ETV Bharat / state

"கள்ளச்சாராயம் குடிச்சு தான் என்னோட தாத்தா இறந்துட்டாரு"... கலங்கும் பேரன் - Kallakurichi Illicit alcohol

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 20, 2024, 4:03 PM IST

Kallakurichi Illicit alcohol: கள்ளச்சாராயம் அருந்தியதாகக் கூறப்படும் சுப்பிரமணியன் (வயது 61) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உறவினர்கள் பேட்டி
உறவினர்கள் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் அருகே உள்ள கர்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த சிலர் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் குடித்து வாந்தி, மயக்கம், வயிற்று வலி மற்றும் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் சிலர் சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சுப்பிரமணியன் (வயது 61) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தினசரி மூட்டை தூக்கும் வேலை செய்து வந்த சுப்பிரமணியன், நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் அருந்தியதாக அவர்களது உறவினர்கள் கூறுகின்றனர். இதனால் "தனக்கு கண் பார்வை தெரியவில்லை என்றும், வயிற்று வலி வாந்தி, உடல் முழுவதும் எரிச்சல் ஏற்படுகிறது" என தன்னுடைய பேரன் கலியபெருமாளிடம் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொண்டிருக்கின்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே சுப்பிரமணியன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவரது உடல் அஞ்சலிக்காக கர்ணாபுரம் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவருடைய உறவினர்கள் கூறுகையில், "வாயில் நுரைதள்ளி அவர் சுயநினைவு இழந்ததும் நாங்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் உயிரிழந்துவிட்டார்" என்று கூறினர்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய சுப்பிரமணியனின் அண்ணன் மகள் பழனியம்மாள், "என்னோட சித்தப்பா நன்றாகத் தான் இருந்தார். ஏதோ கடையில் சில பொருட்களை வாங்கிவிட்டு வந்தார். திடீரென பார்வை தெரியவில்லை என்றும், வயிறு வலிக்கிறது" என்றும் கூறினார்.

ஆனால் மருத்துவமனையில் அனுமதித்தும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் என வேதனைப் பட தெரிவிக்கின்றனர். கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38-ஆக அதிகரித்துள்ளது. பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் பலி எண்ணிக்கை உயரும்" என அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக சாராயம் விற்ற கண்ணுகுட்டி (எ) கோவிந்தராஜ் அவரது மனைவி விஜயா‌,‌ அவரது தம்பி தாமோதரன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளியான சின்னத்துரையை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் மூவர் கைது.. விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் அருகே உள்ள கர்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த சிலர் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் குடித்து வாந்தி, மயக்கம், வயிற்று வலி மற்றும் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் சிலர் சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சுப்பிரமணியன் (வயது 61) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தினசரி மூட்டை தூக்கும் வேலை செய்து வந்த சுப்பிரமணியன், நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் அருந்தியதாக அவர்களது உறவினர்கள் கூறுகின்றனர். இதனால் "தனக்கு கண் பார்வை தெரியவில்லை என்றும், வயிற்று வலி வாந்தி, உடல் முழுவதும் எரிச்சல் ஏற்படுகிறது" என தன்னுடைய பேரன் கலியபெருமாளிடம் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொண்டிருக்கின்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே சுப்பிரமணியன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவரது உடல் அஞ்சலிக்காக கர்ணாபுரம் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவருடைய உறவினர்கள் கூறுகையில், "வாயில் நுரைதள்ளி அவர் சுயநினைவு இழந்ததும் நாங்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் உயிரிழந்துவிட்டார்" என்று கூறினர்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய சுப்பிரமணியனின் அண்ணன் மகள் பழனியம்மாள், "என்னோட சித்தப்பா நன்றாகத் தான் இருந்தார். ஏதோ கடையில் சில பொருட்களை வாங்கிவிட்டு வந்தார். திடீரென பார்வை தெரியவில்லை என்றும், வயிறு வலிக்கிறது" என்றும் கூறினார்.

ஆனால் மருத்துவமனையில் அனுமதித்தும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் என வேதனைப் பட தெரிவிக்கின்றனர். கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38-ஆக அதிகரித்துள்ளது. பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் பலி எண்ணிக்கை உயரும்" என அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக சாராயம் விற்ற கண்ணுகுட்டி (எ) கோவிந்தராஜ் அவரது மனைவி விஜயா‌,‌ அவரது தம்பி தாமோதரன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளியான சின்னத்துரையை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் மூவர் கைது.. விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.