ETV Bharat / state

கச்சத்தீவு விவகாரத்தில் ஆர்டிஐ சட்டத்தை பாஜக பயன்படுத்தியது சட்ட விரோதமான செயல் - காங்கிரஸ் நிர்வாகி இப்ராஹிம் - Kathchatheevu issue RTI Act

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 1, 2024, 10:33 PM IST

Kathchatheevu issue RTI Act: கச்சத்தீவு விவகாரத்தில், பாஜகவினர் சட்ட விரோதமாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி உள்ளனர் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் இப்ராஹிம் கூறியுள்ளார்.

கச்சத்தீவு விவகாரத்தில் ஆர்டிஐ சட்டத்தை பாஜக பயன்படுத்தியது சட்ட விரோதமான செயல்
கச்சத்தீவு விவகாரத்தில் ஆர்டிஐ சட்டத்தை பாஜக பயன்படுத்தியது சட்ட விரோதமான செயல்

திருச்சி: காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் மீதும், கட்சித் தலைவர்கள் மீதும், இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மீதும் பாஜக விரோத போக்கை கடைப்பிடித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியை முடக்குவதில் குறியாக இருக்கும் பாஜக அரசு, காங்கிரஸ் கட்சியின் நிதியை முடக்கி உள்ளது.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றவர்கள் ஆட்சிக்குப் பங்கம் வந்து விடக் கூடாது என்பதற்காகவும், இந்தியா கூட்டணி வலுவடைந்து விடக் கூடாது என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முந்தைய கணக்கிற்கு இன்று வரி விதிப்பு செய்கின்றனர். 2017 முதல் 2024ஆம் ஆண்டு வரை 1,823 கோடி வரி விதிப்பு செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ., எம்.பி.,க்களிடம் இருந்து 14 லட்சம் நகை, பணமாகப் பெற்றதற்கு, 45 நாட்கள் கணக்கில் காட்டப்படவில்லை, என்று காரணம் கூறுகின்றனர்.

இதற்கு 132 கோடி வரிவிதிப்பு செய்துள்ளனர். இந்தியா கூட்டணியின் வளர்ச்சி பாஜகவினருக்குக் காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளில், 42 கோடி ரூபாய் பாஜக கட்சிக்கு நிதி பெறப்பட்டுள்ளது.

14 லட்சத்து 132 கோடி ரூபாய் வரி விதிப்பு செய்தவர்கள், 42 கோடிக்கு 4,200 கோடி வரி விதிப்பு செய்திருக்க வேண்டும். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., போன்ற துறைகள் ஒரு தலைப் பட்சமாக இயங்குகிறது. காங்கிரஸ் கட்சியின் பணம் முடக்கத்தை, ஒவ்வொருவரின் உரிமையைப் பறிக்கும், ஜனநாயக படுகொலையாகப் பார்க்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியை முடக்கி விட்டால், வரும் தேர்தலில் போட்டியிடும் வீரியத்தைக் குறைத்து விடலாம் என்று திட்டமிடுகின்றனர். இதுவரை, இந்தியா வரலாற்றில், மாநில முதல்வரைக் கைது செய்ததில்லை. காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் கணக்கு முடக்கத்தை ஐ.நா. சபை கண்டித்து இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை முடக்குவதன் மூலம் எளிதாக வென்று விடலாம், என்பது பாஜக கட்சியின் யுக்தி. இந்தியாவில் 4,000 சதுர கி.மீ., ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதையும், தமிழ்நாடு முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, கச்சத்தீவு மீட்பு பற்றி கேள்வி எழுப்பிய போதும் கண்டு கொள்ளாத பிரதமர், இப்போது கச்சத்தீவு பிரச்சனையைப் பற்றிப் பேசுகிறார்.

கச்சத்தீவு விவகாரத்தில், சட்ட விரோதமாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி உள்ளனர். தமிழ்நாடு மக்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணக்குப் போட்டு, கச்சத்தீவு விவகாரத்தைக் கையில் எடுப்பதால் தமிழ்நாட்டில் காலூன்றி விடலாம் என்று நினைக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "பாசிச பாஜகவை வீழ்த்துவோம்" - இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் முழக்கம்! - MK Stalin Speech In INDIA Alliance

திருச்சி: காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் மீதும், கட்சித் தலைவர்கள் மீதும், இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மீதும் பாஜக விரோத போக்கை கடைப்பிடித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியை முடக்குவதில் குறியாக இருக்கும் பாஜக அரசு, காங்கிரஸ் கட்சியின் நிதியை முடக்கி உள்ளது.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றவர்கள் ஆட்சிக்குப் பங்கம் வந்து விடக் கூடாது என்பதற்காகவும், இந்தியா கூட்டணி வலுவடைந்து விடக் கூடாது என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முந்தைய கணக்கிற்கு இன்று வரி விதிப்பு செய்கின்றனர். 2017 முதல் 2024ஆம் ஆண்டு வரை 1,823 கோடி வரி விதிப்பு செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ., எம்.பி.,க்களிடம் இருந்து 14 லட்சம் நகை, பணமாகப் பெற்றதற்கு, 45 நாட்கள் கணக்கில் காட்டப்படவில்லை, என்று காரணம் கூறுகின்றனர்.

இதற்கு 132 கோடி வரிவிதிப்பு செய்துள்ளனர். இந்தியா கூட்டணியின் வளர்ச்சி பாஜகவினருக்குக் காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளில், 42 கோடி ரூபாய் பாஜக கட்சிக்கு நிதி பெறப்பட்டுள்ளது.

14 லட்சத்து 132 கோடி ரூபாய் வரி விதிப்பு செய்தவர்கள், 42 கோடிக்கு 4,200 கோடி வரி விதிப்பு செய்திருக்க வேண்டும். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., போன்ற துறைகள் ஒரு தலைப் பட்சமாக இயங்குகிறது. காங்கிரஸ் கட்சியின் பணம் முடக்கத்தை, ஒவ்வொருவரின் உரிமையைப் பறிக்கும், ஜனநாயக படுகொலையாகப் பார்க்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியை முடக்கி விட்டால், வரும் தேர்தலில் போட்டியிடும் வீரியத்தைக் குறைத்து விடலாம் என்று திட்டமிடுகின்றனர். இதுவரை, இந்தியா வரலாற்றில், மாநில முதல்வரைக் கைது செய்ததில்லை. காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் கணக்கு முடக்கத்தை ஐ.நா. சபை கண்டித்து இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை முடக்குவதன் மூலம் எளிதாக வென்று விடலாம், என்பது பாஜக கட்சியின் யுக்தி. இந்தியாவில் 4,000 சதுர கி.மீ., ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதையும், தமிழ்நாடு முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, கச்சத்தீவு மீட்பு பற்றி கேள்வி எழுப்பிய போதும் கண்டு கொள்ளாத பிரதமர், இப்போது கச்சத்தீவு பிரச்சனையைப் பற்றிப் பேசுகிறார்.

கச்சத்தீவு விவகாரத்தில், சட்ட விரோதமாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி உள்ளனர். தமிழ்நாடு மக்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணக்குப் போட்டு, கச்சத்தீவு விவகாரத்தைக் கையில் எடுப்பதால் தமிழ்நாட்டில் காலூன்றி விடலாம் என்று நினைக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "பாசிச பாஜகவை வீழ்த்துவோம்" - இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் முழக்கம்! - MK Stalin Speech In INDIA Alliance

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.