ETV Bharat / state

"திமுக கரை வேஷ்டியை கண்டால் கலெக்டரே எழுந்து நிற்பார்" - திமுக நிர்வாகி சர்ச்சை பேச்சு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 7, 2024, 8:12 AM IST

Updated : Mar 7, 2024, 11:24 AM IST

DMK Meeting: திண்டுக்கல்லில் நடைபெற்ற திமுக கூட்டத்தில், திமுகவின் வேஷ்டியை அணிந்து சென்றால் மாவட்ட ஆட்சியரே எழுந்து நிற்பார் என்று வேடசந்தூர் பகுதி தேர்தல் பொறுப்பாளர் நாச்சிமுத்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

dmk party executive controversial speech at vedasandur meeting
நாச்சிமுத்து

திண்டுக்கல்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவையொட்டி 'எல்லோருக்கும் எல்லாம்’ எனும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் வேடசந்தூரில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நெல்லிக்குப்பம் புகழேந்தி மற்றும் வேடசந்தூர் தேர்தல் பொறுப்பாளர் நாச்சிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டத்தில் நாச்சிமுத்து பேசுகையில், "திமுகவில், ஒரு கிளைக் கழகச் செயலாளருக்கு இருக்கிற அருகதை எந்த கட்சியிலும் கிடையாது. ஒரு கிளைக் கழகச் செயலாளர் இரு வண்ணக் கொடியுடன் உள்ள வேஷ்டியை அணிந்து சென்றால் மாவட்ட ஆட்சியரே எழுந்து நிற்பார்" என்று கூறினார்.

பின்னர், பொதுக்கூட்டத்தில் நெல்லிக்குப்பம் புகழேந்தி பேசுகையில், "நான் தற்போது வாரிய தலைவராக இருக்கிறேன். முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். கீழே இருந்து பார்க்கும் உங்களுக்கு நாங்கள் பேரூராட்சித் தலைவர்கள், எம்எல்ஏவாக இருக்கிறார்கள் என்று தோன்றும். ஆனால், வேட்பாளரை அறிவித்துவிட்டால் அவரை விட பாவம் எவரும் இல்லை.

தேர்தல் நேரத்தில் ஒருவர் தன்னிடம் 50 ஓட்டுகள் இருக்கிறது என்று கூறுவார். அவரை எதிர்த்து நம்மால் பேச இயலாது. ஏனென்றால் தேர்தல் நேரத்தில் எதாவது கலவரத்தை ஏற்படுத்துவர். ஓட்டு யார் போடுவார்கள் என்பதற்குத் தாய்மார்கள் தான் இலக்கணம்" என்றார்.

நிதி அறிக்கை விளக்கக் கூட்டம் என்று கூறிவிட்டுத் தொடர்ந்து இருவரும் மேடையில் சர்ச்சையாகப் பேசியது திமுகவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: புதுச்சேரி சிறுமி கொலை; ஒரு வாரத்தில் தண்டனை கிடைக்க நடவடிக்கை - தமிழிசை சௌந்தரராஜன்

திண்டுக்கல்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவையொட்டி 'எல்லோருக்கும் எல்லாம்’ எனும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் வேடசந்தூரில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நெல்லிக்குப்பம் புகழேந்தி மற்றும் வேடசந்தூர் தேர்தல் பொறுப்பாளர் நாச்சிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டத்தில் நாச்சிமுத்து பேசுகையில், "திமுகவில், ஒரு கிளைக் கழகச் செயலாளருக்கு இருக்கிற அருகதை எந்த கட்சியிலும் கிடையாது. ஒரு கிளைக் கழகச் செயலாளர் இரு வண்ணக் கொடியுடன் உள்ள வேஷ்டியை அணிந்து சென்றால் மாவட்ட ஆட்சியரே எழுந்து நிற்பார்" என்று கூறினார்.

பின்னர், பொதுக்கூட்டத்தில் நெல்லிக்குப்பம் புகழேந்தி பேசுகையில், "நான் தற்போது வாரிய தலைவராக இருக்கிறேன். முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். கீழே இருந்து பார்க்கும் உங்களுக்கு நாங்கள் பேரூராட்சித் தலைவர்கள், எம்எல்ஏவாக இருக்கிறார்கள் என்று தோன்றும். ஆனால், வேட்பாளரை அறிவித்துவிட்டால் அவரை விட பாவம் எவரும் இல்லை.

தேர்தல் நேரத்தில் ஒருவர் தன்னிடம் 50 ஓட்டுகள் இருக்கிறது என்று கூறுவார். அவரை எதிர்த்து நம்மால் பேச இயலாது. ஏனென்றால் தேர்தல் நேரத்தில் எதாவது கலவரத்தை ஏற்படுத்துவர். ஓட்டு யார் போடுவார்கள் என்பதற்குத் தாய்மார்கள் தான் இலக்கணம்" என்றார்.

நிதி அறிக்கை விளக்கக் கூட்டம் என்று கூறிவிட்டுத் தொடர்ந்து இருவரும் மேடையில் சர்ச்சையாகப் பேசியது திமுகவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: புதுச்சேரி சிறுமி கொலை; ஒரு வாரத்தில் தண்டனை கிடைக்க நடவடிக்கை - தமிழிசை சௌந்தரராஜன்

Last Updated : Mar 7, 2024, 11:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.