ETV Bharat / state

பனிமலை போல் பொங்கி வரும் நுரை; தோல் கழிவுகளால் பாழாகும் பாலாறு; வேதனையில் விவசாயிகள்! - Tannery Waste in Palar

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 11:32 AM IST

Tannery Waste in Palar: ஆம்பூர் அருகே கனமழையை பயன்படுத்தி தோல் தொழிற்சாலைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட தோல் கழிவு நீரால் பாலாறு நுரை பொங்கி ஓடுகிறது. பாலாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பாலாற்றில் பொங்கி வழியும் நுரை
பாலாற்றில் பொங்கி வழியும் நுரை (Image Credits - ETV Bharat Tamil Nadu)

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால், பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. இதனை பயன்படுத்தி வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சில தோல் தொழிற்சாலைகள் தோல் கழிவுநீரை, பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல், பாலாற்றில் திறந்துவிட்டுள்ளன.

பாலாற்றில் பொங்கி வழியும் நுரை (Video Credits - ETV Bharat Tamil Nadu)

இதனால் ஆம்பூரை அடுத்த மாராப்பட்டு பகுதியில் உள்ள பாலாற்றின் தரைப்பாலத்தின் கீழ் பாலாற்று நீர் மலை பனிபோல் நுரை பொங்கி ஓடுகிறது. பாலாற்றில் தோல் கழிவுநீர் கலக்கப்படுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் பாலாற்றை கண்டும் காணாமல் செல்வதாக பாலாற்று படுகையில் உள்ள விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், பாலாற்றில் தோல் கழிவு நீர் கலப்பதால், பாலாற்று படுக்கையில் உள்ள நிலத்தடி நீர்மட்டம், வெகுவாக பாதிப்படைந்து, பாலாற்று நீர் குடிப்பதற்குகூட தகுதியற்று இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: ஆம்பூரில் பழைய துணிகள் குடோனில் திடீர் தீ விபத்து.. லட்சக்கணக்கில் பொருட்கள் சேதம்! - Ambur Fire Accident

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால், பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. இதனை பயன்படுத்தி வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சில தோல் தொழிற்சாலைகள் தோல் கழிவுநீரை, பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல், பாலாற்றில் திறந்துவிட்டுள்ளன.

பாலாற்றில் பொங்கி வழியும் நுரை (Video Credits - ETV Bharat Tamil Nadu)

இதனால் ஆம்பூரை அடுத்த மாராப்பட்டு பகுதியில் உள்ள பாலாற்றின் தரைப்பாலத்தின் கீழ் பாலாற்று நீர் மலை பனிபோல் நுரை பொங்கி ஓடுகிறது. பாலாற்றில் தோல் கழிவுநீர் கலக்கப்படுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் பாலாற்றை கண்டும் காணாமல் செல்வதாக பாலாற்று படுகையில் உள்ள விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், பாலாற்றில் தோல் கழிவு நீர் கலப்பதால், பாலாற்று படுக்கையில் உள்ள நிலத்தடி நீர்மட்டம், வெகுவாக பாதிப்படைந்து, பாலாற்று நீர் குடிப்பதற்குகூட தகுதியற்று இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: ஆம்பூரில் பழைய துணிகள் குடோனில் திடீர் தீ விபத்து.. லட்சக்கணக்கில் பொருட்கள் சேதம்! - Ambur Fire Accident

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.