ETV Bharat / state

“தெருநாய்களை கொண்டு செல்ல மாநகராட்சி ஊழியர்களை சமூக ஆர்வலர்கள் தடுக்கின்றனர்” - தனியார் குடியிருப்புவாசி வாதம்! - Madras High Court

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 2, 2024, 7:38 PM IST

Madras High Court: சென்னை, கோயம்பேடு பகுதியில் உள்ள மெட்ரோ சோன் குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்தக் கோரிய விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Court
சென்னை உயர் நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழகத்தில் சமீப காலமாக தெரு நாய்கள் குழந்தைகளை துரத்தி கடிக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது. அந்த வகையில், சென்னை கோயம்பேட்டில் கட்டப்பட்டுள்ள 'மெட்ரோ சோன்' என்ற மிகப்பெரிய குடியிருப்பு பகுதியில் 50க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இரவு, பகல் பாராமல் சுற்றித்திரிந்து அங்கு செல்பவர்களை விரட்டி கடிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த தெரு நாய்களை அப்புறப்படுத்தக் கோரி அந்த குடியிருப்பில் வசிக்கும் ஷபீனா பாத்திமா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று (ஜூலை 2) பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, தடுப்பூசி போடப்படாத இந்த நாய்களைப் பிடித்து செல்ல மாநகராட்சி ஊழியர்கள் வந்தாலும், சமூக ஆர்வலர் என கூறிக் கொள்ளும் சிலர் நாய்களைக் கொண்டு செல்ல ஊழியர்களை தடுப்பதாக தெரிவித்தார்.

மேலும், நாய்களை துன்புறுத்துவதாக கூறி ப்ளு க்ராஸ் அமைப்பு மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என மாநகராட்சி ஊழியர்களை அவர்கள் மிரட்டுவதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமெனவும் வாதிட்டார்.

மேலும், சென்னை மாநகராட்சி தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, மனுதாரரின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: பெண் தொழில்முனைவோருக்கான TN-RISE திட்டத்தை துவக்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்! - TN RISE

சென்னை: தமிழகத்தில் சமீப காலமாக தெரு நாய்கள் குழந்தைகளை துரத்தி கடிக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது. அந்த வகையில், சென்னை கோயம்பேட்டில் கட்டப்பட்டுள்ள 'மெட்ரோ சோன்' என்ற மிகப்பெரிய குடியிருப்பு பகுதியில் 50க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இரவு, பகல் பாராமல் சுற்றித்திரிந்து அங்கு செல்பவர்களை விரட்டி கடிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த தெரு நாய்களை அப்புறப்படுத்தக் கோரி அந்த குடியிருப்பில் வசிக்கும் ஷபீனா பாத்திமா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று (ஜூலை 2) பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, தடுப்பூசி போடப்படாத இந்த நாய்களைப் பிடித்து செல்ல மாநகராட்சி ஊழியர்கள் வந்தாலும், சமூக ஆர்வலர் என கூறிக் கொள்ளும் சிலர் நாய்களைக் கொண்டு செல்ல ஊழியர்களை தடுப்பதாக தெரிவித்தார்.

மேலும், நாய்களை துன்புறுத்துவதாக கூறி ப்ளு க்ராஸ் அமைப்பு மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என மாநகராட்சி ஊழியர்களை அவர்கள் மிரட்டுவதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமெனவும் வாதிட்டார்.

மேலும், சென்னை மாநகராட்சி தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, மனுதாரரின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: பெண் தொழில்முனைவோருக்கான TN-RISE திட்டத்தை துவக்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்! - TN RISE

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.