ETV Bharat / state

மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசு பொருட்காட்சி துவக்கம்.. 27 அரசுத்துறை நிறுவன அரங்குகள் அமைப்பு! - MADURAI GOVERNMENT EXHIBITION

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 24, 2024, 11:42 AM IST

Government Exhibition: மதுரை தமுக்கம் மைதானத்தில் 27 அரசுத்துறை நிறுவன அரங்குகள் கொண்ட அரசு பொருட்காட்சியை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தொடங்கி வைத்தார்.

பொருட்காட்சியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்
பொருட்காட்சியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் (Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை: தமுக்கம் மைதானத்தில் நேற்று(மே 23) மாவட்ட ஆட்சியர் சங்கீதா அரசுப் பொருட்காட்சியை தொடங்கி வைத்து அரசுத்துறை அரங்குகளைப் பார்வையிட்டார். இதனைதொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் சங்கீதா, "திருவிழா நகரான மதுரையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக ஆண்டுதோறும் அரசுப் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது.

நடப்பாண்டில் அரசுப் பொருட்காட்சியினை மிகச் சிறப்புடன் நடத்திட திட்டமிடப்பட்டு, நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024 நன்னடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், இந்திய தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி 2024 தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இது தமிழ்நாடு அரசின் சார்பாக நடத்தப்படும் 214வது அரசுப் பொருட்காட்சியாகும். இப்பொருட்காட்சி தொடர்ந்து வரும் ஜூலை 6ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறும். இப்பொருட்காட்சி மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட 27 அரசுத்துறை அரங்குகளும், அரசு சார்பு நிறுவனங்களான ஆவின், மதுரை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவற்றின் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அரங்கிலும் அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க அந்தந்த துறைகளின் சார்பாக பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பொருட்காட்சிகளில், அரசின் திட்டங்களும், சாதனைகளும் சிறந்த முறையில் விளம்பரப்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம, நகர்ப்புற மக்கள், அரசுத் துறைகளின் திட்டங்களையும், சாதனைகளையும் அறிந்துகொண்டு, தேவையான தகவல்களைப் பெறுவதுடன், பொழுதுபோக்கு அம்சங்களையும் கண்டுகளித்து, புத்துணர்வு பெறுவதற்கு அரசுப் பொருட்காட்சிகள் வழிவகை செய்கின்றன.

இவ்வாறு அரசால் நடத்தப்படும் பொருட்காட்சிகள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பலருக்கு வேலைவாய்ப்பையும் அளித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், நலிந்த கலைஞர்களின் வாழ்க்கை வளம்பெறும் வகையில் நாள்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் இப்பொருட்காட்சிகளில் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த பொருட்காட்சியின் மூலம் அரசின் திட்டங்களை மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்ப்பதே நோக்கம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதிதாக கட்டப்பட்ட தண்ணீர்த் தொட்டி ஒழுகுகிறதா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மதுரை மாநகராட்சி!

மதுரை: தமுக்கம் மைதானத்தில் நேற்று(மே 23) மாவட்ட ஆட்சியர் சங்கீதா அரசுப் பொருட்காட்சியை தொடங்கி வைத்து அரசுத்துறை அரங்குகளைப் பார்வையிட்டார். இதனைதொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் சங்கீதா, "திருவிழா நகரான மதுரையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக ஆண்டுதோறும் அரசுப் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது.

நடப்பாண்டில் அரசுப் பொருட்காட்சியினை மிகச் சிறப்புடன் நடத்திட திட்டமிடப்பட்டு, நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024 நன்னடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், இந்திய தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி 2024 தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இது தமிழ்நாடு அரசின் சார்பாக நடத்தப்படும் 214வது அரசுப் பொருட்காட்சியாகும். இப்பொருட்காட்சி தொடர்ந்து வரும் ஜூலை 6ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறும். இப்பொருட்காட்சி மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட 27 அரசுத்துறை அரங்குகளும், அரசு சார்பு நிறுவனங்களான ஆவின், மதுரை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவற்றின் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அரங்கிலும் அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க அந்தந்த துறைகளின் சார்பாக பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பொருட்காட்சிகளில், அரசின் திட்டங்களும், சாதனைகளும் சிறந்த முறையில் விளம்பரப்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம, நகர்ப்புற மக்கள், அரசுத் துறைகளின் திட்டங்களையும், சாதனைகளையும் அறிந்துகொண்டு, தேவையான தகவல்களைப் பெறுவதுடன், பொழுதுபோக்கு அம்சங்களையும் கண்டுகளித்து, புத்துணர்வு பெறுவதற்கு அரசுப் பொருட்காட்சிகள் வழிவகை செய்கின்றன.

இவ்வாறு அரசால் நடத்தப்படும் பொருட்காட்சிகள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பலருக்கு வேலைவாய்ப்பையும் அளித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், நலிந்த கலைஞர்களின் வாழ்க்கை வளம்பெறும் வகையில் நாள்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் இப்பொருட்காட்சிகளில் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த பொருட்காட்சியின் மூலம் அரசின் திட்டங்களை மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்ப்பதே நோக்கம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதிதாக கட்டப்பட்ட தண்ணீர்த் தொட்டி ஒழுகுகிறதா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மதுரை மாநகராட்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.