ETV Bharat / state

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; மொழித் தேர்வு எழுத வராமல் இவ்வளவு மாணவர்களா? - 10th tamil paper

10th Public Examination: 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கிய நிலையில், மொழித் தாள் தேர்வினை 16,314 பள்ளி மாணவர்களும், 1,319 தனித் தேர்வர்கள் என மொத்தம் 17,633 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 26, 2024, 7:34 PM IST

17633-students-have-not-appeared-for-10th-public-examination-has-started-today
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கிய நிலையில் தேர்வு எழுத வராத 17,633 மாணவர்கள்..

சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று (மார்ச் 25) தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் தேர்வாக 10ஆம் வகுப்பு படித்த மாணவர்களில், தமிழ் மற்றும் சிறுபான்மை மொழியில் பயின்றவர்களுக்கான மொழித்தாள் தேர்வு நடைபெற்றது.

சிறுபான்மை மாணவர்கள் தமிழ் கட்டாயம் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதால், நான்காயிரம் மாணவர்கள் அவர்களின் மொழியில் தேர்வினை எழுதினர். அரசுத் தேர்வுத் துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள தகவலில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதுவதற்கு 9,26,663 மாணவர்கள் பதிவு செய்தனர்.

அவர்களில், பள்ளி மாணவர்களாக 9,10,175 பேரும், தனித்தேர்வர்கள் 16,488 தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மொழித் தாள் தேர்வினை 16,314 பள்ளி மாணவர்களும், 1,319 தனித் தேர்வர்கள் என 17,633 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என தெரிவித்துள்ளனர்.

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழ்ப்பாட வினாத்தாளின் 33வது வினாவில், 'நெடுநாளாகப் பார்க்கப் பண்ணியிருந்த' என்று வருகிறது. இந்த கேள்வி, பார்க்க எண்ணியிருந்த' என்று வரவேண்டும் என தமிழ் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து அரசு தேர்வுத் துறை அதிகாரி ஒருவர் கூறும் பொழுது, கேள்வித்தாள் ஆய்வு செய்யப்பட்டு மாணவர்களுக்கு விடைத்தாள் திருத்துவதற்கான விடை குறிப்புகள் அனுப்பும்போது அது குறித்து தெரிவிக்கப்படும் என கூறினார்.

இதையும் படிங்க: தமிழ் வாசிக்க முடியாமல் திணறிய திருவள்ளூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்! - Tiruvallur NTK Candidate

சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று (மார்ச் 25) தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் தேர்வாக 10ஆம் வகுப்பு படித்த மாணவர்களில், தமிழ் மற்றும் சிறுபான்மை மொழியில் பயின்றவர்களுக்கான மொழித்தாள் தேர்வு நடைபெற்றது.

சிறுபான்மை மாணவர்கள் தமிழ் கட்டாயம் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதால், நான்காயிரம் மாணவர்கள் அவர்களின் மொழியில் தேர்வினை எழுதினர். அரசுத் தேர்வுத் துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள தகவலில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதுவதற்கு 9,26,663 மாணவர்கள் பதிவு செய்தனர்.

அவர்களில், பள்ளி மாணவர்களாக 9,10,175 பேரும், தனித்தேர்வர்கள் 16,488 தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மொழித் தாள் தேர்வினை 16,314 பள்ளி மாணவர்களும், 1,319 தனித் தேர்வர்கள் என 17,633 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என தெரிவித்துள்ளனர்.

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழ்ப்பாட வினாத்தாளின் 33வது வினாவில், 'நெடுநாளாகப் பார்க்கப் பண்ணியிருந்த' என்று வருகிறது. இந்த கேள்வி, பார்க்க எண்ணியிருந்த' என்று வரவேண்டும் என தமிழ் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து அரசு தேர்வுத் துறை அதிகாரி ஒருவர் கூறும் பொழுது, கேள்வித்தாள் ஆய்வு செய்யப்பட்டு மாணவர்களுக்கு விடைத்தாள் திருத்துவதற்கான விடை குறிப்புகள் அனுப்பும்போது அது குறித்து தெரிவிக்கப்படும் என கூறினார்.

இதையும் படிங்க: தமிழ் வாசிக்க முடியாமல் திணறிய திருவள்ளூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்! - Tiruvallur NTK Candidate

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.