ETV Bharat / state

அனுமதியின்றியே கட்டுமானம்.. பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா விவகாரத்தில் தமிழக அரசு வாதம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 5:24 PM IST

Prakash raj - Bobby Simha Kodaikanal bungalow: விதிமுறைகளை மீறி நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் கொடைக்கானலில் கட்டியுள்ள கட்டுமானம் குறித்த வழக்கில், நோட்டீஸ் கொடுக்கப்பட்ட பின் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விளக்கமளித்துள்ளது.

நோட்டீஸுக்கு பின் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டதாக தமிழக அரசு விளக்கம்
நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா மீதான விதிமீறல் கட்டுமான வழக்கு

மதுரை: திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஜுனைத் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் பிரபல நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் சொந்தமாக பங்களா கட்டி உள்ளனர்.

இந்த பங்களாவிற்கு கொடைக்கானல் நகராட்சியிடம் இருந்து உரிய அனுமதி பெறாமல், விதிமுறைகளை பின்பற்றாமல் கட்டிங்களை எழுப்பி உள்ளனர். இது போன்று விதிமுறைகளை பின்பற்றாமல் கட்டடம் கட்டுவதால், கொடைக்கானலில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், அருகில் உள்ள வீடுகளும் இடிவதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளன.

மேலும், கனரக இயந்திரங்கள் மூலமாக மலையில் உள்ள பாறைகளை அகற்றி உள்ளனர். இது விதிமுறைகளை பின்பற்றாமல் நடைபெற்றுள்ளது. எனவே உரிய அனுமதி இல்லாமல், விதிமுறைகளை பின்பற்றாமல் மலைப் பகுதியில் கட்டடம் கட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்”, என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மார்ச் 5) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் கொடைக்கானலில் கட்டியுள்ள கட்டுமானம் உரிய அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டது.

இருவரும் மேற்கொண்ட கட்டுமானப் பணிகளை நிறுத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, தற்போது கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளவில்லை. உள்ளூர் திட்டக்குழுமம் அனுமதியற்ற கட்டுமானம் மீது தேவையான நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது” என வாதிட்டார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: சட்டவிரோத கொடிக்கம்பம் விவகாரம்; நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு!

மதுரை: திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஜுனைத் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் பிரபல நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் சொந்தமாக பங்களா கட்டி உள்ளனர்.

இந்த பங்களாவிற்கு கொடைக்கானல் நகராட்சியிடம் இருந்து உரிய அனுமதி பெறாமல், விதிமுறைகளை பின்பற்றாமல் கட்டிங்களை எழுப்பி உள்ளனர். இது போன்று விதிமுறைகளை பின்பற்றாமல் கட்டடம் கட்டுவதால், கொடைக்கானலில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், அருகில் உள்ள வீடுகளும் இடிவதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளன.

மேலும், கனரக இயந்திரங்கள் மூலமாக மலையில் உள்ள பாறைகளை அகற்றி உள்ளனர். இது விதிமுறைகளை பின்பற்றாமல் நடைபெற்றுள்ளது. எனவே உரிய அனுமதி இல்லாமல், விதிமுறைகளை பின்பற்றாமல் மலைப் பகுதியில் கட்டடம் கட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்”, என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மார்ச் 5) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் கொடைக்கானலில் கட்டியுள்ள கட்டுமானம் உரிய அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டது.

இருவரும் மேற்கொண்ட கட்டுமானப் பணிகளை நிறுத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, தற்போது கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளவில்லை. உள்ளூர் திட்டக்குழுமம் அனுமதியற்ற கட்டுமானம் மீது தேவையான நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது” என வாதிட்டார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: சட்டவிரோத கொடிக்கம்பம் விவகாரம்; நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.