ETV Bharat / state

தயாநிதி மாறனின் அவதூறு வழக்கு; ஈபிஎஸ் விலக்கு கோரிய மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு! - Dayanidhi Maran Defamation case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி மற்றும் தயாநிதி மாறன்
எடப்பாடி பழனிசாமி மற்றும் தயாநிதி மாறன் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: நடைபெற்று முடிந்த 2024 மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது, மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சென்னை எம்பியாக இருந்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என குற்றம்சாட்டினார்.

இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில், உண்மைக்கு மாறாகவும் தன் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் தவறான குற்றச்சாட்டை பழனிசாமி கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: “எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராவதில் ஆட்சேபனை இல்லை”.. தயாநிதி மாறன்!

இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு இன்று (செப்.25) விசாரணைக்கு வந்தது. அப்போது, தயாநிதி மாறன் நேரில் ஆஜராகவில்லை, எனவே விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என அவரது தரப்பு வழக்குரைஞர் கோரினார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தார். அதற்கு, ‘விடுவிக்க கோரிய மனு விசாரணைக்கு உகந்தது அல்ல, வழக்கு எண்ணிடக் கூடாது, எனவே எந்த இந்த மனுவை ஏற்கக் கூடாது’ என தயாநிதி மாறன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டர்.

பின்னர் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு மனு மீது வாதங்கள் நிறைவடைந்த நிலையில், அதன் மீது அக்டோபர் 16ஆம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

சென்னை: நடைபெற்று முடிந்த 2024 மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது, மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சென்னை எம்பியாக இருந்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என குற்றம்சாட்டினார்.

இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில், உண்மைக்கு மாறாகவும் தன் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் தவறான குற்றச்சாட்டை பழனிசாமி கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: “எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராவதில் ஆட்சேபனை இல்லை”.. தயாநிதி மாறன்!

இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு இன்று (செப்.25) விசாரணைக்கு வந்தது. அப்போது, தயாநிதி மாறன் நேரில் ஆஜராகவில்லை, எனவே விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என அவரது தரப்பு வழக்குரைஞர் கோரினார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தார். அதற்கு, ‘விடுவிக்க கோரிய மனு விசாரணைக்கு உகந்தது அல்ல, வழக்கு எண்ணிடக் கூடாது, எனவே எந்த இந்த மனுவை ஏற்கக் கூடாது’ என தயாநிதி மாறன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டர்.

பின்னர் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு மனு மீது வாதங்கள் நிறைவடைந்த நிலையில், அதன் மீது அக்டோபர் 16ஆம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.