ETV Bharat / state

சீமானுக்கு நெருக்கடி கொடுப்பதே நோக்கமா? அமைச்சர் முத்துசாமி சொல்வது என்ன? - Minister Muthusamy

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 12, 2024, 9:52 PM IST

Minister Muthusamy: சாட்டை துரைமுருகன் விவகாரத்தில் அரசுக்கு பேச்சுரிமையைக் கட்டுப்படுத்தும் நோக்கம் இல்லை என்றும், சீமானுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கம் அரசுக்கும் இல்லை, முதலமைச்சருக்கும் இல்லை என மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் முத்துசாமி
அமைச்சர் முத்துசாமி (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈரோடு: பெருந்துறையில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவ படிப்புக்கான பட்டமளிப்பு விழா, நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு 100 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அமைச்சர் முத்துசாமி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “வீட்டு வசதி வாரியத்தின் கீழ் சுயநிதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் சிதிலமடைந்து இருப்பதால் வீடு கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக அரசு கட்டிடத்திற்கு அனுமதி பெறுவதில் உள்ள பிரச்னைகள் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று களையப்பட்டு உள்ளது. இதில் 2,500 - 3,000 வரை சதுர அடியில் கட்டிடம் கட்ட சுயசான்றிதழ் போதுமானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெருந்துறையில் புதிதாக சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணிகள் 6 மாதத்தில் நிறைவுபெறும். இதனால் தொடர்ந்து ஈரோடு மாநகரப் பகுதியில் பொது சுத்திகரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.

சாட்டை துரைமுருகன் பேச்சுரிமையைக் கட்டுப்படுத்த எந்த விதமான நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை, அனைவரும் பேச்சுரிமையோடு தான் பேசி வருகிறார்கள். சாட்டை துரைமுருகன் விவகாரத்தில் நீதிமன்றம் சொல்வதை அரசு ஏற்று செயல்படுகிறது. யாருடைய பேச்சு சுதந்திரத்தையும் திமுக தலைமையிலான அரசு தடை செய்யக்கூடாது என்பதில் முதலமைச்சர் தெளிவாக உள்ளார்” என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் முத்துச்சாமி, சீமானுக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கம் அரசுக்கும், முதலமைச்சருக்கும் இல்லை என்றும், மத்திய அரசின் சிபிஐ எப்போது வேண்டுமானாலும் தமிழகத்தில் விசாரணை செய்யட்டும். குற்றம் இருந்தால் மத்திய அரசின் சிபிஐ இதுவரை சும்மா இருக்குமா? சிபிஐ விசாரணை நடத்தினால் அதன் மூலம் எங்களுக்கு நற்சான்றிதழ் கிடைத்தது போன்று இருக்கும்” என்றார்.

இதையும் படிங்க: திருச்சி அருகே பிரதமர் மோடிக்கு கோயில்.. 1,000 பேருக்கு கிடா விருந்து வழங்க முடிவு! - Temple for PM Modi

ஈரோடு: பெருந்துறையில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவ படிப்புக்கான பட்டமளிப்பு விழா, நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு 100 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அமைச்சர் முத்துசாமி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “வீட்டு வசதி வாரியத்தின் கீழ் சுயநிதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் சிதிலமடைந்து இருப்பதால் வீடு கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக அரசு கட்டிடத்திற்கு அனுமதி பெறுவதில் உள்ள பிரச்னைகள் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று களையப்பட்டு உள்ளது. இதில் 2,500 - 3,000 வரை சதுர அடியில் கட்டிடம் கட்ட சுயசான்றிதழ் போதுமானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெருந்துறையில் புதிதாக சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணிகள் 6 மாதத்தில் நிறைவுபெறும். இதனால் தொடர்ந்து ஈரோடு மாநகரப் பகுதியில் பொது சுத்திகரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.

சாட்டை துரைமுருகன் பேச்சுரிமையைக் கட்டுப்படுத்த எந்த விதமான நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை, அனைவரும் பேச்சுரிமையோடு தான் பேசி வருகிறார்கள். சாட்டை துரைமுருகன் விவகாரத்தில் நீதிமன்றம் சொல்வதை அரசு ஏற்று செயல்படுகிறது. யாருடைய பேச்சு சுதந்திரத்தையும் திமுக தலைமையிலான அரசு தடை செய்யக்கூடாது என்பதில் முதலமைச்சர் தெளிவாக உள்ளார்” என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் முத்துச்சாமி, சீமானுக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கம் அரசுக்கும், முதலமைச்சருக்கும் இல்லை என்றும், மத்திய அரசின் சிபிஐ எப்போது வேண்டுமானாலும் தமிழகத்தில் விசாரணை செய்யட்டும். குற்றம் இருந்தால் மத்திய அரசின் சிபிஐ இதுவரை சும்மா இருக்குமா? சிபிஐ விசாரணை நடத்தினால் அதன் மூலம் எங்களுக்கு நற்சான்றிதழ் கிடைத்தது போன்று இருக்கும்” என்றார்.

இதையும் படிங்க: திருச்சி அருகே பிரதமர் மோடிக்கு கோயில்.. 1,000 பேருக்கு கிடா விருந்து வழங்க முடிவு! - Temple for PM Modi

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.