ETV Bharat / state

குட்கா முறைகேடு வழக்கு: விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம்; காரணம் என்ன? - gutka scam case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2024, 9:47 PM IST

Gutka Scam Case: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோர் மீதான குட்கா முறைகேடு வழக்கில், கூடுதல் குற்றப்பத்திரிக்கை தயாராகவில்லை என்பதால் விசாரணையை தள்ளிவைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற கோப்புப்படம்
சென்னை உயர்நீதிமன்ற கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கபட்ட புகாரில் டெல்லி சிபிஐ காவல்துறை வழக்கை விசாரித்து வருகின்றது. இதில், குடோன் உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ இவர்களுக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

ஏற்கனவே உள்ள 6 பேருடன் கூடுதலாக மத்திய, மாநில அரசு அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பெயர்களை இணைத்து சிபிஐ கூடுதல் குற்றபத்திரிகை தாக்கல் செய்தது.

அதில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா என்ற பி.வெங்கடரமணா, டாக்டர் சி.விஜயபாஸ்கர், சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், வணிக வரித்துறை இணை ஆணையராக பதவி வகித்த வி.எஸ்.குறிஞ்சிச்செல்வன், வணிக வரித்துறை கூடுதல் தலைமை செயலாளராக பதவி வகித்த எஸ்.கணேசன், சுகாதாரத்துறை அதிகாரிகளான டாக்டர். லக்ஷ்மி நாராயணன், காவல்துறை உதவி ஆணையராக பதவி வகித்த ஆர்.மன்னர் மன்னன், காவல் ஆய்வாளராக பதவி வகித்த வி.சம்பத், சென்னை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஏ.பழனி உள்ளிட்ட 21 பேர் மீது கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் முன்னாள் மற்றும் இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதால், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி. சஞ்சய் பாபா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் 19வது குற்றம் சுமத்தப்பட்ட நபரான பி.முருகன் இறந்துவிட்டார். அது தொடர்பான இறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டது. ஒருவர் மீதான குற்றச்சாட்டு சிபிஐ தரப்பில் கைவிடப்பட்டது. இதனையடுத்து மற்ற அனைவரும் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விசாரணை நிறைவடைந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் குற்றபத்திரிகை நகல் அனைவருக்கும் வழங்கும் வகையில் தயாராக இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த வழக்கு விசாரணையை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: "என் மகன் இறந்துட்டான் நீ மட்டும் ஜாலியா இருக்கியா?".. முன்பகையால் 3 வயது சிறுவனை கொன்ற நெல்லை பெண்! - 3 years old male baby child murder

சென்னை: தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கபட்ட புகாரில் டெல்லி சிபிஐ காவல்துறை வழக்கை விசாரித்து வருகின்றது. இதில், குடோன் உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ இவர்களுக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

ஏற்கனவே உள்ள 6 பேருடன் கூடுதலாக மத்திய, மாநில அரசு அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பெயர்களை இணைத்து சிபிஐ கூடுதல் குற்றபத்திரிகை தாக்கல் செய்தது.

அதில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா என்ற பி.வெங்கடரமணா, டாக்டர் சி.விஜயபாஸ்கர், சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், வணிக வரித்துறை இணை ஆணையராக பதவி வகித்த வி.எஸ்.குறிஞ்சிச்செல்வன், வணிக வரித்துறை கூடுதல் தலைமை செயலாளராக பதவி வகித்த எஸ்.கணேசன், சுகாதாரத்துறை அதிகாரிகளான டாக்டர். லக்ஷ்மி நாராயணன், காவல்துறை உதவி ஆணையராக பதவி வகித்த ஆர்.மன்னர் மன்னன், காவல் ஆய்வாளராக பதவி வகித்த வி.சம்பத், சென்னை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஏ.பழனி உள்ளிட்ட 21 பேர் மீது கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் முன்னாள் மற்றும் இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதால், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி. சஞ்சய் பாபா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் 19வது குற்றம் சுமத்தப்பட்ட நபரான பி.முருகன் இறந்துவிட்டார். அது தொடர்பான இறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டது. ஒருவர் மீதான குற்றச்சாட்டு சிபிஐ தரப்பில் கைவிடப்பட்டது. இதனையடுத்து மற்ற அனைவரும் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விசாரணை நிறைவடைந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் குற்றபத்திரிகை நகல் அனைவருக்கும் வழங்கும் வகையில் தயாராக இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த வழக்கு விசாரணையை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: "என் மகன் இறந்துட்டான் நீ மட்டும் ஜாலியா இருக்கியா?".. முன்பகையால் 3 வயது சிறுவனை கொன்ற நெல்லை பெண்! - 3 years old male baby child murder

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.