ETV Bharat / state

சென்னை: பிறந்து 9 நாளே ஆன குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம்.. கொடூரத் தந்தை சிக்கியது எப்படி? - infant murder in chennai

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 18, 2024, 12:56 PM IST

baby girl murdered in chennai: சென்னையில் அடுத்தடுத்து பெண் குழந்தை பிறந்ததால் தந்தையே குழந்தையை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைதான ராஜ்குமார், சிசு தொடர்பான கோப்புப்படம்
கைதான ராஜ்குமார், சிசு தொடர்பான கோப்புப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)

வியாசர்பாடி: சென்னை வியாசர்பாடி சுந்தரம் நான்காவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (38). இவரது மனைவி விஜயலட்சுமி. ராஜ்குமார் மீன் பாடி வண்டி ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு ஐந்து வயது மற்றும் இரண்டரை வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த மாத இறுதியில் இவர்களுக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து கடந்த 7ம் தேதி காலை விஜயலட்சுமி வீட்டில் குளித்துக் கொண்டிருந்தபோது, பிறந்து ஏழு நாட்களே ஆன குழந்தையின் வயிற்றில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததை கண்டு உடனடியாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி 9ம் தேதி உயிரிழந்தது. இந்நிலையில், குழந்தையின் மரணத்தில் பலவிதமான சந்தேகம் ஏற்பட்டதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ப்ரதிஷ்டா என்பவர் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வியாசர்பாடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில் குழந்தையின் தந்தை ராஜ்குமாரே கத்தரிக்கோலால் மூன்று முறை குழந்தையை குத்தி கொலை செய்தது அம்பலமானது. அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பிறந்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக ராஜ்குமார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ராஜ்குமாரை கைது செய்த வியாசர்பாடி போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வியாசர்பாடியில் மூன்றாவது முறையாக பெண் குழந்தை பிறந்ததால் கத்தரிக்கோலால் குத்திக்கொலை செய்த தந்தையின் கொடூர செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'ப்ரொபஷனல் கில்லர்ஸ்'.. யார் இந்த கூலிப்படையினர்? எப்படி உருவாகிறார்கள்? விவரிக்கும் வழக்கறிஞர்!

வியாசர்பாடி: சென்னை வியாசர்பாடி சுந்தரம் நான்காவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (38). இவரது மனைவி விஜயலட்சுமி. ராஜ்குமார் மீன் பாடி வண்டி ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு ஐந்து வயது மற்றும் இரண்டரை வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த மாத இறுதியில் இவர்களுக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து கடந்த 7ம் தேதி காலை விஜயலட்சுமி வீட்டில் குளித்துக் கொண்டிருந்தபோது, பிறந்து ஏழு நாட்களே ஆன குழந்தையின் வயிற்றில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததை கண்டு உடனடியாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி 9ம் தேதி உயிரிழந்தது. இந்நிலையில், குழந்தையின் மரணத்தில் பலவிதமான சந்தேகம் ஏற்பட்டதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ப்ரதிஷ்டா என்பவர் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வியாசர்பாடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில் குழந்தையின் தந்தை ராஜ்குமாரே கத்தரிக்கோலால் மூன்று முறை குழந்தையை குத்தி கொலை செய்தது அம்பலமானது. அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பிறந்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக ராஜ்குமார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ராஜ்குமாரை கைது செய்த வியாசர்பாடி போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வியாசர்பாடியில் மூன்றாவது முறையாக பெண் குழந்தை பிறந்ததால் கத்தரிக்கோலால் குத்திக்கொலை செய்த தந்தையின் கொடூர செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'ப்ரொபஷனல் கில்லர்ஸ்'.. யார் இந்த கூலிப்படையினர்? எப்படி உருவாகிறார்கள்? விவரிக்கும் வழக்கறிஞர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.