ETV Bharat / state

267 கிலோ தங்கம் கடத்தல் விவகாரம்; விமான நிலையத்தில் மேலும் இரண்டு கடைகளில் சோதனை? - 267 kg Gold Smuggling

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 3, 2024, 10:27 PM IST

267 kg Gold Smuggling: சென்னை விமான நிலையத்தில் ரூ.167 கோடி மதிப்புடைய 267 கிலோ தங்கம் கடத்தல் சம்பவத்தில் ஏற்கனவே விமான நிலையத்தில் பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடை சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 2 கடைகளில் சோதனை நடத்த சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் கடத்தப்பட்ட தங்கம்
சென்னை விமான நிலையத்தில் கடத்தப்பட்ட தங்கம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை விமான நிலையத்தில் கடந்த இரண்டு மாதங்களில் ரூ.167 கோடி மதிப்புடைய 267 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னை விமான நிலைய சுங்கத்துறை தனிப்படை அதிகாரிகள் சென்னை சர்வதேச விமான நிலைய புறப்பாடு பகுதியில் பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை சோதனை நடத்தினர்.

இந்நிலையில், தங்கம் கடத்தலில் உடந்தையாக இருந்த கடை நடத்தி வரும் யூடிபர் சபீர் அலி, இலங்கையைச் சேர்ந்த ட்ரான்சிட் பயணி, சபீர் அலியின் பரிசுப் பொருட்கள் விற்பனை கடையில் பணியாளர்கள் உள்ள ஏழு பேர் ஆகிய 9 பேர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இதற்கிடையே, சென்னை விமான நிலைய சுங்கத்துறை சுய அதிகாரிகள் கொண்ட தனிப்படையினர் இது சம்பந்தமாக மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள் இருவர், இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்தது. இதை அடுத்து சென்னை விமான நிலையத்தின் கமர்சியல் பிரிவில் இணை பொது மேலாளர் பொறுப்பில் உள்ள ஒரு அதிகாரியிடம் சுங்க அதிகாரிகள் குழுவினர் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

அதோடு அவருடைய அலுவலகம் மற்றும் அந்த விமான நிலைய உயர் அதிகாரியின் காஞ்சிபுரம் வீடு ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது. மேலும் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் இருந்து விமான நிலையங்களில் கடைகள் வர்த்தக நிறுவனங்கள் தொடங்குவதற்கான உரிமங்கள் வழங்குவதற்கான அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனமான வித்வேதா பி.ஆர்.ஜி (Vidvedaa PRG) பொது மேலாளர் உட்பட இருவரிடமும் விசாரணையும் அவர்களுடைய அலுவலகங்களில் சோதனைகளும் நடந்தன.

இதில் அந்த தனியார் நிறுவனத்தின் பொது மேலாளர் பாஜக கட்சியை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த சோதனைகளில் முக்கியமான ஆவணங்கள் பெருமளவு பணம் தங்கக் கட்டிகள் சிக்கியதா? என்பது குறித்து விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் இதுவரையில் அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

மேலும் இந்த சம்பவங்கள் குறித்து நாங்கள் தொடர்ந்து விசாரணைகள், சோதனைகள் நடத்திக் கொண்டு இருக்கிறோம். சென்னை விமான நிலைய உயர் அதிகாரி ஒருவரிடம் விசாரணைகள் நடத்தி அவருடைய அலுவலகம் மற்றும் வீடு ஆகியவற்றில் சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் அதில் பெரிய அளவில் ஆவணங்களோ மற்றும் பணம் பொருட்களோ கைப்பற்றப்படவில்லை.

அதோடு இதில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன அலுவலகத்திலும் சோதனைகள் நடத்தப்பட்டன. அதோடு இந்த தனியார் நிறுவனத்தை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் இதுவரை விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே தனியார் நிறுவன அதிகாரிகள் இருவருக்கும் சம்மன் அனுப்பி வரவழைத்து, விசாரணை நடத்த இருக்கிறோம் என சுங்கத்துறை அதிகாரி தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது இதில் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர் யாராவது சம்பந்தப்பட்டுள்ளனரா? என்பது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. ஏனென்றால் நாங்கள் தங்கம் கடத்தல் ஒன்றையே குறிக்கோளாக வைத்து விசாரணையை நடத்தி வருகிறோம். அரசியல் கட்சி ரீதியாக எந்த விசாரணையும், நாங்கள் நடத்தவில்லை. எங்கள் விசாரணைக்கு எந்தவிதமான நெருக்கடியும் இல்லை. எங்களுடைய விசாரணை சுதந்திரமாக நடந்து வருகிறது.

அதோடு இந்த பரிசுப் பொருட்கள் கடையை மையமாக வைத்து தங்கம் கடத்தும் சம்பவங்கள் நடந்துள்ளது என்பதை நாங்கள் கண்டுபிடித்த அதே தினத்தில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள மேலும் தனியார் ஷூஸ் மற்றும் தனியார் சில்க்ஸ் ஆகிய 2 கடைகளும் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. எனவே எங்களுக்கு அந்த இரு கடைகள் மீதும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது கூடுதலாக மேலும் அந்த இரண்டு கடைகளிலும் சோதனைகள் மற்றும் விசாரணைகள் நடத்த இருக்கிறோம் என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நத்தப்பேட்டை ஏரி கழிவுநீர் விவகாரம்; காஞ்சிபுரம் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு! - Nathapettai lake issue

சென்னை: சென்னை விமான நிலையத்தில் கடந்த இரண்டு மாதங்களில் ரூ.167 கோடி மதிப்புடைய 267 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னை விமான நிலைய சுங்கத்துறை தனிப்படை அதிகாரிகள் சென்னை சர்வதேச விமான நிலைய புறப்பாடு பகுதியில் பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை சோதனை நடத்தினர்.

இந்நிலையில், தங்கம் கடத்தலில் உடந்தையாக இருந்த கடை நடத்தி வரும் யூடிபர் சபீர் அலி, இலங்கையைச் சேர்ந்த ட்ரான்சிட் பயணி, சபீர் அலியின் பரிசுப் பொருட்கள் விற்பனை கடையில் பணியாளர்கள் உள்ள ஏழு பேர் ஆகிய 9 பேர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இதற்கிடையே, சென்னை விமான நிலைய சுங்கத்துறை சுய அதிகாரிகள் கொண்ட தனிப்படையினர் இது சம்பந்தமாக மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள் இருவர், இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்தது. இதை அடுத்து சென்னை விமான நிலையத்தின் கமர்சியல் பிரிவில் இணை பொது மேலாளர் பொறுப்பில் உள்ள ஒரு அதிகாரியிடம் சுங்க அதிகாரிகள் குழுவினர் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

அதோடு அவருடைய அலுவலகம் மற்றும் அந்த விமான நிலைய உயர் அதிகாரியின் காஞ்சிபுரம் வீடு ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது. மேலும் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் இருந்து விமான நிலையங்களில் கடைகள் வர்த்தக நிறுவனங்கள் தொடங்குவதற்கான உரிமங்கள் வழங்குவதற்கான அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனமான வித்வேதா பி.ஆர்.ஜி (Vidvedaa PRG) பொது மேலாளர் உட்பட இருவரிடமும் விசாரணையும் அவர்களுடைய அலுவலகங்களில் சோதனைகளும் நடந்தன.

இதில் அந்த தனியார் நிறுவனத்தின் பொது மேலாளர் பாஜக கட்சியை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த சோதனைகளில் முக்கியமான ஆவணங்கள் பெருமளவு பணம் தங்கக் கட்டிகள் சிக்கியதா? என்பது குறித்து விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் இதுவரையில் அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

மேலும் இந்த சம்பவங்கள் குறித்து நாங்கள் தொடர்ந்து விசாரணைகள், சோதனைகள் நடத்திக் கொண்டு இருக்கிறோம். சென்னை விமான நிலைய உயர் அதிகாரி ஒருவரிடம் விசாரணைகள் நடத்தி அவருடைய அலுவலகம் மற்றும் வீடு ஆகியவற்றில் சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் அதில் பெரிய அளவில் ஆவணங்களோ மற்றும் பணம் பொருட்களோ கைப்பற்றப்படவில்லை.

அதோடு இதில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன அலுவலகத்திலும் சோதனைகள் நடத்தப்பட்டன. அதோடு இந்த தனியார் நிறுவனத்தை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் இதுவரை விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே தனியார் நிறுவன அதிகாரிகள் இருவருக்கும் சம்மன் அனுப்பி வரவழைத்து, விசாரணை நடத்த இருக்கிறோம் என சுங்கத்துறை அதிகாரி தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது இதில் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர் யாராவது சம்பந்தப்பட்டுள்ளனரா? என்பது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. ஏனென்றால் நாங்கள் தங்கம் கடத்தல் ஒன்றையே குறிக்கோளாக வைத்து விசாரணையை நடத்தி வருகிறோம். அரசியல் கட்சி ரீதியாக எந்த விசாரணையும், நாங்கள் நடத்தவில்லை. எங்கள் விசாரணைக்கு எந்தவிதமான நெருக்கடியும் இல்லை. எங்களுடைய விசாரணை சுதந்திரமாக நடந்து வருகிறது.

அதோடு இந்த பரிசுப் பொருட்கள் கடையை மையமாக வைத்து தங்கம் கடத்தும் சம்பவங்கள் நடந்துள்ளது என்பதை நாங்கள் கண்டுபிடித்த அதே தினத்தில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள மேலும் தனியார் ஷூஸ் மற்றும் தனியார் சில்க்ஸ் ஆகிய 2 கடைகளும் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. எனவே எங்களுக்கு அந்த இரு கடைகள் மீதும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது கூடுதலாக மேலும் அந்த இரண்டு கடைகளிலும் சோதனைகள் மற்றும் விசாரணைகள் நடத்த இருக்கிறோம் என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நத்தப்பேட்டை ஏரி கழிவுநீர் விவகாரம்; காஞ்சிபுரம் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு! - Nathapettai lake issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.