ETV Bharat / state

ஒகேனக்கலில் 1.30 லட்சம் கன அடி நீர்வரத்து அதிகரிப்பு.. 9 மாவட்டங்களுக்கு முக்கிய எச்சரிக்கை! - Hogenakkal Cauvery River

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 27, 2024, 6:30 PM IST

Hogenakkal: கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகா் அணைகளில் இருந்து ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால், ஒன்பது மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர்
கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் (Credits - ETV Bharat Tamil Nadu)

தருமபுரி: கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வெளியேற்றப்படும் உபரி நீர் தொடர்ந்து தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் சென்று மேட்டூர் அணையைச் சென்றடைகிறது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (ஜூலை 27) காலை ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்மட்டம் பிற்பகல் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடியாகவும், மாலை நிலவரப்படி ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடியாகவும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், மத்திய நீர்வளத்துறை ஆணைய செயற்பொறியாளர் பன்னீர்செல்வம், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 9 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், "கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறக்கப்பட்ட ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடி தண்ணீர் ஒரே நாளில் மேட்டூர் அணையை வந்தடையும். எனவே, காவிரி கரையோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: விவசாய இடத்தில் தொழிற்பூங்கா வேண்டாம்.. டிஆர்பி ராஜாவிடம் நேரடி கோரிக்கை!

தருமபுரி: கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வெளியேற்றப்படும் உபரி நீர் தொடர்ந்து தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் சென்று மேட்டூர் அணையைச் சென்றடைகிறது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (ஜூலை 27) காலை ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்மட்டம் பிற்பகல் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடியாகவும், மாலை நிலவரப்படி ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடியாகவும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், மத்திய நீர்வளத்துறை ஆணைய செயற்பொறியாளர் பன்னீர்செல்வம், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 9 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், "கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறக்கப்பட்ட ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடி தண்ணீர் ஒரே நாளில் மேட்டூர் அணையை வந்தடையும். எனவே, காவிரி கரையோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: விவசாய இடத்தில் தொழிற்பூங்கா வேண்டாம்.. டிஆர்பி ராஜாவிடம் நேரடி கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.