ETV Bharat / state

கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடிய கார்; கோவை மாணவர்களுக்கு நேர்ந்த துயரம் - coimbatore car accident

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 18, 2024, 1:40 PM IST

coimbatore car accident:கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே கல்லூரி மாணவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்த கல்லூரி மாணவர்கள்
உயிரிழந்த கல்லூரி மாணவர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: திருப்பூர் வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த விஷால். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரை, திருப்பூரில் பள்ளியில் படித்த நண்பர்கள் நரேன், பிரணவ்,பூபேஷ், இப்ராகிம் உள்ளிட்டோர் கோவையில் சந்தித்துள்ளனர்.

இதனையடுத்து நண்பர்கள் 5 பேரும் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு காரில் மீண்டும் திருப்பூர் திரும்பியுள்ளனர். அப்போது கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் சுங்கச்சாவடியை தாண்டியவுடன் கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே இருந்த சுவர் மீது வேகமாக மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே விஷால் மற்றும் பூபேஷ் என்ற இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் காரில் பயணித்த நரேன், பிரணவ், இப்ராகிம் ஆகிய மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நரேன், பிரணவ் ஆகிய இருவரும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் இப்ராகிம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து தகவல் அறிந்த கருமத்தம்பட்டி போலீசார், உயிரிழந்த 2 மாணவர்களின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 'ப்ரொபஷனல் கில்லர்ஸ்'.. யார் இந்த கூலிப்படையினர்? எப்படி உருவாகிறார்கள்? விவரிக்கும் வழக்கறிஞர்!

கோயம்புத்தூர்: திருப்பூர் வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த விஷால். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரை, திருப்பூரில் பள்ளியில் படித்த நண்பர்கள் நரேன், பிரணவ்,பூபேஷ், இப்ராகிம் உள்ளிட்டோர் கோவையில் சந்தித்துள்ளனர்.

இதனையடுத்து நண்பர்கள் 5 பேரும் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு காரில் மீண்டும் திருப்பூர் திரும்பியுள்ளனர். அப்போது கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் சுங்கச்சாவடியை தாண்டியவுடன் கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே இருந்த சுவர் மீது வேகமாக மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே விஷால் மற்றும் பூபேஷ் என்ற இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் காரில் பயணித்த நரேன், பிரணவ், இப்ராகிம் ஆகிய மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நரேன், பிரணவ் ஆகிய இருவரும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் இப்ராகிம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து தகவல் அறிந்த கருமத்தம்பட்டி போலீசார், உயிரிழந்த 2 மாணவர்களின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 'ப்ரொபஷனல் கில்லர்ஸ்'.. யார் இந்த கூலிப்படையினர்? எப்படி உருவாகிறார்கள்? விவரிக்கும் வழக்கறிஞர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.