிமுக நிர்வாகிகள், டோக்கனுக்கு பணம் தருவதாகக் கூறி 5 மணி நேரம் காத்திருந்த மக்களை ஏமாற்றிச் சென்ற சம்பவம் பெரியகுளம் பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: 'இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம்' - ஓபிஎஸ் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.