ETV Bharat / state

10 ஆண்டுகளுக்கு பிறகு மனைவி கர்ப்பம்.. தந்தையின் இறுதிச் சடங்கின் போது பிறந்த குழந்தை.. விழுப்புரம் அருகே சோகம்! - villupuram death case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 11:02 AM IST

construction worker death: மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்த கட்டடத் தொழிலாளியின் இறுதிச் சடங்கின் போது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்தது. திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து குழந்தை பிறந்தும் கணவனை இழந்ததால் நீங்க துயரத்தில் ஆழ்ந்த விழுப்புரம் பெண்.

விழுப்புரம் பெயர்பலகை மற்றும் குழந்தை(கோப்புப்படம்)
விழுப்புரம் பெயர்பலகை மற்றும் குழந்தை(கோப்புப்படம்) (credits-ETV Bharat Tamil Nadu)

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த வி.அகரம் பள்ளிக்கூடத் தெரு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் சாரதி(28), கட்டடத் தொழில் செய்து வருகிறார். இவர், கடந்த 23-ஆம் தேதி வளவனூரை அடுத்த கெங்கராம்பாளையம் பகுதியில் ஸ்ரீதரின் என்பவரின் விவசாய நிலத்தில் மோட்டார் கொட்டகை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கிருந்த நீளமான இரும்புக் கம்பியை தூக்கியபோது, மேலே சென்ற உயர் மின்னழுத்த கம்பியில் இரும்புக் கம்பி உரசியதில் உடலில் மின்சாரம் பாய்ந்து சாரதி பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து அவர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும், அங்கு சாரதி கடந்த புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சாரதிக்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு சத்யபிரியா(27) என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்தது. இந்நிலையில் சத்யபிரியா நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சாரதி உயிரிழந்துள்ளார்.

நேற்று அவருக்கு இறுதிச் சடங்கு நடைபெற்று முடிந்த நிலையில் அவருடைய மனைவிக்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைப் பேறு இல்லாமல் 10 ஆண்டுகளாக தவித்து வந்த நிலையில் தற்போது குழந்தையின் முகத்தை பார்க்காமல் சாரதி உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் தங்களது வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் இளைஞர் அடித்துக் கொலை; உறவினர்கள் சாலை மறியல்! - Youth Died In Puducherry

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த வி.அகரம் பள்ளிக்கூடத் தெரு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் சாரதி(28), கட்டடத் தொழில் செய்து வருகிறார். இவர், கடந்த 23-ஆம் தேதி வளவனூரை அடுத்த கெங்கராம்பாளையம் பகுதியில் ஸ்ரீதரின் என்பவரின் விவசாய நிலத்தில் மோட்டார் கொட்டகை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கிருந்த நீளமான இரும்புக் கம்பியை தூக்கியபோது, மேலே சென்ற உயர் மின்னழுத்த கம்பியில் இரும்புக் கம்பி உரசியதில் உடலில் மின்சாரம் பாய்ந்து சாரதி பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து அவர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும், அங்கு சாரதி கடந்த புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சாரதிக்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு சத்யபிரியா(27) என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்தது. இந்நிலையில் சத்யபிரியா நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சாரதி உயிரிழந்துள்ளார்.

நேற்று அவருக்கு இறுதிச் சடங்கு நடைபெற்று முடிந்த நிலையில் அவருடைய மனைவிக்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைப் பேறு இல்லாமல் 10 ஆண்டுகளாக தவித்து வந்த நிலையில் தற்போது குழந்தையின் முகத்தை பார்க்காமல் சாரதி உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் தங்களது வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் இளைஞர் அடித்துக் கொலை; உறவினர்கள் சாலை மறியல்! - Youth Died In Puducherry

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.