ETV Bharat / state

சென்னை ஐஐடி எப்படி இயங்குகிறது என தெரிந்து கொள்ள ஜேஇஇ தேர்வர்களுக்கு ஒரு வாய்ப்பு! - IIT Madras

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 29, 2024, 5:00 PM IST

IIT Madras: சென்னை ஐஐடியில் ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் ஜேஇஇ 2024 தேர்வர்கள் இக்கல்வி நிறுவன வளாகத்தை பார்வையிடுவதற்கும், ஐஐடி மாணவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்ற அனுபவத்தை நேரடியாக பெறும் வகையிலும் நேரடி செயல்விளக்க நாள் நிகழ்வை சென்னை ஐஐடி நடத்த உள்ளது.

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை ஐஐடியில் ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் ஜேஇஇ 2024 தேர்வர்கள் இக்கல்வி நிறுவன வளாகத்தைப் பார்வையிடுவதற்கும், ஐஐடி மாணவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்ற அனுபவத்தை நேரடியாகப் பெறும் வகையில் நேரடி செயல்விளக்க நாள் நிகழ்வை நடத்துகிறது.

தற்போதைய மாணவர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்களுடன் கலந்தாலோசிக்கவும், ஆதாரங்களில் இருந்து நேரடியாக உண்மையான, புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெறுவதற்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. சென்னை ஐஐடியின் புதிய துறையான தி வாத்வானி ஸ்கூல் ஆஃப் டேட்டா சயின்ஸ் அண்ட் ஆர்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் (The Wadhwani School of Data Science and Artificial Intelligence) அறிமுகப்படுத்தியுள்ள பிடெக் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பகுப்பாய்வுப் (B.Tech in Artificial Intelligence and Data Analytics) படிப்பு உள்ளிட்ட மாற்றங்கள் குறித்தும் மாணவர்கள் தெளிவு பெறலாம்.

வருகை தர முடியாத மாணவர்கள் ஜூன் 17ஆம் தேதியன்று ஆன்லைன் அமர்வில் கலந்து கொள்ளலாம் என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது. சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி மற்றும் இதர ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் இந்த வளாகத்தின் கல்வி தொடர்பாகவும், கல்வி சாரா வாழ்க்கை பற்றியும் எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தை சுற்றியுள்ள தேர்வர்கள் ஜூன் 11 அன்று பெங்களூருவில் உள்ள SD ஆடிட்டோரியம், ஜூன் 12 அன்று ஹைதராபாத்தில் உள்ள T-Hub ஆகிய இடங்களில் நடைபெறும் செயல்விளக்க நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். இந்நிகழ்வுகளில் பங்கேற்க குறைந்த எண்ணிக்கையிலான இடங்கள் மட்டுமே இருப்பதால் ஜேஇஇ தேர்வர்களில் ஆர்வமுள்ளவர்கள் www.askiitm.com/demo என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறும்போது, “இளம் குழந்தைகள் தங்களது வாழ்க்கைப் பாதையை முடிவு செய்ய இது ஒரு மிக முக்கிய தருணமாகும். அவர்கள் எல்லாவற்றையும் நன்கு புரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும். இளம் குழந்தைகள் அவ்வாறு முடிவு செய்வதற்கு முன்பே எங்களது வளாகத்தைப் பார்வையிடச் செய்து, பல்வேறு பொறியியல் மற்றும் பிற துறைகளைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பை ஐஐடிஎம் (IITM) வழங்குகிறது.

AskIITM முன்முயற்சியின் ஒரு பகுதியாக நடைபெறும் செயல் விளக்க நாள் நிகழ்வை முன்னாள் மாணவர்கள் மற்றும் தற்போதைய மாணவர்கள் தான் வடிவமைத்து இயக்கி நடத்தி வருகிறார்கள். இந்நிகழ்வுகள் மட்டுமின்றி இங்குள்ள படிப்புகள், ஆசிரியர்கள், வளாக வாழ்க்கை, வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து askiitm.com இணையதளத்தில் தேர்வர்கள் கேள்விகளைக் கேட்கலாம். முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர் தன்னார்வலர்கள் குழுவினர் இவற்றுக்கான விடையளிப்பார்கள்.

ஏற்கனவே பதிவேற்றப்பட்டுள்ள பதில்களையும் தேர்வர்கள் கண்டறியலாம். இவை தவிர, பல்வேறு தலைப்புகளில் Instagram மற்றும் YouTube ல் 200-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. சென்னை ஐஐடியில் தற்போதைய கல்வித் திட்டத்தில் விருப்பப் பாடமுறை மூலமாக மாணவர்களுக்கு தங்களின் படிப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் மிக உயர்ந்த நெகிழ்வுத் தன்மையை வழங்கி வருகிறது. மாணவர்கள் தங்களின் படிப்புகளில் 40-50 சதவீதம் வரை தாங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

இதில் வேறெந்தத் துறையில் இருந்தும் தேர்வு செய்யும் வாய்ப்பும் அடங்கும். மாணவர்கள் தனிப்பாடத்திற்கோ (Minor) அல்லது இடைநிலை இரட்டைப் பட்டத்துக்கோ (IDDD) மாறிக் கொள்ள முடியும். இந்த நெகிழ்வுத்தன்மை காரணமாக பாடப்பிரிவு கிளை மாற்றம் என்ற முறையே இனி தேவையில்லை என ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர் ஒருவர் பட்டம்பெற முடிக்க வேண்டிய கிரடிட்-கள் எண்ணிக்கை 432-ல் இருந்து 400-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இது கல்வி பணிச்சுமையை ஏறத்தாழ 10 சதவீதம் குறைக்கிறது. முதலாமாண்டு மாணவர்களுக்கான பயிலரங்குகள், முன்பெல்லாம் விடுமுறைக் காலங்களில் நடத்தப்பட்டு பின்னர், செமஸ்டரில் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு வந்தது. மேலும் இரண்டு வார விடுமுறை நாட்களும் சேர்க்கப்பட்டது. மேலும், ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலையை ஊக்குவிக்கும் வகையில், முதலிரண்டு செமஸ்டர்களைப் படிக்கும் மாணவர்களுக்கு கட்டாயப் பொழுதுபோக்கு பாடநெறி (தேர்ச்சி, தோல்வி, 2 கிரடிட்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி வளமான தொழில் முனைவு சூழலைக் கொண்டிருக்கிறது. இதனை அங்கீகரிக்கும் விதமாக, ஆர்வமுள்ள மாணவர்களுக்கு மூன்றாவது அல்லது நான்காவது செமஸ்டர்களில் தொழில் முனைவோர் விருப்பப் பாடங்களை வழங்க இக்கல்வி நிறுவனம் முடிவு செய்துள்ளது. விளையாட்டு ஒதுக்கீடு சென்னை ஐஐடி இளங்கலைப் பாடத்திட்டங்களில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான மாணவர் சேர்க்கையை நாட்டிலேயே முதலாவதாக அறிமுகப்படுத்திய ஐஐடி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இக்கல்வி நிறுவனம் 2024-25 கல்வியாண்டில் இருந்து விளையாட்டுத் தனிச்சிறப்பு மாணவர் சேர்க்கையை (Sports Excellence Admission – SEA) அறிமுகப்படுத்த உள்ளது. இந்த முயற்சியானது விளையாட்டில் சிறந்து விளங்கும் திறமையான மாணவர்களை அங்கீகரித்து வெகுமதி அளிப்பதாகும். இத்திட்டம் தகுதியான மாணவர்களை அவர்களின் விளையாட்டுகளில் தொடர்ந்து சிறந்து விளங்கச் செய்யும், அதே வேளையில் உயர் கல்வியைத் தொடர்வதை ஊக்குவிப்பதாகவும் அமைந்துள்ளது.

கடந்த 2024 ஏப்ரல் 30ஆம் தேதி நிலவரப்படி வளாக வேலைவாய்ப்புகள், நடப்பாண்டில் பிடெக், இரட்டைப் பட்டப்படிப்பு மாணவர்களில் 80 சதவீதத்திற்கு அதிகமாகவும், முதுகலைப் பட்ட மாணவர்களில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டதாகவும் இடம்பிடித்துள்ளது. 2023-24ஆம் ஆண்டில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வளாக வேலைவாய்ப்புகளில் 256 நிறுவனங்களில் மொத்தம் ஆயிரத்து 91 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கூடுதலாக 300 முன் வேலைவாய்ப்புப் பணிகளில் 235 பேர் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் ஒப்பீடு அளவில் மற்றும் சராசரி சம்பளம் முறையே 19.6 லட்சம் ரூபாயாகவும், 22 லட்ச ரூபாயாகவும் உள்ளது. ஜப்பான், ஐரோப்பா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் 44 சர்வதேச வாய்ப்புகளை வழங்கியுள்ளன. மேலும், 85 ஸ்டார்ட் அப்கள் வளாக வேலைவாய்ப்பு முதல் மற்றும் இரண்டாவது கட்டங்களில் 183 வாய்ப்புகளை வழங்கின.

இவ்வாறு இடம்பெற்ற மாணவர்களில் 43 சதவீதம் பேர் முக்கிய துறைகளிலும், 20 சதவீதம் பேர் மென்பொருள் துறையிலும், 10 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் பகுப்பாய்வு, நிதி, ஆலோசனை மற்றும் தரவு அறிவியலில் இடம்பெற்றுள்ளனர். கல்வி உதவித் தொகைகள் மற்றும் நிதியுதவி பி.டெக் மாணவர்களுக்கு 100 சதவீதம் நிதிஆதரவு வழங்கும் வகையில் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் 1 லட்ச ரூபாய் முதல் 5 லட்ச ரூபாய் என்ற பிரிவில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக (2022-23 மற்றும் 2023-24) நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

மாணவர்களுக்காக வழங்கப்படும் மெரிட்-கம்-மீன்ஸ் (MCM) உதவித் தொகை, மத்திய-மாநில அரசுகளால் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஏராளமான நிதியுதவிகளும் அடங்கும். எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோரின் வருமானத்தைப் பொருட்படுத்தாமல் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த ஆதரவின் மூலம் மாணவர்கள் நிதி நிலைமை அல்லது கல்விக் கடன்களைப் பற்றிய கவலையின்றி தங்களின் படிப்பு மற்றும் எதிர்காலக் கல்வி இலக்குகளில் முழுமையாக கவனம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: ஒரு இடத்திற்கு 120 மாணவர்கள் போட்டி.. சென்னை மாநிலக் கல்லூரி முதல்வரின் விளக்கம் என்ன? - Chennai Presidency College

சென்னை: சென்னை ஐஐடியில் ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் ஜேஇஇ 2024 தேர்வர்கள் இக்கல்வி நிறுவன வளாகத்தைப் பார்வையிடுவதற்கும், ஐஐடி மாணவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்ற அனுபவத்தை நேரடியாகப் பெறும் வகையில் நேரடி செயல்விளக்க நாள் நிகழ்வை நடத்துகிறது.

தற்போதைய மாணவர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்களுடன் கலந்தாலோசிக்கவும், ஆதாரங்களில் இருந்து நேரடியாக உண்மையான, புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெறுவதற்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. சென்னை ஐஐடியின் புதிய துறையான தி வாத்வானி ஸ்கூல் ஆஃப் டேட்டா சயின்ஸ் அண்ட் ஆர்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் (The Wadhwani School of Data Science and Artificial Intelligence) அறிமுகப்படுத்தியுள்ள பிடெக் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பகுப்பாய்வுப் (B.Tech in Artificial Intelligence and Data Analytics) படிப்பு உள்ளிட்ட மாற்றங்கள் குறித்தும் மாணவர்கள் தெளிவு பெறலாம்.

வருகை தர முடியாத மாணவர்கள் ஜூன் 17ஆம் தேதியன்று ஆன்லைன் அமர்வில் கலந்து கொள்ளலாம் என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது. சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி மற்றும் இதர ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் இந்த வளாகத்தின் கல்வி தொடர்பாகவும், கல்வி சாரா வாழ்க்கை பற்றியும் எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தை சுற்றியுள்ள தேர்வர்கள் ஜூன் 11 அன்று பெங்களூருவில் உள்ள SD ஆடிட்டோரியம், ஜூன் 12 அன்று ஹைதராபாத்தில் உள்ள T-Hub ஆகிய இடங்களில் நடைபெறும் செயல்விளக்க நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். இந்நிகழ்வுகளில் பங்கேற்க குறைந்த எண்ணிக்கையிலான இடங்கள் மட்டுமே இருப்பதால் ஜேஇஇ தேர்வர்களில் ஆர்வமுள்ளவர்கள் www.askiitm.com/demo என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறும்போது, “இளம் குழந்தைகள் தங்களது வாழ்க்கைப் பாதையை முடிவு செய்ய இது ஒரு மிக முக்கிய தருணமாகும். அவர்கள் எல்லாவற்றையும் நன்கு புரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும். இளம் குழந்தைகள் அவ்வாறு முடிவு செய்வதற்கு முன்பே எங்களது வளாகத்தைப் பார்வையிடச் செய்து, பல்வேறு பொறியியல் மற்றும் பிற துறைகளைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பை ஐஐடிஎம் (IITM) வழங்குகிறது.

AskIITM முன்முயற்சியின் ஒரு பகுதியாக நடைபெறும் செயல் விளக்க நாள் நிகழ்வை முன்னாள் மாணவர்கள் மற்றும் தற்போதைய மாணவர்கள் தான் வடிவமைத்து இயக்கி நடத்தி வருகிறார்கள். இந்நிகழ்வுகள் மட்டுமின்றி இங்குள்ள படிப்புகள், ஆசிரியர்கள், வளாக வாழ்க்கை, வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து askiitm.com இணையதளத்தில் தேர்வர்கள் கேள்விகளைக் கேட்கலாம். முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர் தன்னார்வலர்கள் குழுவினர் இவற்றுக்கான விடையளிப்பார்கள்.

ஏற்கனவே பதிவேற்றப்பட்டுள்ள பதில்களையும் தேர்வர்கள் கண்டறியலாம். இவை தவிர, பல்வேறு தலைப்புகளில் Instagram மற்றும் YouTube ல் 200-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. சென்னை ஐஐடியில் தற்போதைய கல்வித் திட்டத்தில் விருப்பப் பாடமுறை மூலமாக மாணவர்களுக்கு தங்களின் படிப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் மிக உயர்ந்த நெகிழ்வுத் தன்மையை வழங்கி வருகிறது. மாணவர்கள் தங்களின் படிப்புகளில் 40-50 சதவீதம் வரை தாங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

இதில் வேறெந்தத் துறையில் இருந்தும் தேர்வு செய்யும் வாய்ப்பும் அடங்கும். மாணவர்கள் தனிப்பாடத்திற்கோ (Minor) அல்லது இடைநிலை இரட்டைப் பட்டத்துக்கோ (IDDD) மாறிக் கொள்ள முடியும். இந்த நெகிழ்வுத்தன்மை காரணமாக பாடப்பிரிவு கிளை மாற்றம் என்ற முறையே இனி தேவையில்லை என ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர் ஒருவர் பட்டம்பெற முடிக்க வேண்டிய கிரடிட்-கள் எண்ணிக்கை 432-ல் இருந்து 400-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இது கல்வி பணிச்சுமையை ஏறத்தாழ 10 சதவீதம் குறைக்கிறது. முதலாமாண்டு மாணவர்களுக்கான பயிலரங்குகள், முன்பெல்லாம் விடுமுறைக் காலங்களில் நடத்தப்பட்டு பின்னர், செமஸ்டரில் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு வந்தது. மேலும் இரண்டு வார விடுமுறை நாட்களும் சேர்க்கப்பட்டது. மேலும், ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலையை ஊக்குவிக்கும் வகையில், முதலிரண்டு செமஸ்டர்களைப் படிக்கும் மாணவர்களுக்கு கட்டாயப் பொழுதுபோக்கு பாடநெறி (தேர்ச்சி, தோல்வி, 2 கிரடிட்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி வளமான தொழில் முனைவு சூழலைக் கொண்டிருக்கிறது. இதனை அங்கீகரிக்கும் விதமாக, ஆர்வமுள்ள மாணவர்களுக்கு மூன்றாவது அல்லது நான்காவது செமஸ்டர்களில் தொழில் முனைவோர் விருப்பப் பாடங்களை வழங்க இக்கல்வி நிறுவனம் முடிவு செய்துள்ளது. விளையாட்டு ஒதுக்கீடு சென்னை ஐஐடி இளங்கலைப் பாடத்திட்டங்களில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான மாணவர் சேர்க்கையை நாட்டிலேயே முதலாவதாக அறிமுகப்படுத்திய ஐஐடி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இக்கல்வி நிறுவனம் 2024-25 கல்வியாண்டில் இருந்து விளையாட்டுத் தனிச்சிறப்பு மாணவர் சேர்க்கையை (Sports Excellence Admission – SEA) அறிமுகப்படுத்த உள்ளது. இந்த முயற்சியானது விளையாட்டில் சிறந்து விளங்கும் திறமையான மாணவர்களை அங்கீகரித்து வெகுமதி அளிப்பதாகும். இத்திட்டம் தகுதியான மாணவர்களை அவர்களின் விளையாட்டுகளில் தொடர்ந்து சிறந்து விளங்கச் செய்யும், அதே வேளையில் உயர் கல்வியைத் தொடர்வதை ஊக்குவிப்பதாகவும் அமைந்துள்ளது.

கடந்த 2024 ஏப்ரல் 30ஆம் தேதி நிலவரப்படி வளாக வேலைவாய்ப்புகள், நடப்பாண்டில் பிடெக், இரட்டைப் பட்டப்படிப்பு மாணவர்களில் 80 சதவீதத்திற்கு அதிகமாகவும், முதுகலைப் பட்ட மாணவர்களில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டதாகவும் இடம்பிடித்துள்ளது. 2023-24ஆம் ஆண்டில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வளாக வேலைவாய்ப்புகளில் 256 நிறுவனங்களில் மொத்தம் ஆயிரத்து 91 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கூடுதலாக 300 முன் வேலைவாய்ப்புப் பணிகளில் 235 பேர் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் ஒப்பீடு அளவில் மற்றும் சராசரி சம்பளம் முறையே 19.6 லட்சம் ரூபாயாகவும், 22 லட்ச ரூபாயாகவும் உள்ளது. ஜப்பான், ஐரோப்பா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் 44 சர்வதேச வாய்ப்புகளை வழங்கியுள்ளன. மேலும், 85 ஸ்டார்ட் அப்கள் வளாக வேலைவாய்ப்பு முதல் மற்றும் இரண்டாவது கட்டங்களில் 183 வாய்ப்புகளை வழங்கின.

இவ்வாறு இடம்பெற்ற மாணவர்களில் 43 சதவீதம் பேர் முக்கிய துறைகளிலும், 20 சதவீதம் பேர் மென்பொருள் துறையிலும், 10 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் பகுப்பாய்வு, நிதி, ஆலோசனை மற்றும் தரவு அறிவியலில் இடம்பெற்றுள்ளனர். கல்வி உதவித் தொகைகள் மற்றும் நிதியுதவி பி.டெக் மாணவர்களுக்கு 100 சதவீதம் நிதிஆதரவு வழங்கும் வகையில் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் 1 லட்ச ரூபாய் முதல் 5 லட்ச ரூபாய் என்ற பிரிவில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக (2022-23 மற்றும் 2023-24) நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

மாணவர்களுக்காக வழங்கப்படும் மெரிட்-கம்-மீன்ஸ் (MCM) உதவித் தொகை, மத்திய-மாநில அரசுகளால் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஏராளமான நிதியுதவிகளும் அடங்கும். எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோரின் வருமானத்தைப் பொருட்படுத்தாமல் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த ஆதரவின் மூலம் மாணவர்கள் நிதி நிலைமை அல்லது கல்விக் கடன்களைப் பற்றிய கவலையின்றி தங்களின் படிப்பு மற்றும் எதிர்காலக் கல்வி இலக்குகளில் முழுமையாக கவனம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: ஒரு இடத்திற்கு 120 மாணவர்கள் போட்டி.. சென்னை மாநிலக் கல்லூரி முதல்வரின் விளக்கம் என்ன? - Chennai Presidency College

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.