ETV Bharat / state

நேதாஜியின் ராணுவத்தில் இருந்தவரின் ஓய்வூதிய பாக்கி..வங்கி கணக்கில் ரூ.15.31 லட்சம்! - நீதிமன்றம் விதித்த முக்கிய தீர்ப்பு - Freedom fighter pension

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 9, 2024, 8:27 AM IST

Madras high court: சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி தொகை 15 லட்சத்து 31 ஆயிரம் ரூபாயை அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்ததை அடுத்து, அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் பங்கெடுத்திருந்த திருவள்ளூரைச் சேர்ந்த 97 வயது சுதந்திர போராட்ட வீரர் வேலு என்பவருக்கு, 2021ம் ஆண்டு முதல் சுதந்திர போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

ஆனால், ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்த 1987ம் ஆண்டு முதல் கணக்கிட்டு, தனக்கு ஓய்வூதிய பாக்கியை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 2008ம் ஆண்டு முதல் 2021 வரைக்கான ஓய்வூதிய பாக்கியை வழங்கும்படி, தமிழக பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது.

கடந்த 2022ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என சுதந்திர போராட்ட வீரர் வேலு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், "உத்தரவை அமல்படுத்த 10 நாட்கள் அவகாசம் வழங்கியும் ஓய்வூதிய பாக்கி தொகை வழங்கப்படாததால், பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்".

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஓய்வூதிய பாக்கியை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன், பிடிவாரண்ட் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.

இந்நிலையில், சுதந்திர போராட்ட வீரர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நேற்று (ஜூலை 8) விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுத்துறை செயலாளர் சாந்தி நேரில் ஆஜராகி இருந்தார். சுதந்திர போராட்ட வீரர் வேலுவுக்கான ஓய்வூதிய பாக்கி 15 லட்சத்து 31 ஆயிரம் ரூபாயை அவரது வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டதாக தமிழக அரசு தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தமிழக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சிறந்த பொறியியல் கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்வது எப்படி? - கல்வியாளர் அஸ்வின் ஆலோசனை!

சென்னை: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் பங்கெடுத்திருந்த திருவள்ளூரைச் சேர்ந்த 97 வயது சுதந்திர போராட்ட வீரர் வேலு என்பவருக்கு, 2021ம் ஆண்டு முதல் சுதந்திர போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

ஆனால், ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்த 1987ம் ஆண்டு முதல் கணக்கிட்டு, தனக்கு ஓய்வூதிய பாக்கியை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 2008ம் ஆண்டு முதல் 2021 வரைக்கான ஓய்வூதிய பாக்கியை வழங்கும்படி, தமிழக பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது.

கடந்த 2022ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என சுதந்திர போராட்ட வீரர் வேலு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், "உத்தரவை அமல்படுத்த 10 நாட்கள் அவகாசம் வழங்கியும் ஓய்வூதிய பாக்கி தொகை வழங்கப்படாததால், பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்".

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஓய்வூதிய பாக்கியை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன், பிடிவாரண்ட் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.

இந்நிலையில், சுதந்திர போராட்ட வீரர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நேற்று (ஜூலை 8) விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுத்துறை செயலாளர் சாந்தி நேரில் ஆஜராகி இருந்தார். சுதந்திர போராட்ட வீரர் வேலுவுக்கான ஓய்வூதிய பாக்கி 15 லட்சத்து 31 ஆயிரம் ரூபாயை அவரது வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டதாக தமிழக அரசு தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தமிழக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சிறந்த பொறியியல் கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்வது எப்படி? - கல்வியாளர் அஸ்வின் ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.